அன்பு
12.2K posts


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன். @TVKVijayHQ @Udhaystalin





என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம். தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தவெகவின் ஆரம்பம் தொட்டு இப்பவரை யார் அந்த கட்சியை பாஜக பிடியில் தள்ளியது யார்னு ஒரு சின்ன recap.. கரூர் 41 கொலை சம்பவத்தில் நேர்மையான அதிகாரியிடம் விசாரணை பொறுப்பை கொடுத்தவுடன் தனக்கு சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்று கேட்டது யார்? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் அதை வைத்து அழுதது யார்? தேர்தல் பரப்புரையில் பாஜக பற்றி வாயே திறக்காதது யார்? தேர்தல் முடிவுக்கு பின் தனிப்பெரும் கட்சியாக இருந்த போதும் காங் ஆதரவை ஆளநர் கேட்காமலேயே கொண்டு போய் கொடுத்து இந்த இக்கட்டான சூழலை உருவாக்கியது யார்? கம்யூனிஸ்ட், விசிக ஆதரவு கிட்டத்தட்ட உறுதியான நிலையில் 118 என்ற நம்பரை எட்டிய பின் 121 நபர்களின் ஒப்புதலின் தேவை ஏன் ஏற்பட்டது? NDA கூட்டணி கட்சியான அமமுக வின் ஆதரவு பெற்றது தன்னிச்சையான முடிவா மற்ற கூட்டணி கட்சிகளிடம் விவாதிக்கப்பட்டதா? அப்படி இல்லை என்றால் ஏன் அமமுகவிடம் ஆதரவு கேட்டனர்? யார் கேட்டது? அவர் கையெழுத்து போடுவதை வீடியோ எடுத்து குதிரை பேரம் நடப்பதற்கான ஆதாரமாக வெளியிட்டது யார்? இந்த கேள்வி எல்லாம் தவெகவை நோக்கி எழுப்பாமல் திமுக மீது பழி போடுவதை மட்டுமே பேசு பொருளாக வைத்திருக்கும் மர்மம் என்ன? எதிர்கட்சிகள் குறிப்பாக திமுக ஆட்சி அமைக்க எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என்று சொல்லி வருகிறது. ஆனால் முதல் நாளில் இருந்து தவெகவின் செயல்திட்டமே ஆட்சி அமைக்க தாமதப்படுத்துவதில் தான் குறியாக உள்ளனர் என்பது தெளிவாகிறது.. பாஜகவின் செயல்திட்டத்துக்கு தவெக துணை போவது கண்கூடாக தெரிகிறது... குறைந்தபட்ச அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு இது புரியாமல் இல்லை.



We are trying to bounce back! But they already started setting narrative in Insta & WA! If we don't go to these digital channels with the truth, we are never winning the perception again! Atleast now do something! @TRBRajaa @DMKITwing @arivalayam @mkstalin @Udhaystalin


கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு. 15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன். தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன். ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன். #KolathurVisit


Always choose highest package. Your next jump is completely dependent on it

முக்கியமாக ஜி நாகராஜனின் குறத்தி முடுக்கு நாவல்... "மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" என்கிற தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டிய வாசகத்தை எழுதியவர்.. தலைவலி கை கால் குடைச்சல் என என்ன உடல் உபாதை ஏற்பட்டாலும் காயதிருமேனி தைலத்தை பூசி கொள்வது போல மனிதர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வி எழும்பொழுதெல்லாம், அந்த வாசகத்தை நினைத்துக் கொண்டால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்



