samuraiosho retweetledi
samuraiosho
241.9K posts

samuraiosho retweetledi
samuraiosho retweetledi

வின்ஸ்டன்ட் சர்ச்சிலிடம் கேட்டார்கள்... "நான் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்துவிட்டால், எனது எல்லா எதிரிகளையும் இல்லாமல் செய்துவிடுவேன் என்றீர்கள், அதிகாரத்திற்கு வந்துவிட்டீர்கள், என்ன செய்யப்போகிறீர்கள்!
"எல்லா எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்வேன்" என்றார் சர்ச்சில்!
தான் தேர்தல் களத்தில் சந்தித்த எல்லா தலைவர்களின் இல்லங்களுக்கும் சென்று வந்துவிட்டார் விஜய்!
ஒரு கட்சி ஆட்சிமுறை பின்பற்றப்படும் சோஷலிச நாடுகளில் கட்சி சார்ந்த எதிரிகள் இல்லாமல் இருப்பதுபோல் தோன்றலாம்! சனநாயகத்தின்மீது நம்பிக்கையுடைய நாடுகளில் எல்லோரையும் நண்பர்களாக்கிக் கொள்வது சாத்தியமற்றது! இந்தியாவில் அதற்கு வாய்ப்பேயில்லை!
எல்லோரும் நண்பர்கள் என்பது பொய்வாதம்!
சந்திப்பு என்ற ஒற்றை சொல்லால் விஜய் எல்லோரையும் ஒரே வரிசையில் நிறுத்த முயற்சிப்பது, தன்னை உயரத்தில் நிறுத்திக் கொள்வதற்கான கபட நடவடிக்கை!
தவெக விஜய், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை சந்தித்ததும் சி வி சண்முகத்தை சந்தித்ததும் ஒரே தராசில் நிறுத்த முடியாது!
ஆட்சியை கையிலெடுத்தவர்களுக்கு ஆறு மாதம் எவ்வித தொந்தரவும் செய்வதற்கில்லை என்ற சனநாயக மரபை ஒட்டி நின்றவர்களும், ஆதரவு தேவை படாத நிலையிலும் தனது கட்சியையே உடைத்துக்கொண்டு தாமகவே முன்வந்து அரசியல் சடுகுடு ஆடுபவர்களும் ஒன்றல்ல!
தனது சந்திப்பின் வரிசையில் இவர்கள் இருவரையும் ஒரே கண மதிப்பீட்டில் விஜய் சமமாக நிறுத்துவாரெனில் விஜய் நடத்தியது கபட சந்திப்பு நாடகம்!
ஆனால் திமுகவின் தராசு பார்வை தனது எதிரி யார் என்பதை சட்டமன்றத்தில் தெளிவாக வரையறை செய்திருக்கிறது!
அரசியலில் தமது எதிரி யார் என்பதை அடையாளப்படுத்துவதுதான் உண்மையான அரசியல் நாகரீகம்!
உதயநிதியின் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உரை ஒப்பற்ற சாசனம்!
திமுகவினர் தகர்க்கவேண்டியது சினிமாவின் பொய்கவர்ச்சி போலி பிம்பம் என்பதை வரையறுத்திருக்கிறார்!
அச்சமூட்டும் சோபா அரசியலையும் சுட்டிக்காட்டுகிறார் உதயநிதி!

தமிழ்
samuraiosho retweetledi
samuraiosho retweetledi
samuraiosho retweetledi
samuraiosho retweetledi

தலைவரே காலேஜ்ல 70 பேர் இருக்க கிளாஸ்ல வெறும் 5 பசங்க கிட்டத்தட்ட 50 பசங்களை தன்னோட விருப்பமான நடிகனுக்கு ஓட்டு போட வைக்குறான்.. இதை நாம சரி பண்ண 1960 காலகட்ட மாணவ திமுக அமைப்பை உருவாக்கனும்.. அதுல 22 வயசுக்குள்ள இருக்க பசங்க தான் இருக்கனும்.. ( 1/2 )
M.K.Stalin@mkstalin
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
samuraiosho retweetledi

உங்களுக்கு புரியிற மாறி சொல்றேன் கேளு.
கில்லி படத்தை ரீ-ரிலீஸ் பண்ண ஒரு வாரம் போதும், ஆனா 'லியோ 2' எடுக்கணும்னா ஸ்கிரிப்ட் எழுதி, காஸ்ட் சூஸ் பண்ணி, ஷூட்டிங் முடிச்சு, எடிட்டிங், டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்ண கண்டிப்பா டைம் ஆகும்.
அதுபோலதான், ஒரு திட்டத்துக்கு தேவையான வருவாயை உருவாக்கி, நிதி நிலையைச் சீர் செஞ்சுட்டு ஒரு புது திட்டத்தைக் கொண்டு வர்றதுக்கும் டைம் எடுக்கும். அதுதான் முன்னாள் முதலமைச்சருக்கு ஆச்சு.
அவர் பதவியேற்றது உச்சக்கட்ட கோவிட் காலம். வருமானம் முடங்கி, 5 லட்சம் கோடி கடன் சுமை இருந்த அந்த இக்கட்டான சூழல்லயும், மக்களுக்காக ரூ.4000 கொரோனா நிவாரணம், ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு விடியல் பேருந்து பயணம், தனியார் மருத்துவமனையில் இலவச கொரோனா சிகிச்சை-னு மக்கள் நலத் திட்டங்களை எடுத்த உடனே கொடுத்தார்.
அப்படி நெருக்கடியில் இருந்த 14 லட்சம் கோடி மாநிலப் பொருளாதாரத்தை (GSDP), திட்டமிட்ட உழைப்பால் 34 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்தி, நிதி நிலையைச் சீர் செஞ்சுட்டுப் போயிருக்கார்.
இப்போ நீங்க பண்ண வேண்டியது ஸ்டாலின் அய்யா சமைச்சு வச்ச விருந்தை எடுத்து இலையில பரிமாற வேண்டிய வேலைதான்.
அதை மட்டும் ஒழுங்கா, சிந்தாம பண்ணுங்க.
அதுவே பெரிய விஷயம்.🤧

தமிழ்
samuraiosho retweetledi
samuraiosho retweetledi

இந்த பதிவுக்கே , இவனை பைத்தியக்காரன் மாதிரி court க்கு அலைய விடலாம்.. செய்வீர்களா @DMKITwing @arivalayam

தமிழ்
samuraiosho retweetledi

தூய சக்திக்கு அழகல்ல!
அமுதா ஐஏஎஸ் ஒரு சிறந்த ஆளுமை மிக்க நேர்மை வாய்ந்த அதிகாரி. அவர் ஓசூர் உதவி ஆட்சியராக தருமபுரி மாவட்ட ஆட்சியராக திறம்பட பணி புரிந்தவர்.
திட்டப் பணிகளில் ஊழல் நடைபெறாமல் சிறந்த முறையில் நிர்வாகம் செம்மையாக நடைபெற பாடுபட்டவர். அரூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மக்கள் கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை ஏற்று வளர்ச்சி கோரிக்கைகளை ஏற்று அமலாக்கிட முயற்சிகள் மேற்கொண்டவர்.
2008- ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியில் நடைபெற்ற சாலைப் பணியை ஆய்வு செய்த போது கட்டுமான பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பதைக் கண்டறிந்த அவர் உடனடியாக அவற்றை அகற்றி விட்டு தரமான கட்டுமான பொருட்களைக் கொண்டு சாலை அமைக்கஉத்தரவிட்டார். ஆய்வின் போது அதனை அகற்றுவதாக ஒப்புக் கொண்ட ஒப்பந்ததாரர் பின்னர் இரவு நேரத்தில் அதே தரமற்ற பொருட்களை கொண்டு சாலை அமைத்தார். இதனை அப்போது செய்தியாளராக பணியாற்றிய நான் போட்டோ எடுத்து ஊடகத்தில் செய்தி வெளியிடச் சென்ற என் மீது ஒப்பந்ததாரர்களின் அடியாட்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத்தொடர்ந்து தாக்கப்பட்ட நான் தருமபுரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அமுதா அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி என்னிடம் நலம் விசாரித்தார். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கும் பேரூராட்சித் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டதின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒகேனக்கல் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் சிறப்பாகச் நடத்தி திட்டப்பணிகள் விரைந்து நிறைவேற்ற ஊக்கமாக செயல்பட்டவர். பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில் பெண் கல்வி மேம்பட பள்ளிகளில் மாணவிகளுக்கு நேப்கின் விநியோகிக்கும் இயந்திரம் வழங்கும் முன்னோடி திட்டத்தை பில்கேட்ஸ் மனைவி நடத்திய சேவை நிறுவன உதவி மூலம் பரீட்சார்த்த மாக் அமுல் படுத்தினார்.
ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தில் வண்ணமீன் காட்சி உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட மேம்பாடு பணிகளை மேற்கொண்டவர். அரசு செயலராக பணியாற்றிய போது தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பெரு முயற்சி மேற்கொண்ட அதிகாரி.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் அவரது இறுதி நிகழ்ச்சியை நடத்த பொறுப்பளிக்கப்பட்டு திறம்பட செய்து முடித்தவர்.
குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசாரிடமே லஞ்சம் வாங்கும் ஆட்சியர்கள், பஞ்சாயத்துகளில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களை ஒட்டுமொத்தமாக தங்கள் உறவினர்களிடம் கொள்முதல் செய்வது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் பணியமர்த்தப்பட்டுள்ள சூழலில் விடுதலைப்போராட்ட தியாகி குடும்பத்தில் பிறந்த நேர்மையான திறமையான மூத்த பெண் அதிகாரி அமுதா அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது தூய ஆட்சி நடத்துவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்து பொறுப்பேற்றுள்ள தூய சக்திக்கு அழகல்ல!
-வே.விசுவநாதன்

தமிழ்
samuraiosho retweetledi
samuraiosho retweetledi
samuraiosho retweetledi

அதுக்கு பேரு தான் முதல்வரின் முகவரி திட்டம்..
#Sofamodel


TVK Premkumar Moorthy@TVK_PremMoorthy
Good news for TN citizens! Now we can directly submit our Complaints to our CM Vijay through the official helpline. Step 1: Go to cmhelpline.tnega.org Step 2: Login with your phone number Step 3: Choose the department and post your complaint. Simple and transparent.. thanks to @TVKVijayHQ @CMOTamilnadu
தமிழ்
samuraiosho retweetledi
samuraiosho retweetledi
samuraiosho retweetledi
samuraiosho retweetledi
samuraiosho retweetledi

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
CMOTamilNadu@CMOTamilnadu
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay
தமிழ்
samuraiosho retweetledi






















