@Edwinpollster தம்பி, on 4th May, DMK, Admk மக்கள உங்களை அடிக்க மாட்டங்க... TVK காரன் வந்து உங்களை பொளக்க போறாங்க... நீங்க சர்வே TVK க்கு ஒட்டு போட்டவங்க மட்டும் எடுதெதீங்களே
@bbctamil படிச்ச முட்டாள்கள்.. கூவி கூவி லிஸ்ட் ல பெயர் இருக்கா பெயர் இருக்கா செக் பன்ன சொன்னாங்க.. உங்களுக்கு எல்லாம் யாருட சிங்கப்பூரில் வேலை கொடுத்தது... ஆன்லைன் செக் பன்ன முடியாதா.. இதுலா பேட்டி வேறா...
''சிங்கப்பூரில் இருந்து வந்தோம்; ஓட்டு போட முடியல''
சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகான வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாததால் பெரம்பூரைச் சேர்ந்த இந்த மூன்று பேர் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
#TNAssemblyElection#Election2026#Perambur
தேர்தல் தேதி வந்துவிட்டாலே எங்க தொகுதியிலே ஓட்டுக்கு இந்த கட்சி அவ்வளவு கொடுக்கறாங்க, அந்த கட்சி இவ்வளவு கொடுக்கறாங்க என்று சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வருவது வாடிக்கை.
தமிழ்நாட்டின் பெரிய தொகுதியான சோழிங்கநல்லூர் தொகுதியில் 2016, 2021 தேர்தல்களில் வென்றவர் திமுகவின் அரவிந்த் ரமேஷ். இரு தேர்தலிலுமே வாக்காளர்களுக்கு அவர் பணம் தந்ததில்லை. மூன்றாவது முறையாக போட்டியிடும் இந்த தேர்தலிலும் தருவதாக இல்லை. இனியும் தரமாட்டார். கட்சிக்கு என்ன செலவழிக்க வேண்டுமோ, அதை தன் சக்திக்கு மீறி செலவழிப்பார். குறைந்தபட்ச அரசியல் அறத்திலிருந்து அவர் தரமிறங்கியதில்லை. தன்னுடைய அரசியல் போட்டியாளர்கள் குறித்து தரக்குறைவாக பேசியதில்லை. நேர்மையான அரசியல்வாதி என்று எதிரிகள்கூட ஒப்புக் கொள்வார்கள்.
வாக்காளர்களுக்கு பணம் விஷயத்தில் மட்டுமில்லை. வாக்குறுதியிலும் அவர் கறார்தான். தன்னால் நிறைவேற்ற வாய்ப்பில்லாத ஒரு வாக்குறுதியைகூட தரமாட்டார். சும்மா முகதாட்சண்யத்துக்காக ‘பார்த்துக்கலாம்’ என்றுகூட சொல்ல மாட்டார். போலவே, வென்றவுடன் என்னென்ன வாக்குறுதிகள் தந்தாரோ, அதையெல்லாம் முதல் இரண்டரை - மூன்று ஆண்டுகளிலேயே பெரும்பாலும் நிறைவேற்றி விடுவார்.
இருப்பதிலேயே பெரிய தொகுதி மட்டுமில்லை. மக்களிடம் ஏகத்துக்கும் எதிர்ப்பார்ப்பு இருக்கும் தொகுதியும் இதுதான். தமிழ்நாட்டிலேயே அதிவேகமாக கிராமப்புற வாழ்க்கையிலிருந்து நகர்ப்புற மோஸ்தருக்கு மாறிய தொகுதி இது. இங்கே வெல்லுபவர், பதவியில் இருக்கும் வரை கத்தி மேல் நடப்பதைப் போலதான் செயல்பட வேண்டியிருக்கும்.
பரங்கிமலை தொகுதியாக இருந்த எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே இது திமுக கோட்டைதான். 1977ல் தொடங்கி 2011 வரை தாம்பரமாக இருந்தது. 1967லிருந்து 18 தேர்தல்களில் 14 முறை உதயசூரியனே இங்கு உதித்திருக்கிறது. எம்.ஜி.ஆர், பம்மல் நல்லதம்பி, வைத்தியலிங்கம், எஸ்.ஆர்.ராஜா, அரவிந்த்ரமேஷ் என்று இங்கு வென்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் எவருமே சட்டமன்றப் பணிகளில், தொகுதி மக்களுக்கான நற்பணிகளில் சோடை போனதில்லை. அவரவருக்கான முத்திரையை மிக அழுத்தமாக தொகுதியில் பதித்தவர்கள்.
மற்ற தொகுதிகள் எப்படியோ, performance காட்ட முடியாத எவருமே இத்தொகுதியில் வெற்றியை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. தொகுதி மக்கள் நன்கு அரசியல்மயப்படுத்தப் பட்டவர்கள். மதம், சாதி, பணம் போன்ற parameter-கள் இங்கே செல்லுபடியாகாது.
திமுக ஏற்கனவே ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த தொகுதிதான் இதுவென்றாலும், எம்.எல்.ஏ.வாக தனிப்பட்ட ஒருவர் முதன்முறையாக ஹாட்ரிக் அடிக்கப் போகிறார். எதிர்காலத்தில் திமுகவிலிருந்தே கூட ஒருவர் இச்சாதனையை முறியடிப்பது என்பது இமாலய இலக்காகதான் இருக்கும்.