Adv. Abubacker ⚖️
7K posts

Adv. Abubacker ⚖️
@Adv_Abubacker
Advocate | Orator | Activist | politician | State Coordinator @ntkmaanavar |
முத்து நகர் Katılım Eylül 2014
350 Takip Edilen23.5K Takipçiler

இதுவும் தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில் (Population Ratio Based Calculation) பிற மூன்று மாநிலங்களுடன் ஒப்பிட்டால், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறது...
Aravind@NaanAravind
@youturn_in @Adv_Abubacker incorrect fact check 🤡 @Iyankarthikeyan நீங்க refer பண்ண table, cause wise suicide data 2023 அதே file ல 242 ஆம் பக்கம். table 2.7 refer பண்ணுங்க. தமிழ்நாடு 4 வது இடம். timesofindia.indiatimes.com/education/news…
தமிழ்

சான்று இல்லாம நான் பேச மாட்டேன் ராஜா...
இந்தா கவ்விக்கோ👇🏽👇🏽
#google_vignette" target="_blank" rel="nofollow noopener">indiatoday.in/education-toda…

youturn@youturn_in
“மாணவர்களின் உயிரை பறிக்கும் கல்வி அழுத்தம்? தமிழ்நாடு 2வது இடம் என உருட்டும் NTK அபூபக்கர்" ! #NTK | #Youturn | #Factcheck | @Adv_Abubacker
தமிழ்

10 ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் விசிக வுக்கு வெறும் 08 தொகுதிகள்!
நேற்று கூட்டணிக்குள் வந்த தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் + ஒரு ராஜ சபா!
தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் முஸ்லிம் லீக், CPI, CPIM, மதிமுக, ஆகிய கட்சிகளிடம் சீட்டுகளை பிடுங்கி, நேற்று கூட்டணிக்குள் வந்த தேமுதிகவுக்கு கொடுப்பது தான் கூட்டணி தர்மம் போல...
கொள்கை கூட்டணி😂😂

தமிழ்

தன்னைப் பார்க்க வந்த ஒரு இளைஞன் 19 நாட்களாக உயிருக்குப் போராடி இன்று செத்து போயிட்டான்!
அவனைப் பார்க்கவோ, அவன் கும்பதிற்கு ஆறுதல் சொல்லவோ, ஏன் ஒரு இரங்கல் வெளியிடக்கூட மனமில்லை!
ஆனால் வளைகாப்பு நிகழ்வுக்கு பம்பாய்க்கு போறான் துப்புகெட்ட பய...
உனக்கெல்லாம் அரசியல் ஒரு கேடா டா @TVKVijayHQ

தமிழ்
Adv. Abubacker ⚖️ retweetledi

மார்க்கத்தின் வழியாக மனிதத்தை வாழ்விக்க மகத்தான நன்னெறியினை மொழிந்த இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள், “இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை; உங்கள் உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான்” என்கிறார்.
மேலும், தம்முடைய அருள்மொழியில், “தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது; இப்பூவுலகில் நீங்கள் தரும் ஈகைதான் உண்மையான செல்வம். பூமியில் உள்ள உயிர்களிடம் நீங்கள் கருணை கொண்டால், விண்ணில் உள்ள இறைவன் உங்களிடம் கருணை கொள்வார்” என்றும் கூறுகிறார். “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்றும் தம்முடைய இறுதிப் பேருரையில் குறிப்பிடுகிறார்.
போற்றுதலுக்குரிய நபி பெருமானார் காட்டிய அத்தகைய அன்புவழி நின்று, அறநெறி பற்றி, ஐந்து முதன்மைக் கடமைகளில் ஒன்றாக, புனித ரமலான் மாதத்தில் இறைவனை எண்ணி உணவும், நீரும் துறந்து, உடலையும், உள்ளத்தையும் பண்படுத்தி, 30 நாட்கள் நோற்ற நோன்பு முழுமைபெறும் திருநாளாம், ‘இரம்ஜான் பெருநாளை’ பெருமகிழ்வோடு கொண்டாடும் எனதன்பு இசுலாமியச் சொந்தங்கள் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும், எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாவின் பேரருள் நிறையட்டும்; உங்களின் உளப்பூர்வமான நோன்பினையும், வழிபாட்டையும், வணக்கத்தையும் நற்கொடையையும், நற்செயல்களையும் இறைவன் ஏற்றுக்கொள்ளட்டும். இப்புனித நாள் உங்கள் இதயத்தில் அமைதியையும், வாழ்வில் மகிழ்ச்சியையும், குடும்பத்தில் அன்பையும் கொண்டுவரட்டும்.
இல்லாதவருக்கு ஈயும் இன்பத்திருநாளான, ஈகைப்பெருநாளைக் கொண்டாடும் இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


தமிழ்

நேற்று அண்ணன் சீமான் அவர்கள் வெளியிட்ட 'நாம் தமிழர் கட்சி - ஆட்சி செயற்பாட்டு வரைவு' குறித்த செய்திகள் இன்றைய நாளிதழ்களில்...
#Kalam2026

தமிழ்
Adv. Abubacker ⚖️ retweetledi

ஏன் நாம் தமிழர் | Why NTK ? | 8 Voices - One Ideology | A Political Talk Show | Arrowroots | Promo #whyntk #naamthamilarkatchi #arrowrootsnews #arrowroots
English
Adv. Abubacker ⚖️ retweetledi

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு – 2026
தரவிறக்கம் செய்ய
makkalarasu.com
#NTKManifesto2026
#நாம்தமிழர்_ஆட்சிவரைவு

தமிழ்
Adv. Abubacker ⚖️ retweetledi

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி களத்திலே தனித்து நிற்கிறது. இங்கே பல ஆண்டுகள் அதிகாரத்தைச் செலுத்தி நிறைய பணத்தைச் சேமித்து பதுக்கி ஒதுக்கி வைத்திருக்கிற மற்ற அரசியல் கட்சிகள் மறுபடி அந்தப் பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தைத் தக்கவைக்க போராடும். ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடிகள் 40 கோடிகள் என்று முதலீடு செய்து அந்தத் தொகுதிகளை விலைக்கு வாங்க பார்க்கும். இந்தச் சூழலில் இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற மகத்தான கனவோடு களத்திலே நிற்கிறோம் உங்கள் பிள்ளைகள்.
வாக்குக்குக் காசு கொடுக்கிற இந்த காலத்தில் ஒரு தொகுதியை வெல்ல 30 கோடிகள் முதலீடு செய்கிற ஒரு முதலாளி தன் லாப தேவைக்கு முதலீடு செய்வாரா? அல்லது மக்கள் சேவைக்கு முதலீடு செய்வாரா என்கிற கேள்வி அங்கே எழுகிறது. வாக்குக்குக் காசு கொடுக்கிற அந்த இடத்தில் தான் ஊழல் லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது என்பது உங்கள் பிள்ளைகள் எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை; உண்மையும் கூட. அந்த இடத்திலே சேவை செத்து போகிறது. இப்போது இதை மாற்ற வேண்டும் என்று ஒரு பெருங்கனவோடு உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து களத்திலே நின்று போராடி வருகிறோம். 30 கோடிகள் முதலீடு செய்கிற வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியிடுகிற நாங்கள் அந்த வட்டி காசைக் கூட செலவு பண்ண முடியாத நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை தன்னலமற்று உண்மையும் நேர்மையுமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்கத்தான் தொடர்ந்து உங்கள் பிள்ளைகள் இந்த களத்திலே நின்று வருகிறோம். இம்முறையும் அதே கனவோடு நிற்கிறோம்.
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே!
பசி-பஞ்சம், ஊழல்-இலஞ்சம், கொலை-கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை வளக்கொல்லை, மது-மதப் போதை இவை ஏதுமற்ற ஒரு புதியதொரு தேசம் செய்வோம்! மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்! என்ற முழக்கத்தோடு களத்திலே நிற்கிறோம்.
எப்போதும் போல எமது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களால் இயன்ற நிதியைக் கொடுத்து எங்களை வலிமைப்படுத்தி இருக்கிறீர்கள். இம்முறையும் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகளுக்கு எங்கள் பெற்றோர், எங்கள் உடன் பிறந்தோர் இனமாகவும் பணமாகவும் வலிமையாகவும் வளமையாகவும் நீங்களே நின்றிருக்கிறீர்கள் இம்முறையும் நிற்பீர்கள் என்று உங்கள் பிள்ளைகள் அன்போடு கேட்கிறோம்.
donate.naamtamilar.org/election_campa…
திரள்நிதி திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற உதவியைச் செய்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்திவிடுங்கள். களத்திலே நின்று நம் இன முன்னோர்கள் கண்ட கனவை வென்று முடிப்போம் என்கிற உறுதியைத் தருகிறோம்.
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
புரட்சி எப்போதும் வெல்லும்!
நம் வெற்றி அதைச் சொல்லும்!
நம் இலக்கு ஒன்றுதான்!
இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்

'காங்கிரஸ் பாஜக வின் B-Team' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கிறார் கேரள CPIM முதலமைச்சர் பினராயி விஜயன்!
இதுகுறித்து தமிழ்நாடு @tncpim கட்சியின் நிலைப்பாடு என்ன?
_________________________________
இந்தியா முழுமைக்கும் அதே காங்கிரஸ் கட்சி தான்!
இந்தியா முழுமைக்கும் அதே CPIM கட்சி தான்!
தமிழ்நாடு CPIM ராகுல் காந்தியை பாஜக எதிர்பாளராக முன்னிறுத்துகிறது!
கேரள CPIM ராகுல் காந்தியை பாஜக B-Team என்கிறது!
என்ன இவங்க கொள்கை!?🤔

தமிழ்






