Outis
22.2K posts






ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஜனாதிபதி அனுரகுமார, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை விசேட அதிதிகளுக்கான அரங்கத்திலிருந்து பார்த்தபோது, (அதில் தவறேதுமில்லை) அவரை தேர்ந்தெடுக்க பாடுபட்ட ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் மக்கள் வீதியோரத்து தொலைக்காட்சிகளில் அதே போட்டியைப் பார்த்தனர். (இது வழமையான ஓர் விடயமே!) ஆனால் தேர்தலுக்கு முன்பு, தோழர் அனுர வரும்போது, அவர் எல்லா இடங்களிலும் VVIPகளுக்கான வசதிகளைத் தடை செய்வார், இல்லையெனில் அவற்றைப் பயன்படுத்த மறுப்பார் என்று சிலர் நினைத்தார்கள். அப்படி நினைத்தவர்களுக்கு இலங்கையின் ஜனாதிபதிகளின் வரிசையில் அவரும் ஒருவர் என்பதை ஏற்றுக்கொள்ள கடினமாகத்தான் இருக்கும். அநுரகுமாரவையும் அரசாங்கத்தையும் வானலோகத்திலிருந்து வந்த உத்தமர்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பதை நிறுத்தி எல்லா அரசியல்வாதிகளிலும் உள்ள நல்லது கெட்டதுகளைப்போல அவரிலும் உள்ளவற்றை நாம் அறிந்து முட்டுக்கள் என்ற மோகத்திலிருந்து வெளியில் வரும்வரைக்கும் இவ்வாறு விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத தவறாகத் தெரியும், அதற்காக சரியை சரியென்றும், தவறை தவறென்றும் சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டு ஆதரவளிக்க முடியாது, அது மிகவும் ஆபத்தானது! ஆகவே அதுவரை, மாற்றம் என்பது நிலையான ஒன்றல்ல, அது பொய்யின் இன்னொரு வடிவம் என்பதை கசத்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நன்றி நமக்கம்.! (பதிவு - அருண்) சிங்களப்பதிவொன்றிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது! #CricketSrilanka #PakVsInd #T20WorldCupSL #Anurakumara #SLPolitics #Srilanka


















