Murali Appas

1.8K posts

Murali Appas banner
Murali Appas

Murali Appas

@MuraliAppas

Film director, state secretary (media) in makkal needhi maiam

chennai, india Katılım Ağustos 2018
130 Takip Edilen11.2K Takipçiler
Murali Appas retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
The leak of #Jananayagan is not an accident - it is the result of systemic failure. Had due process been timely, we would not be here. Inordinate delays in certification created fertile ground for piracy. When legal access is stalled, illegitimate channels take over. Piracy is beyond politics; it is an attack on the art and artist itself. It endangers the work of hundreds of artists and technicians, and the investments of honest tax paying producers, exhibitors and theatre owners, all who sustain the cinema we love. Who protects the creator when the system fails? We need accountability, swift certification, strict enforcement, and real-time takedowns. I trust true lovers of cinema will unite and give a befitting response by watching the film legally in theatres, as you stood with me in the past.
English
590
7.5K
41.1K
1.2M
Murali Appas retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது. நாட்டையே அதிரச் செய்த இந்த அநீதிக்கு எதிராக, விடாமல் போராடிய ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தார், சாத்தான்குளம் ஊர்ப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்த சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் இழைத்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்பட வேண்டுமென்பதே என் நிலைப்பாடு. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரின் குடும்பங்களை எண்ணிப்பார்க்கிறேன். மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள்? போலீஸாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்களைப் பார்க்காமலே சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், இருவரும் மூச்சுத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது. அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம், நம்மை யார் என்ன செய்துவிட முடியும் எனும் துணிச்சலில் குற்றமிழைப்பவர்கள் எவராயினும், அவர் எத்தகைய செல்வாக்கு படைத்தவரெனினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
தமிழ்
319
897
2.9K
323.6K
Murali Appas
Murali Appas@MuraliAppas·
இதுதான் தோழமைக்குப்பொருள் @ikamalhaasan @maiamofficial @thirumaofficial
Thol. Thirumavalavan@thirumaofficial

கூட்டணி கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது இந்த அளவீடுகளில் வாக்குவங்கி வலிமை தான் முதன்மையானதாக அமைகிறது. பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் கூட்டணியில் இடப்பகிர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வரையறைகளுக்கு உட்படாத சில கட்சிகளை அவற்றின் சமூக அடையாளங்களை பின்னணியாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், கட்சிகளின் "கருத்தியல் வலிமை" ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது கசப்பான உண்மையாகவுள்ளது. தொகுதிப் பங்கீடு நடக்கிறபோது ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதி எண்ணிக்கைகள் எத்தகைய வரையறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்பது அவ்வப்போது நிலவும் அரசியல் சூழல்களைப் பொறுத்து அமைகின்றன. அத்துடன், கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் அணுகுமுறைகளைப் பொறுத்தும்; கூட்டணியின் தலைமை கையாளும் அரசியல் உத்திகளைப்பொறுத்தும் இடப்பகிர்வுகள் நிகழ்கின்றன. கூட்டணிக்குத் தலைமை வகிப்பவரின் நிலையிலிருந்து ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி அனைத்துக் கூறுகளையும் சீர்தூக்கிப் பார்த்து தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டியது கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சிக்குமுள்ள பொறுப்பாகும். கொள்கைப் பகையை வீழ்த்துவதும் கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்வதும் ஒவ்வொரு கட்சியின் கடமை. ஆனால், அந்தக் கட்சிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு வெற்றிக்கான உத்திகளை வகுக்கவேண்டியது தலைமைக்குரிய தவிர்க்கமுடியாத பொறுப்பாகும். கருத்தியல் வலிமையை இன்றியமையாத ஒரு அளவுகோலாகக் கொண்டு இடப்பகிர்வு உள்ளிட்ட அணுகுமுறைகளைக் கையாள வேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவையாகவுள்ளது. கருத்தியல் உறுதிப்பாடு கொண்ட , நம்பகத்தன்மை வாய்ந்த தோழமை சக்திகளை வலுப்படுத்துவதன் மூலமே கொள்கைப் பகையை இம்மண்ணில் வேரூன்ற விடாமல் தடுக்க முடியும். அத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட இடதுசாரி தோழமை சக்திகளை அரவணைப்பதில் கூடுதல் முன்னுரிமை அளிக்கவேண்டியதும் அவர்களை வலுப்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது. அதன்மூலம் ஒட்டுமொத்த கூட்டணிக்குமான நன்மதிப்பு மக்களிடையே பன்மடங்காகப் பெருகும். தற்போது நடந்தேறிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேவளையில் மதசார்பற்ற கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோமென்றும் அறிவித்துள்ளது. இது அக்கட்சி மற்றும் அக்கட்சித் தலைவரின் நாகரிகமான அணுகுமுறை என நாம் பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்குமோ என்கிற அச்சம் மேலிடுகிறது. தோழமை கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்ளவது அக்கட்சிக்குச் செய்யும் பேருதவியாகும். அதேவேளையில், தனிச் சின்னத்தில் போட்டியிடவிரும்பும் தோழமை கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல. அது அவர்களின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப் போட்டுவிடும். கூட்டணியின் தலைமை தோழமை கட்சிகளின் அத்தகைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே சனநாயகத்துக்கும் செலுத்தும் பெருமதிப்பாக அமையும். இந்த நெருக்கடியான சூழலில், மதவாத -திரிபுவாத-வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அதாவது அண்ணன் கமல்ஹாசன் அவர்களும் தங்கள் தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட 'வாக்கு வங்கி வலிமையும்', தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்குஎன்னும் உயரிய 'நன்மதிப்பு வலிமையும்'கொண்ட அண்ணன் கமல்ஹாசன் அவர்களை, 'அவ்வாறு விட்டு விடமாட்டோம்' என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும். தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் 'வெல்வோம் ஒன்றாக' என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும்! இவண்: தொல். திருமாவளவன், நிறுவனர்-தலைவர்,விசிக. (2/2)

தமிழ்
30
128
533
17K
Murali Appas
Murali Appas@MuraliAppas·
ஒவ்வாததை கடல் ஏற்றுக்கொள்வதில்லை @ikamalhaasan @maiamofficial
Cupid Buddha@CupidBuddha

ஞானமெனும் பெருஞ்சிங்கம் எறும்புகளைத் தின்பதில்லை... இறந்த பின் சிங்கத்தை எறும்புகள் உண்பதுண்டு... @ikamalhaasan கமல் ஹாசன் ஏன் ஒரு புதிய அரசியல் விதை - @CupidBuddha #KamalHaasan𓃵 #kamal

தமிழ்
15
26
107
12.9K
Murali Appas
Murali Appas@MuraliAppas·
இங்கே மது அருத்துபவர்கள் மதுவிலக்குக்கோரி போராடுவது ஜாதிப்பெருமிதம் கொண்டவர்கள் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாக பேசுவதும் இயற்கை. இதில் பார்த்திபன் என்ன பாக்யராஜ் என்ன. @rparthiepan @maiamofficial
தமிழ்
1
27
53
1.5K
Murali Appas
Murali Appas@MuraliAppas·
உங்க தலைவரின் தலைவரைத்தான் பயந்தாங்குள்ளின்னு சொன்னீங்களா ஆதவ் அர்ஜுன் சார் @rajinikanth @AdhavArjun94128 @maiamofficial
Murali Appas tweet media
தமிழ்
6
34
59
1.6K
Murali Appas retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
“சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது… இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்” சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை. பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை.
தமிழ்
1.4K
1.9K
8.5K
1M
Murali Appas retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
ஒருவர் பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா? அன்புடை நெஞ்சன், கமல் ஹாசன்.
தமிழ்
292
643
3.6K
221.8K
Murali Appas
Murali Appas@MuraliAppas·
இது ட்ரைலரும் இல்லை டீசரும் இல்லை பர்ஸ்ட் லுக் only. pls wait for விஸ்வரூபம் @ikamalhaasan @maiamofficial @PMOIndia
Murali Appas tweet media
தமிழ்
54
124
363
4.3K
Murali Appas
Murali Appas@MuraliAppas·
குருவி தலையில் பனங்காயை வைத்தது போல் @VanathiBJP தலையில் MLA பதவி. அதனால் அவருக்கு தலைகால் புரியவில்லை. நம் தலைவரின் தமிழும் புரியவில்லை. ஏப்ரலில் பிடரியில் தேர்தல் கொடுக்கபோகும் அடியில் எல்லாம் புரியும். அதுவரை அவரை அனுதாபத்துடன் பார்ப்போம். @ikamalhaasan @bjptamilnadu @maiamofficial
தமிழ்
34
144
438
9.8K
Murali Appas
Murali Appas@MuraliAppas·
சிலர் அலறுகிறார்கள். சிலர் பதறுகிறார்கள். சிலர் உளறுகிறார்கள் பற்றி எரிகிறது.. சிலர் அடிவயிறும், ஆழ்மனசும் அப்படியானால் நாம் சரியாக செயல்படுகிறோம் என்றே பொருள். தொடரட்டும் என் தலைவன் பணி திறக்கட்டும் தேசத்தின் புதிய வழி @ikamalhaasan @maiamofficial @PMOIndia
Murali Appas tweet media
தமிழ்
27
145
424
3.8K
Murali Appas
Murali Appas@MuraliAppas·
இந்த குரூப்பிற்கே இதுதான் வழக்கம். எதிர்த்து பேசினா தேசதுரோகிம்பாங்க ஆதரவா பேசலேன்னா 'A'Team பாங்க. அதுவும் அர்ஜுன் சம்பத்திற்கு புலம்புறதும் குழம்புறதும் வழக்கமான ஒன்று. @ikamalhaasan @maiamofficial @ArjunSampath11
News Tamil 24x7@NewsTamilTV24x7

கடந்த தேர்தலில் கமல்ஹாசன்.. இந்த தேர்தலுக்கு விஜய்... திமுகவின் 'A Team' விஜய் - அர்ஜுன் சம்பத் பேட்டி..! #Vijay #DMK #BJP #ArjunSampath #TNElection #Election2026 #TamilNews #Newstamil #NewsTamil24x7

தமிழ்
2
30
72
1.3K
Murali Appas
Murali Appas@MuraliAppas·
மய்யம் என்பது மக்கள் நலன். நம் தலைவர் மாநிலங்களவையில் கேட்ட முதலிரண்டு கேள்விகளும் மக்கள் நலன் சார்ந்த கேள்விகளே. யாரும் கவனத்தில் கொள்ளாமல் கடந்து சென்ற எத்தனால் பெட்ரோல் பின்விளைவுகளை பற்றிய கேள்விகள். நன்றி தலைவரே @ikamalhaasan @maiamofficial @nitin_gadkari
Kamal Haasan@ikamalhaasan

For many Indians, personal transport reflects aspiration and everyday progress. In my first Unstarred Question in the Rajya Sabha, I sought clarity on ethanol-blended fuels, its impact on vehicles, the withdrawal of E10 petrol, and consumer safeguards. These issues were addressed by the Hon. Minister of Road Transport & Highways @nitin_gadkari. The transition must remain informed, fair, and consumer-conscious.

தமிழ்
3
67
158
1.7K
Murali Appas
Murali Appas@MuraliAppas·
திருமதி.வானதி அவர்களே காணாமல் போன கட்சி தேர்தல் நெருங்கியவுடன் கனவுல வந்து பயமுறுத்துது போல. எதுக்கும் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கடைசியா ஒருதடவை சட்டமன்ற கட்டிடத்தை பார்த்துட்டு போங்க. @ikamalhaasan @maiamofficial @VanathiBJP @officeofvanathi @BJP4TamilNadu #KamalHaasan #MakkalNeedhiMaiam
தமிழ்
15
115
238
4.5K