Naga TVK
5K posts









women's safety >>> non-veg three times a month

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்தை முடக்கும் செயல்களில் சென்னை மாநகர காவல் ஆணையர் தொடர்ந்து ஈடுபட்டுவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நேற்று சென்னையில் கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மாலை 2 மணியிலிருந்து 6 மணிவரை அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் முதலில் நான்கு மணிநேரம் அனுமதி கொடுத்திருந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. அருண் அவர்களின் அழுத்தத்தாலும் மிரட்டலாலும் அடுத்த ஒருமணி நேரத்தில் அது ஒரு மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. கழகத் தலைவர் அவர்கள் பிரசாரம் செய்யக்கூடாது என்றே இதனைத் திட்டமிட்டுச் செய்துள்ளனர். தமிழக மக்களின் பேராதரவு பெற்ற ஒரு தலைவருக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் ஜனநாயக நிலை இங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது. நமது கழகத் தலைவர் அவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள பேராதரவைக் கண்டு தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது தீயசக்தி திமுக. 'நமது தலைவரை எப்படியாவது முடக்கிவிட வேண்டும்; மக்களைச் சந்திக்காமல் செய்துவிட வேண்டும்' என்ற நோக்கத்தில் தேர்தல் நடத்தை விதிகளையும் ஜனநாயக உரிமைகளையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் மூலம் சதிச்செயல்களில் ஈடுபட்டுவருகிறது திமுக. ஏற்கனவே, இதனை தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து கழகத் தலைவர் அவர்கள் முறையிட்டுள்ளார். தொடர்ந்து, சட்டப்படி ஜனநாயக வழியில் நமக்கான பிரசார உரிமையை மீட்டெடுப்போம். நமக்கு எதிரான சதிச்செயல்களை முறியடிப்போம். அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் போகும் சர்வாதிகாரத்தனத்தில் இறங்கியுள்ள திமுக-வின் தீய செயல்களை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் மக்களாட்சி வாக்கு மூலம் அதற்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். #DMKScaredOfTVK


























