Yuvaraj V retweetledi

சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகின்றன. சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் கவனத்தில்கொண்டு இந்த அறிக்கைகள் உருவாக்கப்பட்டாலும், பெண்களின் சில பிரிவினர் மீது போதுமான கவனம் அளிக்கப்படுவதில்லை என்ற கருத்து நிலவுகிறது.
அந்தப் பிரிவினரின் குரல்களையும் ஒலிக்கச் செய்யும் வகையில், அவர்களின் கோரிக்கைகளைப் பிரதிபலிக்கும் ஓர் அறிக்கையை தயாரித்திருக்கிறது பிபிசி தமிழ்.
இந்த தேர்தல் அறிக்கை சென்னையில் நடந்த 'மகளிர் குரல்' கருத்தரங்கின்போது வெளியிடப்பட்டு அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பெண்களின் பிரச்னைகளை அவர்களே கூறும் வகையில் தயாரிக்கப்பட்ட காணொளிகள் இவை.
இவை 'மகளிர் குரல்' நிகழ்ச்சியின் போது அரங்கில் இருந்த பார்வையாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் திரையிடப்படப்பட்டு அதையொட்டிய கருத்துகளை எதிரொலிக்கும் விவாத அமர்வுகள் நடைபெற்றன.
விவாதங்களின் இணைப்பு bbc.in/4v0nWWW
தமிழ்








