Outis
22.5K posts







ஈழத்தில் எத்தனையோ தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அவர்களை அழைத்து சீமான் பற்றி கேட்டு அறியாமல் அர்ச்சுனாவை அழைத்து அர்ச்சுனாவிற்கு சீமான் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியை செய்தியாக வெளியிடுவது என்பது முட்டாள்தனம்!!

1. ஈழத்தில் 2009 க்கு பின் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் பலவாறு பிளவுபட்டு நிற்கிறார்கள் அவர்களை ஒன்று திரட்ட ஒரு அறிக்கை விடவில்லை. 2. ஈழத்தில் மக்கள் பலவாறு பிளவுபட்டு அரச தேசிய கட்சிகளுக்கும், தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லாதவர்களுக்கு வாக்கு செலுத்தி பாராளுமன்றம் அனுப்பி ஈழத்தமிழரின் தமிழ்தேசிய அரசியலை கேளிக்கூத்து, கேள்விக்குட்படுத்தும் போது ஒரு அறிக்கை விடவில்லை. 3. சீமான் தலைவரின் அழைப்பில் தமிழீழத்திற்கு வந்தார் என்பதே பச்சைப்பொய் அதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? 4. சீமானை விமர்சனம் வைப்பவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் அதிகாரத்தை உங்களுக்கு முதலில் யார் தந்தது. 5. 2009 க்கு பின் தமிழ்நாட்டில் ஒரு கட்சி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஈழத்தமிழரின் உந்துதலின் பெயரில் ஆக்கபூர்வமாக உதவிகளை செய்தார்கள் அது போல் ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை சொல்ல உங்களால் முடியுமா. ஈழத்தமிழர் பிரச்சினைகளையும், இனப்படுகொலைக்கான தீர்வையும் முன்னோக்கி நகர்த்துவார்கள் என்று எதிர்பார்த்த அமைப்பு இன்று இவ்வாறு மாறி நிற்கிறது, சீமானுக்காக அறிக்கை விடுகிறது. மேற்குறிப்பிட்டது போல் பல விடயங்களை வரிசைப்படுத்த முடியும் ஆனால் சீமான் தமிழ்நாட்டில் தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பது பலரின் அவா அதில் சில விமர்சனங்கள் வரும்போது அதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் ஆனால் அதை செய்பவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றும் அதிகாரத்தை யாரும் யாருக்கும் தர முடியாது!!

நா.த.கவும் சீமானும் தான் இன்றைய ஈழத்து இளைய தலைமுறைக்கு தமிழ்தேசியத்தை கடத்துகிறார்கள் என்று சில மடைச்சாம்பிராணிகள் சொல்லிக்கொண்டு திரியுதுகள் அந்த தற்குறிகளுக்கு வேணும் என்றால் சீமான் தமிழ்தேசியம் கற்பித்து இருக்கலாம் ஆனால் ஈழத்து இளைய தலைமுறைக்கு அல்ல. வடக்கு கிழக்கில் இப்போதும் இராணுவமுகாம்கள் அப்பிடியே உள்ளது, சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் நடந்து கொண்டு இருக்கிறது, மாவீரர்நாள், இனப்படுகொலை நினைவேந்தல்கள் நடந்து கொண்டு இருக்கிறது, அந்த நினைவேந்தல்களை பேரினவாதம் குழப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள், மனித புதைகுழிகளில் இருந்து மனித எச்சங்கள் தோண்டப்பட்டு கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஈழத்தமிழர்கள் தமிழ்தேசியத்தை சுவாசிப்பதனால் நடந்தவை. தமிழ்தேசியத்தை இன்னொருவர் விளங்கப்படுத்தி அதை கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் ஈழத்து இளைய தலைமுறையினர் இல்லை. ஒரு வேளை அவ்வாறு ஒரு சிலர் இருந்தால் சீமான் கற்பித்தாலும் அது காற்றோடு கரைந்து போகும் காரணம் அவர்களுக்கு தமிழ்தேசியம் புரிய வாய்ப்பே இல்லை!!!

21.05.2026 தமிழீழ - தமிழக உறவுகளுக்கிடையில் பிளவுகளை உண்டாக்கும் வசவாளர்களை அடியோடு அகற்றுவதற்கு ஒன்றிணையுமாறு உலகத்தமிழர்களை வேண்டுகிறோம். திமுக, கொங்கிரசு கூட்டணியின் சதி உள்ளடங்கலான உலக நாடுகளின் வலைப்பின்னல் ஆதரவுடன், 2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் சிறிலங்கா அரசினால் நடாத்தப்பெற்ற தமிழினப் படுகொலையானது உலகத்தமிழர்களின் அச்சாணியை உடைத்துவிட்டதென்றே கூறலாம். அதன்பின்னர் தமிழீழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் உளவியற் பலத்தை முழுதாக இழந்து நின்றனர். தேசியத்தலைவரின் அழைப்பையேற்றுத் தமிழீழம் வந்துசென்ற பல தலைவர்களுள், திரு.சீமான் அவர்களது முயற்சியினால் "நாம் தமிழர்" எனும் இயக்கம் உருவாக்கம்பெற்று, பின்னாளில் அது கட்சியாகக் கிளை பரப்பியது. "எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே" எனும் கோட்டொலியோடு, எள்ளளவும் விட்டுக்கொடுப்பின்றியும், தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை முழுமுதல் அடையாளமாகக்கொண்டும், எவருடனும் கூட்டணி இன்றியும் தனித்த அடையாளம் பெற்ற கட்சியாக நாம்தமிழர் கட்சி தேர்தல்களைச் சந்திக்கத்தொடங்கியது. சமவேளையில்; நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் தமிழின எதிரிகள் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கினர். தமிழகத்திலிருந்த மாற்றுக்கட்சிகளும், புலம்பெயர்ந்து வாழும் சில தமிழர்களுமே தொடக்கத்தில் இந்த இழிசெயலைச் செய்தனர். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியும், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களது மேடைப்பேச்சுகளும், தமிழீழ மாவீரர்களுக்கு முதன்மை தந்து வணங்கும் செயற்பாடுகளும் தமிழின எதிரிகளுக்கு அச்சமூட்டின. எவ்வகையிலாயினும் நாம் தமிழர் கட்சியை அழித்துவிடவேண்டுமென்ற எண்ணத்துடன் உலகெங்கிலுமிருந்து பலர் இயங்கத்தொடங்கினர். குறிப்பாக; கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர்; நாம் தமிழர் கட்சியை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளும் வசைச் சொல்லாடல்களும் அதிகரித்திருப்பதை அவதானிக்கிறோம். தமிழீழத் தேசியத் தலைவரையும் மாவீரர்களையும் நெஞ்சிலேந்தியபடி , தமிழின அழிப்பிற்கெதிராகவும் உலக மயமாக்கலுக்கு எதிராகவும் நின்றியங்கும் ஒரேயொரு பெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே இன்று இயங்கிவருகிறது. நாம் தமிழர் கட்சியானது வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்ததை , இலட்சியத்திலும் கொள்கையிலும் தோற்றுப்போய்விட்டதாகப் பொருள்கொள்ளக்கூடாது. தமிழகத் தேர்தலில் மக்களிடம் வாக்குகளைக் காசுகொடுத்து வாங்கவியலும். ஆனால் கொள்கையும் இலட்சிய உறுதியும் அவ்வாறல்ல; அவை தமிழர்களது மரபணுவிலிருந்தே தொடர்பவை ஆகும். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான திரு.சீமான் அவர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமிருந்து திரள்நிதி பெறுகிறார் என அவதூறுக்கூட்டங்கள் பரப்பும் குற்றச்சாட்டென்பது, ஒருவிதத்தில் சீமான் அவர்களது நேர்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே வெளிப்படுகிறது . தமிழகத்தில் எத்தனையோ அரசியற்கட்சிகளிடமிருந்தும், அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களிடமிருந்தும் கோடிக்கணக்கில் அவரால் நிதி பெறக்கூடிய வாய்ப்பிருந்தும் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தன் சொந்த மக்களிடமிருந்து கிடைக்கும் சொற்ப நிதியை வைத்துத் தனது அரசியற்பாதையைக் கட்டியெழுப்புவதென்பது உண்மையில் அசுர மனபலம் கொண்ட ஒருவராலேயே இயலும். அவ்வாறே, தவிபு கள் மீதான தடைக்குப் பின்னதாகவும், தேசியத்தலைவரையும் மாவீரர்களையும் நேசித்தபடியும், "தலைவர் பிரபாகரன் வாழ்க" என முழக்கமிட்டுக்கொண்டும், தமிழினப்படுகொலையை முரசறைந்தபடியும் அவர் வழிநடாத்துகின்ற அந்த மக்கள்திரள் என்றென்றும் தமிழ்த்தேசிய எழுச்சியின் அடையாளமே என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். உளச்சுத்தியுடனும், நேர்மையான அணுகுமுறையுடனும் நாம் தமிழர் கட்சியை நோக்குபவர்கள், நேர்மையான விமர்சனங்களைக் கூறுவார்களேயன்றி, ஒருபோதும் கட்சியின் இயங்குநிலைமீது அவதூறு பரப்பும் செயலைச் செய்யார். ஆனால், தமிழர்களாக இருந்தபடியே கவர்ச்சிக்கும் முறையற்ற வெற்றிகளுக்கும் பின்னால் ஓடுபவர்களும், தமிழின எதிரிகளின் அடிமைகளாக வாழும் நபர்கள் சிலருமாக , தமிழினத்தின் பலம் மேலெழும்போதெல்லாம் அதற்கெதிராகக் கூக்குரலிட்டு அவதூறுகளை வீசும் நடைமுறையைத் தொழிலாகக் கொண்டிருப்பார்கள். இது காலம் காலமாக தமிழினத்தில் விளையும் ஓர் கேடு. தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களைத் தமிழினத்தின் தலைவராக உளமார ஏற்று, அவ்வழியில் இயங்கிவருபவர்கள் அனைவருமாக ஒன்றிணைந்து நாம் தமிழர் கட்சி மீதான அவதூறுகளை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு அன்புடன் வேண்டுகிறோம். அவ்வாறே தமிழினத்தின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் நபர்களின் உரையாடல்கள், அவதூறுக் காணொளிகள், அவ்வாறான காட்சிகளைப் பரப்பும் ஊடகங்கள் மற்றும் இணையங்களை









😂😂, 🧔♂️ஆட்டிகள் ஆர்மி கேம்ப்ல் விழுந்த காச குனிஞ்சு பொறுக்கின கதைகள் கேட்டுருக்கேன், நல்ல விலாசமா நாங்கள் இலங்கையில் இருக்கம் என்று சிங்க கொடிக்கு வால ஆட்டி ஆட்டி சொல்வாங்களாம் அருண் சித்தார்த் போல😂, அது இருக்கட்டும் அந்த கையெழுத்து போட்டது உன்ன போல சில்லறை இல்லை என்பது தகவல்!







