𝑾𝒓𝒊𝒕𝒆𝒓 𝑺𝒂𝒌𝒕𝒉𝒊
8.4K posts

𝑾𝒓𝒊𝒕𝒆𝒓 𝑺𝒂𝒌𝒕𝒉𝒊
@Writer_sakthi
𝑾𝒓𝒊𝒕𝒆𝒓 | 𝑵𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍𝒊𝒔𝒕 | 𝑺𝒐𝒄𝒊𝒂𝒍 𝑴𝒆𝒅𝒊𝒂 𝒊𝒏𝒇𝒍𝒖𝒆𝒏𝒄𝒆𝒓.
Virudhunagar, Bharat 🔥 Katılım Eylül 2019
2.1K Takip Edilen3.2K Takipçiler
𝑾𝒓𝒊𝒕𝒆𝒓 𝑺𝒂𝒌𝒕𝒉𝒊 retweetledi

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக உதகமண்டலம் தொகுதியில் களம் காணும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் திரு.போஜராஜன் அவர்களை ஆதரித்து, இன்றைய தினம் நடைபெற்ற, மாபெரும் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினேன்.
2021 சட்டமன்ற தேர்தலின் போது, 511 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த திமுக, 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் கூட வெறும் 70 தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால், முதல்வர் @mkstalin அவர்கள், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக வாய் கூசாமல் பொய் பேசி வருகிறார்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகாலம் இருண்ட ஆட்சியை கொடுத்த திமுகவை, மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர தமிழக மக்கள் விடமாட்டார்கள். படுகர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினர் அந்தஸ்து கிடைத்திட திமுக அரசு எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் வருகிற மே 4 ஆம் தேதி, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, படுகர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்தை பெற்று தர தேசிய ஜனநாயகக் கூட்டணி உரிய நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதி.
காட்டாட்சியை கட்டவிழ்த்து, உதகமண்டலத்தின் வளர்ச்சியை முடக்கிய திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட, வரும் 23 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.போஜராஜன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் உதகை மக்கள் வெற்றிப்பெற வைப்பார்கள் என்பது உறுதி.
இந்நிகழ்வில், @BJP4TamilNadu நீலகிரி மாவட்ட தலைவர் அண்ணன் திரு. தருமன் அவர்கள், முன்னாள் மாவட்ட தலைவர் திரு. மோகன்ராஜ் அவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




தமிழ்
𝑾𝒓𝒊𝒕𝒆𝒓 𝑺𝒂𝒌𝒕𝒉𝒊 retweetledi

மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல் கேபிளைத் திருடி வளர்ந்த சன் தொலைக்காட்சி.
கேந்திர வித்தியாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பணியாளர்கள், பணியிட மாற்றம் பெறும்போது, அவர்கள் குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவே. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதால், வெவ்வேறு மொழிகள் அங்கு கற்றுக் கொடுக்கப்படுவது இயல்பு. அங்கு பயிலும் மாணவர்களின் விருப்ப மொழிக்கேற்ப, தமிழ் உட்பட, அனைத்து மொழிகளுக்கும் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். இத்தனை ஆண்டு காலமாக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கேந்திர வித்தியாலயா பள்ளியில் இடம் கோரி பரிந்துரைக் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழகத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களே இல்லை என்று பொய்யான செய்தி வெளியிட்டிருந்த கேபிள் திருட்டு சன் தொலைக்காட்சி, தற்போது, 31 தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்ற உண்மை வெளிவந்ததும், அவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று மழுப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், சுமார் 10,000 தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சன் தொலைக்காட்சியின் கூற்றின்படி, அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் இல்லையா? அவர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கவில்லையா? திமுக கூறும் தமிழகத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில், இவர்கள் இல்லையா?
தமிழகத்தில், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வகுப்பறையில் தமிழில் பேசினாலே அபராதம் விதித்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் போலியான தமிழார்வத்தைக் காட்டி, யாரை ஏமாற்ற முயல்கிறது இந்தத் திருட்டு கும்பல்?
Sun News@sunnewstamil
#BREAKING | தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை என அண்ணாமலை ஒப்புதல். #SunNews | #Annamalai | #KendriyaVidyalaya
தமிழ்

போதும் சாமி.!
5 வயது குழந்தை முதல்
70 வயது பாட்டி வரைக்கும் பதுகாப்பு இல்லாமல் தினந்தோறும்
பாலியல் வன்கொடுமை நடந்து தலைப்பு செய்தியாக வந்தது போதும்.
ஒரே ஒரு தலைப்பு செய்தியை தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
#Breaking திமுக படுதோல்வி.!

தமிழ்
𝑾𝒓𝒊𝒕𝒆𝒓 𝑺𝒂𝒌𝒕𝒉𝒊 retweetledi
𝑾𝒓𝒊𝒕𝒆𝒓 𝑺𝒂𝒌𝒕𝒉𝒊 retweetledi

Stretch, Sweat & Smash! 🏸
Nothing like a good game of badminton; glad to have Hon MoS (I/C) Thiru @arjunrammeghwal avl join us in Coimbatore.




English

அண்ணாமலை என்ற ஒற்றை மனிதற்காக ஜீரணித்துக்கொள்ள முடியாத பல விஷயங்களை கடந்து செல்ல வேண்டிய சூழல்.
அண்ணாவின் அன்பிற்கும் பாசத்திகிற்கும் ஈடு எதுவுமே அரசியலில் இல்லை.
@annamalai_k

தமிழ்

என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! @AnanthAyyasamy
நாளைய சட்டமன்ற உறுப்பினர்❤️
#Thenkasi #Vasuthevanallur

தமிழ்
𝑾𝒓𝒊𝒕𝒆𝒓 𝑺𝒂𝒌𝒕𝒉𝒊 retweetledi

அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பேராசிரியர் மீது வந்துள்ள குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய கல்வி நிறுவனங்களிலேயே, தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடப்பது துரதிருஷ்டவசமானது மற்றும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சுமார் இரண்டு ஆண்டுகளாக, பேராசிரியர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாக, மாணவி புகார் கூறியிருக்கிறார். மேலும் பல மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பாதுகாப்பான முறையில், அவரது பாடப்பிரிவு மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு, தமிழக காவல்துறைக்கு உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மாணவியின் கோரிக்கையை ஏற்று, அவரது வகுப்பு மாணவியர் அனைவரிடமும், ரகசியமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும், பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பேராசிரியர் குற்றம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளான போது, உயர்கல்வித்துறை அமைச்சர், அனைத்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார். ஆனால், அதே காலகட்டத்தில், மேலும் பல மாணவிகள், பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள, 'பாலியல் தொல்லை தடுப்பு மற்றும் புகார் விசாரணைக் குழு' (PoSH) உண்மையில் செயல்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
இரண்டு ஆண்டுகளாக ஒரு மாணவி பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். மேலும் பல மாணவிகள், பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று புகார் எழுந்துள்ளது. இவற்றைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்தக் குழு என்ன செய்து கொண்டிருக்கிறது? தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கோவி.செழியன் பொதுமக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில் காவல்துறை செய்த தவறுகளை, மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை கலந்த வேண்டுகோளை, தமிழக காவல்துறைக்கு வைத்துக் கொள்கிறேன்.
கல்வி கற்க வரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசு மற்றும் கல்வி நிலைய நிர்வாகங்களின் கடமை. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
பாலியல் சீண்டலுக்கு உள்ளானவர், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மாணவிகள் தயங்காமல் முன்வந்து புகார் அளிக்க வேண்டும். உங்கள் துணிச்சலே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும்.
தமிழ்

@NaMo_Bharathan @Kattaerunbu_bjp @katuva7 @ambi7519 @Maha_Periyavaa @BKannigaa @aghathiyar @Dharmic_Jana இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜி
தமிழ்

இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் 🙏❤️👍👌
@Kattaerunbu_bjp @katuva7 @ambi7519 @Maha_Periyavaa @BKannigaa @aghathiyar @Dharmic_Jana

தமிழ்

இதுலயும் இந்த அதிமுகவின் திருமாவளவன் @NainarBJP
ரொம்ப மோசம் சார்.
MLA வாக இருக்கும் போதே MP க்கு போட்டியிடுவாராம்.
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️@Pulsar220_
ஹேலோ .@NainarBJP .@VanathiBJP .@DrTamilisai4BJP .@DrLMurugan MLA தேர்தல் வந்தாலும், MP தேர்தல் வந்தாலும் நீங்க மட்டும் தான் வேட்பாளரா? இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவே மாட்டீங்களா? அப்புறம் என்னடா Party with Difference, மயிரு with Difference-னு பெருமை கூந்தல் உங்களுக்கு.? 😡
தமிழ்
𝑾𝒓𝒊𝒕𝒆𝒓 𝑺𝒂𝒌𝒕𝒉𝒊 retweetledi

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திர தேர்த் திருவிழா, பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஆன்மிக மரபாகும்.
இந்த ஆண்டு, பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு, வரும் மார்ச் 29 அன்று தேர்த்திருவிழா நடைபெறவுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரி, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து, தடை விதித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் கடும் கண்டனத்துக்குரியது.
ஆட்சி போகும் தருவாயிலும், பக்தர்கள் மனம் புண்படும்படி, நூற்றாண்டுகள் பழமையான பங்குனி உத்திர தேர்த்திருவிழாவைத் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது, சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
உடனடியாக தேரோட்டம் தடையின்றி நடைபெறத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்

@Madeshjournali1 அப்போ சசிகலா யாருன்னு நீங்களே சொல்லிருங்க மாதேஷ். எடப்பாடி உஷாரா இருந்துக்கட்டும்.
தமிழ்

கிராமங்களை காட்டிலும், நகரங்களில் தான் திமுக அலை அதிகம் விசுகிறது.
யப்பா என்னா நாத்தம், எங்க பாத்தாலும், குப்பை, கழிவு நீர் அல்லாமல் திமுக தேங்கி கிடக்கிறது.
Madhavi Sri - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Srimukhi_02offl
கிராமங்கள் தோறும் திமுக அலை மட்டுமே வீசுகிறது..... ஐயா புகழேந்தி அய்யா ஒட்டுமொத்த மக்களின் மனதை வென்று விட்டீர்கள்.... கண்டிப்பாக 200+ அடிப்பது உறுதி..💪💪💪💪💪
தமிழ்
𝑾𝒓𝒊𝒕𝒆𝒓 𝑺𝒂𝒌𝒕𝒉𝒊 retweetledi

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை.
குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.
பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin, இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ்

Breaking | MNM | KamalHaasan | கமல் எடுக்க போகும் முடிவு.. மநீம அவசர ஆலோசனை
#MNM #Kamal #KamalHaasan #TNElections
தமிழ்
𝑾𝒓𝒊𝒕𝒆𝒓 𝑺𝒂𝒌𝒕𝒉𝒊 retweetledi

இன்றைய தினம் மாலை, கோவையில், திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
@EPSTamilNadu @NainarBJP @SPVelumanicbe @VanathiBJP
#SaveWomenFromDMK
தமிழ்




