ஜீயோ டாமின்
4.3K posts

ஜீயோ டாமின்
@Geodamin
|| பூவுலகின் நண்பன் || Structural Engineer ||

தமிழ் நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்கள்) சட்டத்தின்கீழ் (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023) காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்தை மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமெனக் கருதி ‘சிறப்புத் திட்டமாக' அறிவித்து அரசானை வெளியிட்டுள்ளது மாநில வருவாய்த்துறை. 2023ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டு வரப்பட்டதே பரந்தூர் விமான நிலையத்திற்காகத்தான் என்று பூவுலகின் நண்பர்கள் வைத்தக் குற்றச்சாட்டு இன்று உறுதியாகியுள்ளது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால் ஆகியன அமைந்துள்ள 100 ஹெக்டேருக்கு குறையாத நிலங்களைச் சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக ஒருங்கிணைத்து வாரிக்கொடுப்பதாகும். புவி வெப்பமயமாதல் தீவிரமடைந்திருக்கும் காலத்தில் இயற்கையான சூழலமைவுகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். மேற்கூறிய தகவல்களைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும். நீர்நிலைகளின் அழிவுக்கு வழிவகுக்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறோம். #Parandurairport @CMOTamilnadu @TThenarasu @TRBRajaa











