M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
3.7K posts

M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
@OfficeofminMRV
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர்.

















மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டுதலின் படி,இன்று புது தில்லியில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுடனும்,நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் திரு.மு.தம்பிதுரை அவர்களுடனும் இணைந்து, மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து, நம் கரூர் மாவட்ட மக்களின் கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து நேரில் எடுத்துக்கூறி கோரிக்களை உடனடியாக நிறைவேற்றித் தர கோரினேன். 1. மதுரை,கரூர்,சேலம் வழியாக சென்னைக்கு அல்லது கோவை,கரூர்,திருச்சி வழியாக சென்னைக்கு புதியதாக வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 2. வண்டி எண்- 20671 மதுரை to பெங்களூர், மறுமார்க்கம் வண்டி எண்-20672 பெங்களூர் to மதுரை வந்தே பாரத் வண்டியானது மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர்,சேலம்,பெங்களூர் சென்று வருகிறது. இதனை மதுரை,திண்டுக்கல், கரூர்,நாமக்கல்,சேலம் வழியாக பெங்களூர் இயக்க வேண்டியும் மறுமார்க்கம் பெங்களூர், சேலம்,நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மதுரை செல்ல கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 3. வண்டி எண்:22153 சென்னை- சேலம்,வண்டி எண்- 22154 சேலம்-சென்னை மேற்கண்ட இரயில் கரூர் வரை நீட்டிப்பு அறிவிப்பு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.இதனை கரூர் வரை நீட்டிப்பு செய்து தர வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 4. வண்டி எண்- 20601, மறுமார்க்கம் வண்டி எண்-20602 சென்னை சென்ட்ரல் to போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ்,கரூர் இரயில் நிலையம் வழியாக வாரம் மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனை தினசரி வண்டியாக இயக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.





























