R.B.Udhayakumar Deputy leader of Opposition Party

162 posts

R.B.Udhayakumar Deputy leader of Opposition Party banner
R.B.Udhayakumar Deputy leader of Opposition Party

R.B.Udhayakumar Deputy leader of Opposition Party

@rbudhayakumar_

Deputy Leader of Opposition-TN Legislative Assembly | MLA-Thirumangalam Constituency | Former Minister | State Secretery-AIADMK Puratchithalaivi Amma Peravai

Katılım Nisan 2025
3 Takip Edilen964 Takipçiler
Sabitlenmiş Tweet
R.B.Udhayakumar Deputy leader of Opposition Party
கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்த தின விழாவை #எளியோருக்கு_ஏற்றம்_தரும் #விழாவாக கொண்டாடுவது குறித்து கழக அம்மா பேரவை, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
தமிழ்
6
25
77
6.4K
R.B.Udhayakumar Deputy leader of Opposition Party retweetledi
Press Trust of India
Press Trust of India@PTI_News·
VIDEO | Madurai: “O Panneerselvam is dead for us after he joined DMK, cheated the party that made him CM for three terms”, says AIADMK leader RB Udhayakumar. #AIADMK #TamilNadu (Full video available on PTI Videos - ptivideos.com)
English
0
4
11
1.9K
R.B.Udhayakumar Deputy leader of Opposition Party retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்த நாளையொட்டி, கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு.@rbudhayakumar_ அவர்களுடைய ஏற்பாட்டின்பேரில் கழக புரட்சித் தலைவி பேரவை சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த 78 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, கழக நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு வழங்கினார்.மேலும் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில நலத்திட்ட உதவிகளை வழங்கினார். #என்றென்றும்_அம்மா
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
56
369
588
5.9K
R.B.Udhayakumar Deputy leader of Opposition Party retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
AIADMK - SayYesToWomenSafety&AIADMK@AIADMKOfficial·
நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #EPSfor2026 #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
தமிழ்
64
315
405
5K
R.B.Udhayakumar Deputy leader of Opposition Party retweetledi
Naalai Namadhe
Naalai Namadhe@NaalaiNamadheTN·
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் சட்டமன்றத்தில் பேசினால் நேரலை துண்டிக்கப்படுகிறது திமுகவினர் பேசினால் ஒளிபரப்பப்படுகிறது. ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் இருபக்க நாணயம் போல இருக்க வேண்டும் அப்போதுதான் தமிழகம் உயர்வு பெரும் என்பதை கூட ஸ்டாலின் அறியவில்லையா? -சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் #RBUdhayakumar | #AIADMK2026 | #epsfor2026cm | #dmkfailtn | #tnassembly2026 | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN | @rbudhayakumar_ @AIADMKOfficial @mkstalin
Naalai Namadhe tweet media
தமிழ்
0
2
4
75
R.B.Udhayakumar Deputy leader of Opposition Party retweetledi
Naalai Namadhe
Naalai Namadhe@NaalaiNamadheTN·
திமுக கூட்டணி கட்சிகளால் கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்றம் ஸ்டாலின் ஜால்ரா மன்றமாக மாறிவிட்டது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் #mkstalin | #DMK | #RBUdhayakumar | #tnassembly2026 | #EPSforCM | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN | @mkstalin @DMKITwing @rbudhayakumar_
Naalai Namadhe tweet media
தமிழ்
0
4
5
64
R.B.Udhayakumar Deputy leader of Opposition Party retweetledi
Naalai Namadhe
Naalai Namadhe@NaalaiNamadheTN·
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு, எடப்பாடியார் குறித்து மிகவும் அவதூறு பரப்பும் விதமாக பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம். #Virudhunagar | #MKStalin | #DMK | #DMKFailsTN | #RBUdhayakumar | #Kanimozhi | #UdhayanidhiStalin | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN | @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @rbudhayakumar_
Naalai Namadhe tweet media
தமிழ்
0
1
4
137
R.B.Udhayakumar Deputy leader of Opposition Party
கடந்த மூன்று ஆண்டுகளாக உண்மை நிலையை உரக்கச் சொல்ல மறுத்த காரணத்தால் தமிழகத்தில் ஆளுநர் உரை இல்லை சபாநாயகர் உரையாகத்தான் உள்ளது பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே வெற்றி பெற்று விடுவோம் என ஸ்டாலின் கனவு காண்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு மதுரை அன்னை தமிழுக்காக தன் உயிரை நீத்த வீர தியாகிகளின் கனவை நனவாக்கியது அதிமுக தான், புரட்சித்தலைவர் மதுரையில் உலக தமிழ் சங்கத்தை துவக்கி வைத்தார் முதன்முதலாக தமிழ் மொழிக்காக பல்கலைக்கழகத்தை புரட்சித்தலைவர் உருவாக்கினார், புரட்சித்தலைவி அம்மா உலகத் தமிழ் சங்க கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கினார், அதேபோல் எடப்பாடியார் உலகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 50 லட்சம் ரூபாயை நிதியாக தமிழ் அறிஞர்கள் கேட்டு கோரிக்கை வைத்தனர் அப்போது தமிழ் என்று சொல்லி தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் அதை பத்து லட்சம் ரூபாயாக தவணை முறையில் தருகிறேன் என்று கூறினார்.இதனை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்த பொழுது ஒரே தவணையாக 50 லட்சம் ரூபாய் வழங்கினார் . அண்ணா இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தினார், ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை புரட்சித்தலைவர் மதுரையில் நடத்தினார் ,எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டை தஞ்சையில் அம்மா நடத்தினார். திமுக ஆட்சியில் ஒருமுறை கூட உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியது கிடையாது. இன்றைக்கு திமுக அரசு பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே வெற்றி பெற்று விடும் என்று கனவு காண்கிறார்கள். வாழ்க்கை முழுவதும் பொய்யாக பேசி மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள் அது ஒருபோதும் நடக்காது. தங்களுக்கு இயலாமையை மறைக்க விளம்ப வெளிச்சத்தால் மணிமகுடம் சூட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள். சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரையில் உண்மை நிலையை உலகிற்கு சொல்ல மறுத்த காரணத்தால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஆளுநர் உரை புறக்கணிக்கப்பட்டு சபாநாயகர் உரையாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மந்திரத்தால் மாங்காய் காய்க்கும் என்று நினைக்கிறார்கள் . இன்றைக்கு திமுக அரசின் வேதனையை, உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காட்டு வகையில் கருத்துக்கள் கூட சொல்ல முடியவில்லை. ஆண்டவன் கருத்து சொன்னாலும், ஆளுநர் கருத்து சொன்னாலும் அவர்களின் பதவிகளை நீக்க தீர்மானத்தை கொண்டு வருகிறார்கள். பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த வழியும் கண்டதாக தெரியவில்லை, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி கூறினால் நீதிபதியின் பதவியை நீக்கம் செய்ய வேண்டும் என்று அச்சுறுத்துகிறார்கள் .உண்மை நிலையை மக்களுக்கு எடுத்து சொன்னால் ஆளுநர் பதவி நீக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். மத்திய அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி கொடுத்தால் அந்த திட்டத்தை முடக்கி விட்டார்கள் என தீர்மானத்தை போடுகிறார்கள். ஆனால் இதே திமுக தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம், ஊதியத்தை உயர்த்துவோம் என்று கூறினார்கள் அதை செய்யவில்லை. தற்போது காலத்துக்கு ஏற்றவாறு சட்டங்கள், திட்டங்களை சீரமைத்து அதை வடிக்கிறபோது அதில் பொய்யான பிரச்சாரத்தை பரப்புகிறார்கள். மத்திய அரசிடம் முரண்பாடு காரணமாக தேர்தல் வாக்குகளை வைத்து தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள் மக்கள் நலனில் திமுக ஒருபோதும் அக்கறை செலுத்தவில்லை. தற்போது முதலமைச்சர் பதில் உரையில் மாநாடு நடத்தியதையும், மாவட்டங்களில் சுற்றி வந்ததையும் சாதனையாக கூறுகிறார்கள் எது சாதனை, எது வேதனை என்று 2026 தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள் அதில் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சியை மக்கள் மலர செய்வார்கள். ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் பரப்புரையாக மதுராந்தகத்தில் எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி மலர செய்யும் வகையில், பாரதப் பிரதமர் சிறப்புரையாற்றி இந்த கொடுங்கோல் ஆட்சியிடம் மீட்க வேண்டும் என்று கூறினார். ஆகவே இந்த வீரவணக்க நாளில் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர நாம் அனைவரும் சூளுரை ஏற்போம் என கூறினார்.
தமிழ்
0
7
24
313
R.B.Udhayakumar Deputy leader of Opposition Party retweetledi
Naalai Namadhe
Naalai Namadhe@NaalaiNamadheTN·
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர்க்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை மறந்து விட்டாரா ஸ்டாலின் ? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் #Madurai | #AIADMK | #Rbudhayakumar | #MKStalin | #DMKFailsTN | #Jallikattu | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN | @rbudhayakumar_ @AIADMKOfficial @mkstalin @DMKITwing @Udhaystalin
Naalai Namadhe tweet media
தமிழ்
0
7
6
189
R.B.Udhayakumar Deputy leader of Opposition Party
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் வீதியில் போராடி வருகிறார்கள் அதற்கு அக்கறை காட்டாமல் மாநாடுகளுக்கு ஸ்டாலின் அக்கறை செலுத்துகிறார் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகமே கருணாநிதி விலாசமாக மாறிவிடும் மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் எச்சரிக்கை மதுரை இன்றைக்கு தமிழக மக்களிடத்தில் நம்பிக்கை இழந்த அரசாகதிமுக அரசு உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருகிறார்கள். மக்கள் வரிப்பணம் முழுமையாக மக்களுக்கு சேர்ப்பதில் கடைபிடிக்கவில்லை மக்கள் வரிப்பணத்தில் பாரபட்சத்துடன் திட்டங்களை ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் ஆனால் வாக்களிக்க கூடிய கட்சிக்காரர்கள் மட்டும் வரிப்பணத்தை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் திட்டங்களில் பாரபட்சம் இல்லாமல் வரிப்பணத்தை செலவு செய்வதுதான் அரசின் ஜனநாயக இலக்கணம் அதுதான் மரபு அதுதான் மக்களின் நம்பிக்கையை உருவாக்கும். இங்கே கடை தேங்காய் எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல் மக்கள் வரிப்பணத்தை கட்சிக்காரர்களுக்கும், தங்களுக்கு வாக்களிப்பவர்களை மட்டும்தான் தேடி பார்த்து விதிகளை திருத்தி ஆயிரம் ரூபாய் திமுக அரசு கொடுப்பதாக மக்களிடம் புகார் எழுந்துள்ளது. தேர்தல் வரும் போது தான் மக்களின் ஞாபகம் ஸ்டாலினுக்கு வரும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மகளிர் க உரிமை தொகை அறிவித்தார் ஆனால் அந்த திட்டத்தில் உடனே செயல்படுத்தவில்லை. எடப்பாடியார் சட்டமன்றத்தில், மக்கள் மன்றத்திலும் அழுத்தம் கொடுத்த காரணத்தினால் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து செயல்படுத்த தொடங்கினார். இந்த திட்டத்தில் பாரபட்சமாக செயல்படுவதாக தொடர்ந்து எடப்பாடியார் குற்றச்சாட்டி வருகிறார். அரசின் வரிப்பணம் அனைவருக்கும் வழங்க வேண்டும் என ஜனநாயகக் குரலை எடப்பாடியார் எழுப்பி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எண்ணத்துடன் மக்களைப் பற்றி சிந்திக்காமல் தேர்தலுக்காக திட்டங்களை விரிவுபடுத்தி ஸ்டாலின் அறிவிக்கிறார். இதை பார்க்கும் போதுஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்புஎன்ற நிலை உள்ளது. காலம்,காலமாக முதலமைச்சர் பதவியில் இருப்பவர்கள் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் செயல்படும் மரபைமீறி திமுக கட்சிக்காக முதலமைச்சர் என ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் கடந்த நான்கரை ஆண்டு கலம் அவரது நடவடிக்கை உறுதிப்படுத்தி உள்ளது இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது .ஆனால் அவர்களை ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை .கடைக்கோடியில் திட்டங்களை சேர்க்க ஆர்வம் காட்டாமல், திமுகவின் மண்டல மாநாடு, மகளிர் மாநாடு, இளைஞரை மாநாடு என மாநாட்டு பந்தலுக்கு அக்கறை காட்டுகிறார் . போராட்டக் களத்தில் இருக்கும் மக்களை அடக்குமுறை கையாண்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஸ்டாலின் இந்த அரசுக்கு ஓட்டு போட வேண்டுமா? என்று மக்களுக்கு அச்சமும், பயம் ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள். அதே போல் அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை சூட்டி ஸ்டாலின் அழகு பார்க்கிறார் .இன்றைக்கு கருணாநிதிக்கு விளம்பரம் தேடும் அரசாக உள்ளது .இப்படியே சென்றால் தமிழகம் கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தம் என்ற நிலையை உருவாக்குவார்கள் என மக்கள் எச்சரிக்கை எடுக்க வேண்டும். எதற்கெடுத்தால் விளம்பரம் தேடும் அரசாக உள்ளது .மக்கள் பிரச்சினை தீர்க்க முன்வரவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தீர்வு காண வேண்டும் இல்லை என்றால் தமிழக மக்கள் விலாசம் காணாமல் போய்விடும், தமிழக மொழி, கலாச்சாரம் இவற்றையெல்லாம் காணாமல் போய் கருணாநிதி விலாசமாக தமிழ்நாடு மாறிவிடும் என கூறினார்.
தமிழ்
5
89
208
2K
R.B.Udhayakumar Deputy leader of Opposition Party
இறந்த வாக்காளர்களையும் திமுக உறுப்பினராக சேர்த்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது திமுக மீது இருக்கும் மக்களின் கோபத்தை மடைமாற்றம் செய்ய இளைஞரணி, மகளிரணி மாநாட்டை நடத்துகிறார்கள் இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை வானத்தைப் ஜமுக்காளத்தால் மூடி மறைக்க முடியாது என்பது போல திமுகவின் மீது மக்களின் கோபஅலையை மூடி மறைக்க முடியாது சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு மதுரை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது; ஸ்டாலின் திமுக அரசு தமிழ்நாட்டிற்கு எதை செய்தது? எதை செய்ய தவறிவிட்டது ?என்று தமிழ்நாடு மக்கள் எடை போட்டு பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 525 தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு எத்தனை சதவீதம் நிறைவேற்றி உள்ளார்கள் .திமுக செய்தது என்ன? சொன்னது என்ன? இப்போது சொல்வது என்ன? என்ற நிலைமையை மக்கள் அலசி ஆராய வேண்டும். மறுபடியும் தேர்தல் காலங்கள் வருகிறது, மறுபடியும் திமுக என்ன சொல்ல போகிறது? கிராமப்புற மக்களின் பொருளாதார அடித்தளமாகக் கொண்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவோம், ஊதியத்தை உயர்த்துவோம் என்று கூறினார்கள். அதை செய்ய தவறி விட்டார்கள் இது போன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதியை திமுக தவறிவிட்டது இதில் திமுக அரசுக்கு நஷ்டம் கிடையாது, மக்களுக்கு தான் கஷ்டமாக உள்ளது. அதேபோலத்தான் கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து இவை எல்லாம் கூறியும் எதையும் செய்யவில்லை இதனால் மக்களுக்குத்தான் கஷ்டம். திமுகவுக்கு நஷ்டம் அல்ல ?இது எல்லாம் ஸ்டாலின் திமுக அரசு புரியாத காரணத்தால் இன்றைக்கு செல்வாக்கை இழந்து உள்ளது இதுதான் உண்மையான களநிலவரம். ஆனால் திமுகவிற்கு செல்வாக்கு இருப்பது போல மிகைப்படுத்தி காட்ட விளம்பர யுக்தியை செய்து வருவது திமுகவிற்கு கைவந்த கலையாகும். திமுகவில் கருணாநிதி பிள்ளையாக, அரசியல் பின்புலமாக தான் ஸ்டாலின் வந்தார் .இன்றைக்கு இழந்த செல்வாக்கை இருப்பதுபோல மிகைப்படுத்தி காட்ட விளம்பர யுக்தியை, தேர்தல் யுத்தியாக மாற்றி வருகிறது இதை மக்கள் நம்ப தயாராக முடியவில்லை. இன்று மூன்று மாதம் தான் இந்த ஆட்சி ஆயுள் உள்ளது. அதிகார பலம், பண பலம், சர்வதிகார பலம், கோயபல்ஸ் பொய் பிரச்சாரம் ஆகியவற்றை வைத்து ஆட்சியின் ஆயுளை நீடிக்க முயற்சிக்கிறார். இழந்து செல்வாக்கை மீட்க மாவட்ட செயலாளர்கள் ,நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக வாக்காளர்களில் 30 சதவீதம் திமுகவின் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அதனால் இறந்து போன வாக்காளர்களை திமுக உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விவரம் எல்லாம் எஸ். ஐ. ஆர் பணிமூலம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது . கதவைத் திட்டி உறுப்பினராக சேர்க்கிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் கதவைத் தட்டி திட்டங்களைத் தருவோம் என்று கூறவில்லை. தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து விட்டது கடந்த நான்கரை ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் உள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு இது போன்ற பிரச்சினைகளால் திமுக மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் இதையெல்லாம் மடை மாற்றம் செய்ய இளைஞரணி மாநாடு ,மகளிரணி மாநாடு என்ற பல்வேறு மாநாடுகளை நடத்துகிறார்கள். வானத்தை ஜமுக்காளத்தால் மூடி மறைக்க முடியாது அதுபோல திமுகவின் எதிர்ப்பு அலைகளை எத்தனை மாநாடு நடத்தினாலும் அதை மறைக்க முடியாது. தற்போது தேர்தல் வருகிறது அதனால் ஸ்டாலினுக்கு பொங்கல் பரிசு, மகளிர் உரிமை பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு இது போன்று ஞாபகத்தில் வரும். அதே போல தமிழகத்தில் நடைபெறும் சட்டஒழுங்கை கட்டுப்படுத்த, போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் அக்கறை செலுத்துவாரா? என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இன்றைக்கு 175 தொகுதிகளில் எடப்பாடியார் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு ஒரு கோடி மக்களை சந்தித்து மக்களின் நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார் .2026 ஆண்டில் ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில், எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர,எடப்பாடியாருக்கு மக்கள் மகுடம் சூட்டுவார்கள் என கூறினார்.
தமிழ்
7
36
118
1K