Gov of India selling diesel at ₹51/litre to Muslims of Bangladesh and ₹92/litre to Hindus of India. 🤣
No one except Modi Ji could have pulled this off!!! 🥰
பெண்கள் அரசியல்படுத்தப்படுவதும், அவர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிப்பதும், ஜனநாயக அமைப்பில் எவ்வளவு முக்கியம் என்பதை முன்னிறுத்தி, "பெண்களின் சுயாதீன வாக்குரிமையும் ஜனநாயகமும்" எனும் தலைப்பில், நான் எழுதிய கட்டுரை, திராவிட முழக்கம் இதழில் வெளியாகியுள்ளது.
தோழர்கள் பார்வைக்கு👇🏾
இப்போது அரசியலுக்கு வருகிற நடிகர்கள், “என்னை முதல்வர் ஆக்குங்கள்; அப்போதுதான் நான் மக்களிடம் வருவேன்” என்று கூறுகிறார்கள்.
அதிகாரம் இருந்தால்தான் சேவை செய்வேன் என்பதல்ல அரசியல்;
அதிகாரம் இல்லாமலேயே மக்களுக்காக நிற்பதே உண்மையான அரசியல்
#நல்லக்கண்ணு #nallakannuayya#nallakkannu
“எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் - தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.
நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்!
சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் -
“சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களைத்
தூக்கினில் ஏற்றினாலும்
விட்டுப்பிரியாது – செங்கொடி
வீரம் குறையாது”
என்று தோழர் ஜீவா முழங்கியதைப் போல கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு.
கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை அவர்!
முத்தமிழறிஞர் கலைஞருடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர். பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில், தலைவர் கலைஞருடன் தோளோடு தோள் நின்று களமாடியவர்.
பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் தமது ஆட்சிக் காலத்தில் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருதை வழங்கிச் சிறப்பித்தார். நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தோழர் அவர்களுக்குத் தகைசால் தமிழர் விருதை வழங்கும் வாய்ப்பைப் பெற்றது எனது பெரும் பேறு!
எப்போதும் என்மேல் அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு உருவாக்கிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்றார். அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன்.
தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்!
“தான் வேறு, இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர்” என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது.
தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!
மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!
சாதி மதங்களுக்கு எல்லாம் சாட்டையடி கொடுத்தவர் #வள்ளலார்
அவர் மூட்டிய பெரு நெருப்பு சனாதன மதத்தை எரித்து விடும் என்று அஞ்சியே அவரையே பெரு நெருப்பில் தள்ளி கொன்று விட்டது சனாதன மதவாத கும்பல்.
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பட்டியலின மாணவர்களை பார்த்து "இன்னும் உங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லையா" என்று கிண்டலாக பேசிய பார்ப்பனப் பெண்
@idonashok மகிழ்ச்சி தோழர்
“சிகை கொற்றன் வர கண்ட”
முக்கிய இடங்களில் வழிப்போக்கனின் பதிவுச் செய்ய எகிப்திய அரசு விட்டிருக்காது.
அக்காலத்தில் இதுபோன்று பதிவுச் செய்ய அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். யாருக்கும் தெரியாமல் எழுதிருக்க வாய்ப்பில்லை.
தமிழன்டா எந்நாளும்..!
எகிப்து நாட்டில் மன்னர்களின் கல்லறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு. 30 மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் அங்கு கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதில் “சிகை கொற்றன்" என்ற தமிழ்ப் பெயர் இடம்பெற்றுள்ளது.
"இதனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வணிகர்கள் எகிப்து நாட்டுக்கு சென்றதும் அங்கு நீண்டநாள் தங்கியதும் நிரூபணமாகியுள்ளது" சென்னையில் நடைபெற்று வரும் தொல்லியல் துறை பன்னாட்டுக் கருத்தரங்கில் சுவிட்சர்லாந்து பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் தகவல்
#Egyptpyramid#PyramidResearch#TamilBrahmiLetters#ThanthiTV