🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள்
5.3K posts

🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள்
@TrainUsers
This is to file passengers grievances about railways in and around Tamil Nadu. NOT OFFICIAL AC OF SR












The historic Coimbatore–Rameswaram overnight daily train via Kinathukadavu, Pollachi & Madurai must be restored! This vital route served the Kongu region for over 100 years, easing travel for devotees & boosting connectivity. Urging Hon’ble @AshwiniVaishnaw ji to reinstate it soon. #RailConnectivity #KonguRegion

சமீபத்தில், தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்தும், சில ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கூடுதல் நிறுத்தங்களை அறிவிப்பது தொடர்பாகவும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.@AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்திருந்தேன். அதன்படி, 1) பாலக்காடு- பொள்ளாச்சி MEMU (மின்சாரப் பயணிகள் ரயில்கள்) 2) மயிலாடுதுறை- காரைக்குடி பயணிகள் இரயில் 3) போத்தனூர்- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு இரயில் 4) திருநெல்வேலி- மங்களூரு விரைவு இரயில், ஆகிய நான்கு புதிய இரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், 1) மங்களூரு சென்ட்ரல்- ராமேஸ்வரம் விரைவு இரயில் திரூர், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும் 2) தாம்பரம்- ராமேஸ்வரம் விரைவு இரயில் பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும், 1) திருச்சி- காரைக்குடி பயணிகள் இரயில், வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும். 2) எம்ஜிஆர் சென்ட்ரல்- போடி விரைவு இரயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் நலனுக்காக கூடுதல் இரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.@AshwiniVaishnaw அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். @GMSRailway @RailMinIndia @MIB_India @PIB_India @NainarBJP

தமிழகத்தின் முக்கிய இரயில் நிலையங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களை இணைக்கின்ற வகையில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு இரயில்களை, வழக்கமாக இயங்கும் வகையிலான விரைவு இரயிலாக மாற்றுவது தொடர்பான கோரிக்கையை, மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன். அவ்வகையில், கொல்கத்தாவின் ஷாலிமார்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், ஹைதராபாத்தின் கச்சிகுடா-தூத்துக்குடி, ஹைதராபாத்-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி போன்ற இரயில் நிலையங்கள் இடையே இயங்கி வந்த சிறப்பு இரயில்கள், விரைவு இரயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது. தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டு வரும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்கள் தலைமையிலான மத்திய அரசிற்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.














