கபிலன்
42.5K posts

கபிலன்
@_kabilans
ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்
Earth Katılım Haziran 2010
159 Takip Edilen36.2K Takipçiler

வினோபாபவே என்ற காந்தியடிகளின் முதன்மை சீடர் கால்நடை பயணமாக திருச்சி மாவட்டம் வந்த போது பெரியாரை சந்திக்க விரும்பினார், அவருடன் பெரியார் திருச்சியில் நேசனல் கல்லூரியில் சந்தித்து பேசினார்
அவர் சாதி ஒழிப்பில் பெரியாருடன் ஒத்த கருத்து கொண்டவர், ஆனால் கடவுள் மறுப்பை ஏற்காதவர், கடவுள் புராண ஒழிப்பு வேலையை நீங்கள் விட்டுக் கொடுத்தால் சாதி ஒழிப்பு பணியில் உங்களோடு நிறைய பேர் வரக்கூடுமே என்று கேட்டார் ?
பெரியார் அவரிடம் தன்னுடைய ஜாதி ஒழிப்பும் கடவுள் மறுப்பும் எப்படி இருக்கிறது என்பதை பின்வருமாறு விளக்கி கூறினார்
“ஒரு கடவுள் உண்டு என்கிறவர்களிடம் நான் தகராறுக்குப் போவதில்லை” ஆனால் என்னுடைய சாதி ஒழிப்பு பணிக்கு அந்த ஒரு கடவுள் தடையாயிருந்தாலும், அது கூட ஒழிந்து தான் ஆக வேண்டும் என்று பதில் சொன்னார் பெரியார் ♥️

தமிழ்

@DKShivakumar @TVKVijayHQ எங்க டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு காவிரி தண்ணீர் கொடுங்க ஆத்து மண்ணை எல்லாம் தண்ணீர் இல்லாமல் கடந்த திமுக ஆட்சியில் இழந்துட்டோம் 🙏🏽
தமிழ்

Spoke with Tamil Nadu Chief Minister Thiru Vijay and conveyed my congratulations. I extend my best wishes to him and look forward to continued cooperation for the progress and welfare of our states.
@TVKVijayHQ
English

மண்திட்டு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் மிகவும் கடினமான சூழலில் இன்னும் தமிழ்நாடு அரசின் மகளிர் உதவி தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் 🙏🏽
மண்திட்டு - பழனியில் இருந்து கொழுமம் சென்று அதன் பின் ஆண்டிபட்டி ஜே ஜே நகர் அதன்பின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருக்கும் கிராமம்
@CMOTamilnadu @TNDIPRNEWS @TVKVijayHQ
தமிழ்

முந்தைய அரசு செய்த ஊழல்களை எல்லாம் புதிய தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu கட்டாயம் விசாரிக்க வேண்டும்
இதை நீங்கள் பழிவாங்கும் நடவடிக்கை என்று பார்க்காமல் மக்கள் வரிப்பணத்தை சுரண்டிய நபர்களை தண்டிக்கும் நடவடிக்கை என்று தான் பார்க்க வேண்டும், காலம் காலமாக அதிமுகவின் ஊழலை திமுகவும் திமுகவின் ஊழலை அதிமுகவும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் தலையில் மிளகா அரைத்துக் கொண்டே இருக்கிறார்கள்
தமிழக வெற்றிக் கழகம் இந்த இரண்டு பேருக்கும் மாற்று என்று சொல்லி ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர்ந்தது, ஆகவே அடிப்படை அமைப்பு மாற்றத்துக்கு வழி சேர்க்கும் வகையில் ஊழல் குற்றத்தின் மீது வண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இது தான் மக்களின் கோரிக்கை, ஊழல் தான் எல்லா சிக்கலுக்கும் அடிப்படை அதை உணர்ந்து கொண்ட நீங்கள் தான் ஒரு பைசா கூட மக்கள் பணத்தை தொடமாட்டேன் என்று உறுதி வழங்கினீர்கள், ஆகவே நீங்கள் தான் அவர்களையும் நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்
@TVKPartyHQ

தமிழ்

தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன?
இனி நாம என்ன பண்ணணும்?
உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன்.
🔗: udanpirapinkural.in
தமிழ்

@DMKITwing இவனுக ஆட்சியில் தான் இந்த கடை இருந்திருக்கு ஆனால் கடை இன்னும் மூடப்படவில்லை என்று வெக்கமே இல்லாமல் போஸ்ட் போடுறானுக 🤣
தமிழ்

சில Mafia-க்கள் தரும் பொருளாதார ஆதாயங்களுக்காக பொய்களை மட்டுமே பரப்பி வரும் இத்தகைய நபர்கள் நேற்று தி.நகர் தண்டபாணி தெருவில் 40 வருடமாக செயல்பட்டு வரும் மதுபானக்கடையை முதலமைச்சர் மூடிவிட்டதாக Reels போட்டு இருந்தார். ஆனால் அந்த கடை இன்னும் மூடப்படவில்லை என்று அவரின் முகத்திரையை ஒருவர் கிழித்துள்ளார்.
அவர் கூறிய பொய்யில் மற்றொன்று என்னவென்றால் "40 வருடமாக", டாஸ்மாக் மதுபானக் கடைகள் விற்பனையைத் தொடங்கியதே 2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில்தான்.
#TVKLies
தமிழ்

@geethajeevandmk மக்களுக்கு அரசியல் புரிதல் இல்லாமல் இல்லை அவர்கள் தெளிவாக உங்களை தூக்கி வீசியுள்ளார்கள், மக்களை குற்றம் சொல்லும் நீங்கள் எல்லாம் எப்படி மக்கள் பணிக்கு தகுதியானவர் ?? பதவி என்பது மக்களுக்கு சேவை செய்ய தானே தவிர மக்களை கீழ்த்தரமாக விமர்சிக்க அல்ல.
தமிழ்

தூத்துக்குடி தொகுதி கழக உடன்பிறப்புகள் கவனத்திற்கு!
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளர்களின் தகுதியையோ, அவர்கள் கடந்த காலங்களில் செய்த மக்கள் பணிகளையோ பார்க்காமல், சரியான அரசியல் புரிதல் இல்லாமல் வாக்களித்ததால் தவெக வெற்றி பெற்றுள்ளது. மேலும் நம் தொகுதியில் அதிமுகவும், நாம் தமிழர் கட்சியும் டெபாசிட் இழந்துள்ளன. இதுதான் நம் தோல்விக்கு காரணம். ஆனால் ஒரு சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டாதவர்களை தேர்தல் பணி செய்யவில்லை என்று குறை கூறி பொய்ச் செய்தியை பரப்பி வருகின்றனர். அவற்றை யாரும் நம்ப வேண்டாம். நமது நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியை நன்றாக செய்தீர்கள். நன்றிகள்.
திமுக தோல்வியைக் கண்டு துவளும் இயக்கம் அல்ல. எனவே நமது உடன்பிறப்புகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல், இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். இனியும் எத்தனையோ வாய்ப்புகள் நமக்காக காத்திருக்கின்றன. அதை உணர்ந்து நமக்குள் எந்த பிரிவினைகளுக்கும் இடம் கொடுக்காமல் ஒன்றுபட்டு நின்று வரும் காலங்களில் கழகம் வெற்றி வாகை சூட கட்சிப் பணி செய்வோம்!
நன்றி!
P. கீதாஜீவன் M.Com., B.Ed.,
மாவட்டக் கழக செயலாளர் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக
தமிழ்




