tamilbitcoin.eth retweetledi
tamilbitcoin.eth
12.7K posts

tamilbitcoin.eth
@tamilbitcoin1
Crypto believer - Axie4life - crypto since 2013
Katılım Mayıs 2019
7K Takip Edilen845 Takipçiler
tamilbitcoin.eth retweetledi

ரங்கநாதன் தாத்தா மறைந்து 14 நாட்கள் ஆகிறது. 34 வருடங்களாக என்னுடனே இருந்து என்னை வளர்த்த தாத்தா இன்று தெய்வமாக மாறி விட்டார். எனது 3 வயதில் சுசீலா பாட்டி இறந்து விட்டார். அதற்கு அடுத்த 31 ஆண்டுகளாக தாத்தா வாழ்ந்தது முழுக்க முழுக்க எனக்காக தான்.
தனது 103 வயதிலும் எந்த நோய்நொடி இல்லாது, சக்கரை, BP போன்று எந்த உடல் உபாதைகளும் இன்றி மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் கூட அவர் விரும்பிய சாம்பார் வடை, பிரியாணியை ருசித்து உண்டு தினமும் அவர் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை படிக்கக்கூடிய The Hindu ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ், Times of India, தினமலர் மற்றும் தினமணி ஆகிய ஐந்து நாளிதழ்களையும் முழுவதுமாக படித்து, தொலைகாட்சியில் விவாதங்களை பார்த்து மகிழ்வாக சென்றிருக்கிறார் என்று தான் நம்புகிறேன். இறப்பில் கூட யாருக்கும் எந்த தொந்தரவும் இன்றி நிம்மதியாக போய் சேர்ந்து விட்டார்.
1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பாராளுமன்ற தேர்தல் முதல் அனைத்து சட்டசபை தேர்தல்களிலும், பாராளுமன்ற தேர்தல்களிலும் வாக்களித்த பெருமைக்கு சொந்தக்காரர் ரங்கநாதன் தாத்தா. இந்தத் தேர்தலிலும் வாக்களிப்பதற்கு ஆவலுடன் இருந்த தாத்தா சரியாக தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு இந்த உலகை விட்டு பிரிந்து விட்டார்.
எனக்கும் தாத்தாவுக்குமான உறவு கோவையில் நான் வாழ்ந்த முதல் 21 ஆண்டுகள் உடன் பயனித்தவர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றாக தெரியும். 21 வயதுக்கு பிந்தைய எனது 13 வருட வாழ்க்கையில் சிலருக்கு தெரிந்திருக்கும்.
தாத்தாவின் சொந்த ஊர் திருவண்ணாமலை, என் தாய் பிறந்ததும் அங்கு தான். தாத்தா Health Inspector பணியில் தமிழகம் முழுக்க பல ஊர்களில் பணியாற்றியவர், கடைசியாக ஊட்டியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஓய்வு பெற்றதும் கோயமுத்தூருக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தார்.
தாத்தாவுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். இதில் மூத்த மகனான எனது பெரிய மாமாவும், கடைசி மகளான எனது அம்மாவும் பிறவியிலேயே வாய் பேச, காதுகேட்க முடியாதவர்களாக பிறந்தவர்கள். மற்ற இருவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள். 2 மாற்றுத்திறனாளி பிள்ளைகள் தன் சொந்தக்கால்களில் நிற்க வேண்டும் என உறுதியாக இருந்த தாத்தா இருவருக்கும் மத்திய, மாநில அரசாங்களில் இருந்த மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டை பயன்படித்தி கடைநிலை அரசுப்பணியை பெற்றுக் கொடுத்தார். இருவருக்கும் திருமணம் ஒருவேளை நடக்கவில்லை என்றால் அவர் காலத்திற்கு பிறகு இவ்விருவர் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடுமோ என முன் யோசனையுடன் தாத்தா செய்த செயல் அது. ஆனால் விதி என்னவோ தாத்தாவின் மறைவுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே அவரது மூத்த மகளும், 6 ஆண்டுகளுக்கு முன்பே மூத்த மகனும் உயிர் பிரிந்து விட்டனர்.
எனது தந்தையின் ஊர் கும்பகோணம். திருமணத்திற்கு பிறகு எனது தாயும், தந்தையும் கோவைக்கு இடம்பெயர நானும் அங்கு தான் பிறந்தேன். என் தாய் தந்தையருக்கு 4-வது மகன் நான். முதல் மூன்று அண்ணன்களும் மருத்துவ காரணங்களால் மரணிக்க, நான்காவதாக பிறந்த என்னை முழுவதுமாக வளர்க்கும் பொறுப்பை என் தாயின் தந்தையான ரங்கநாதன் தாத்தாவும் – சுசீலா பாட்டியும் ஏற்றுக்கொண்டனர். நான் என் பாட்டி, தாத்தாவுடனே வளர்ந்தேன். நான் பிறந்தது முதல் அதற்கு பிறகான எனது 2011 வரையான 20 வருடங்கள் என்னை முழுக்க முழுக்க வளர்த்தது தாத்தா தான். எனது மூன்றாவது சகோதரரான லோகநாதன் மூளை காய்ச்சல் நோயால் மரணமடைந்தது எனது தாத்தாவை வெகுவாக பாதித்து இருந்தது. அவன் நியாபகமாக “லோகு நினைவு அறக்கட்டளை” என்ற தொண்டு நிறுவனத்தை 1989-ஆம் ஆண்டு நிறுவினார் தாத்தா, அதன் நீட்சியே இன்று நானும் எனது நண்பர்களும் நடத்தி வரும் “நமோ பவுண்டேஷன்".
இரண்டு பிள்ளைகளின் ஊனம், எனது 3 அண்ணன்களின் இறப்பு ஆகியவை தாத்தாவை வெகுவாக பாதித்ததினால் அவர் நிறுவிய அறக்கட்டளை மூலம் பல சேவைகளை கோவை செல்வபுரம் பகுதியில் செய்து வந்தார். அதில் முக்கியமானது இலவச பள்ளிக்கூடமும், டியூஷன் சென்டரும் நடத்தியது. இதன் மூலம் 1990-களில் பலர் அப்பகுதியில் பயன்பெற்றனர். சிறு வயதில் இருந்தே தாத்தாவுடன் கோவை சுற்றிலும் இருந்த RS புரம் காது கேளாதோர் பள்ளி, முதியோர் இல்லங்கள், அனாதை ஆஸிரமங்களுக்கு சென்று வந்த மலரும் நினைவுகள் கண் முன்னே வந்து செல்கிறது.
நான் பிறந்து வளர்ந்தது ஒரு நடுத்தர குடும்பம். எனது தாத்தா அவர் வாழ்வில் செய்ய முடியாத அனைத்தையும் என் மூலமாக சாதிக்க நினைத்தவர். அவர் வைத்திருந்த ஒரு TVS 50 பைக்கில் என்னை ஏற்றிக்கொண்டு பல இடங்களுக்கு சென்றிருக்கிறார். 5-ஆம் வகுப்பு வரை நான் கோவை வைசியாள் வீதியில் உள்ள வாசவி வித்யாலயா பள்ளியில் படித்தேன். இலவச பஸ் பாஸ் மூலம் பள்ளிக்கு சென்ற வந்த எனக்கு சனிக்கிழமைகளில் மட்டும் அப்படி ஒரு கொண்டாட்டம். ஏனனெனில் அன்று பள்ளி அரை நாள் செயல்படும். 11 மணிக்கு என்னை அழைத்து செல்ல TVS 50-யில் வரும் தாத்தா நேராக RS புரத்தில் உள்ள அன்னபூர்ணா உணவகத்திற்கு அழைத்துச் செல்வார். ஒரு பரோட்டா, ஒரு வெண்ணிலா ஐஸ் கிரீம். இதை சாப்பிடுவேன், இதை மட்டும் தான் சாப்பிடுவேன். திங்கள் முதல் வெள்ளி வரை அந்த சனிக்கிழமைக்காக காத்திருந்த நாட்கள் எண்ண ஓட்டங்களில் வந்துக்கொண்டே இருக்கிறது.
பள்ளிக்காலம் முதலே படிப்பை தவிர்த்து நான் Extra Curricular என்று சொல்லப்படும் பிற செயல்பாடுகளில் ஜொலிக்க வேண்டும் என்பது எனது தாத்தாவின் ஆசை. கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்ட என்னை நான்காம் வகுப்பு படிக்கும் போதே RS புரத்தில் உள்ள நேரு வித்யாலயா பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டார். அந்த 9 வயதில் கிரிக்கெட் பேட், க்ளொவ்ஸ் என முறையாக பயிற்சி பெறும் வாய்ப்பை உருவாக்கி தந்தவர் எனது அன்பு தாத்தா. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் TVS 50-யில் அழைத்து சென்ற தாத்தா, 2 – 3 மணி நேரம் பயிற்சி முடியும் வரை அங்கேயே காத்திருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.
தினசரி நாளிதழ்களை படிப்பதை 1960-களில் இருந்து வழக்கமாக வைத்திருந்த தாத்த The Hindu ஆங்கில நாளிதழ், தினமணி மற்றும் தினமலர் நாளிதழ்களை முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை படிப்பவர். அதே பழக்கம் பள்ளி காலங்களில் இருந்தே எனக்கும் ஒட்டிக்கொண்டது.
எனது பள்ளிக் காலங்களில் காலையில் நடைபெறும் Prayer-ல் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை “Thought for the Day” என்ற ஒரு பகுதியை தொடர்ந்து நான் தொகுப்பேன். அதற்காக தாத்தா தினமும் காலையில் எழுந்து புத்தகங்களில் இருந்து தேடி ஒரு நல்ல Quote-ஐ ஆங்கிலத்தில் எழுதி பிறகு தமிழில் எழுதி கொடுப்பார் – அதைத்தான் பல வருடங்களாக தொடர்ந்து பள்ளி Prayer-ல் படித்து வந்தேன்.
Parents Teacher Meeting எப்போது நடந்தாலும் என் பள்ளியில் உள்ள அனைவருக்கும் அவர்களது தாய் அல்லது தந்தை வருவார்கள், ஆனால் எனக்கு மட்டும் முதல் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை வந்தது எனது தாத்தா தான். என் பள்ளி ஆசியர்கள் அனைவருக்கும், என் வகுப்பு தோழர்களுக்கும், பள்ளியில் படிக்கும் அனைவருக்கு பரிச்சியமான முகமாகவே தாத்தா திகழ்ந்தார்.
பத்தாம் வகுப்பில் 80% மதிப்பெண் எடுத்திருந்தாலும், என்னை அறிவியல் பிரிவில் படிப்பதற்கு(Science Group) பதிலாக கலை பிரிவில்(Arts Group) படிப்பதற்கு ஊக்குவித்தவர் தாத்தா. அதற்கு காரணம் சிறு வயதில் இருந்து அரசியல் குறித்து ஆழ்ந்த கற்பித்தலை அவர் வழங்கியதால் கலைப்பிரிவு படிப்பது வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது அவர் கருத்து. அக்காலத்தில் கலைப்பிரிவு என்பது படிக்காதவர்கள் எடுக்கக் கூடிய பிரிவு என்ற ஒரு பொது புத்தி இருந்தது, அதனால் என் பள்ளி ஆசிரியர்கள் சிலர் என்னிடம் பல மாதங்கள் பேசாமல் இருந்தது கூட நினைவு இருக்கின்றது. அந்த ஒரு முடிவு என் வாழ்வில் எடுத்த மிகச்சிறந்த முடிவாக நான் பார்க்கிறேன்.
நான் 12-ஆம் வகுப்பு படிக்கும் போது எனது தாத்தாவுக்கு நான் ஒரு Professional-ஆக உருவாக வேண்டும் என ஆசை. அதற்காக அவர் பலரிடம் பேசி என்னை படிக்க தேர்ந்தெடுக்க சொன்னது Company Secretary படிப்பு. ஆனால் கல்லூரியில் படித்துக்கொண்ட படிக்க வேண்டிய படிப்பாக CS இருந்ததால், கோவை PSG கலை அறிவியல் கல்லூரியில் BBA படிப்பில் சேர்ந்தேன். PSG கல்லூரியில் BBA படிப்பு முடிக்கும் தருவாயில் Company Secretary படிப்பும் Inter முடித்து இருந்தேன். அப்போது Company Secretary Institute-ல் Securities Law பாடத்தை சொல்லிக் கொடுத்த திருமிகு.ரேணுகா சந்திரன் என்ற ஆசிரியை நீ சட்டம் படித்தால் நன்றாக இருக்கும், Company Secretary + Law என்பது ஒரு மிகச்சிறந்த Combo என்று அறிவுறுத்தினார். அதே சமயம் எங்களது BBA துறை Head of the Department-ஆக இருந்த பேராசிரியர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்களும் நிச்சயமாக நீ சட்டம் படிக்க வேண்டும் என்ற அறிவுரை வழங்கினார்.
சரி சிறந்த சட்டக்கல்லூரிகள் என்னென்ன? அதற்கான சேர்க்கை முறை எவ்வாறு என்று பார்த்துக்கொண்டு இருந்த போது தான் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் கலவரம் எற்பட்டு பரபரப்பாக இருந்த தருணம். அதனால் தாத்தா சென்னையில் கண்டிப்பாக சட்டப்படிப்பு படிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன் என கூறி விட்டார். அதைத் தவர்த்து நான் தேர்வு செய்தது இரண்டு கல்லூரிகள் ஒன்று பெங்களூரில் உள்ள BMS சட்டக்கல்லூரி மற்றொன்று பூனாவில் உள்ள ILS சட்டக்கல்லூரி.
இதில் பூனா சட்டக்கல்லூரி இந்தியாவின் தலைசிறந்த சட்டக்கல்லூரிகளில் முதல் 5 இடங்களில் அப்போத இருந்தது, அதனால் இடம் கிடைப்பது மிகக்கடினம். இந்தியா முழுக்க இருந்து மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். பெங்களூரு BMS சட்டக்கல்லூரியில் இடம் கிடைத்தது, பதிவு செய்து விட்டு பூனா சட்டக்கல்லூரி முடிவுக்காக காத்திருந்தேன். பூனாவில் இடம் கிடைத்தால் சிறந்தது இல்லையெனில் பெங்களூரு கல்லூரியில் படித்து விடலாம் என நினைத்திருந்தேன்.
இதற்கிடையில் தாத்தாவிடம் பூனா சென்று படிக்க வேண்டும் என்று சொன்னதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. கோவையில் இருந்து மிகத்தொலைவாக இருக்கிறது, பெங்களூரு கல்லூரியில் படித்தால் போதும், தோன்றும் போதெல்லாம் பேருந்து ஏறி வந்து விடலாம் என்பது அவரது வாதம். எனக்கோ வெளியூருக்கு சென்று படிக்க போகிறோம் என முடிவாகி விட்டது, படிப்பது சிறந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற விருப்பம். இந்த பிரச்சனையை எனது ஆசிரியை திருமிகு.ரேணுகா சந்திரன் அவர்களிடம் கூறினேன். அவர் அச்சமயத்தில் குமரன் தங்கமாளிகையில் மிக உயரிய பொறுப்பில் இருந்துக் கொண்டே எங்களுக்கு பாடம் எடுத்து வந்தவர். அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து தாத்தாவிடம் பல மணி நேரம் பேசி ஒப்புக்கொள்ள வைத்தார். தாத்தாவும் ஒரு வழியாக பணிந்தார். 2011-ஆம் ஆண்டு கோவையில் இருந்து பூனா படிக்க சென்றதோடு கோவையுடனான என்னுடைய உறவு முடிந்து விட்டது. 3 ஆண்டுகள் பூனா சட்டப்படிப்பு, ஓராண்டு புது டெல்லி வாழ்க்கை என 2011 முதல் 2015 வரை தாத்தா கோவையில் என்னைப் பிரிந்து வாழ்ந்தார்.
அந்த பிரிவே மிகக்கடினமாக இருந்ததால் 2015-ஆம் ஆண்டு இறுதியில் நான் புது டெல்லியில் இருந்து சென்னை குடிபெயர்ந்தவுடன் அடுத்த மாதமே தாத்தாவையும், அம்மாவையும் சென்னைக்கு அழைத்து வந்து என்னுடனே வைத்துக்கொண்டேன். கடந்த 11 ஆண்டுகள் தாத்தாவை கவனித்துக் கொள்வதற்காக தனியாக இரண்டு பணி ஆட்களை நியமித்து அவரை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டேன். நெருங்கிய உறவினர்கள் முதல் நண்பர்கள் வரை பெரியவர்களை வீட்டில் வைத்து பார்த்துக்கொள்வது கடினம், அம்மாவும், தாத்தாவும் கோவை இல்லத்திலேயே பணியாட்களை நியமித்து பார்த்துகொள்ளலாம், சென்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினர். ஆனால் என்னுடனே வைத்து அம்மாவையும், தாத்தாவையும் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அந்த விருப்பம் தாத்தாவுடன் கடந்த 11 ஆண்டுகள் உடனிருக்கும் மாபெரும் பாக்கியத்தை வழங்கியது என்று தான் சொல்ல வேண்டும்.
பள்ளி படிக்கும் போது எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்று ஆசை. குறிப்பாக IAS அதிகாரி ஆக வேண்டும் என்று. அதற்கு தாத்தா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். காரணம் வினோதமானது. அந்த பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கியே பிழைக்க வேண்டும். நிம்மதி இருக்காது, நிறைய தவறுகள் செய்ய வேண்டியது வரும் என்பது அவர் கருத்து. அரசியல் ஞானத்தை சிறு வயது முதலே புகுட்டிய அவர் நான் ஒரு முழு நேர அரசியல்வாதி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அதற்கு காரணம் அவர் உடனிருந்து பார்த்த அவரது இளைய சகோதரர் திருக்கோவிலூர் சுந்தரம் தாத்தாவின் அரசியல் வாழ்க்கை. சுந்தரம் தாத்தா மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதல், முழுக்க முழுக்க அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் போனது, 50 வருடங்களுக்கு மேல் பொது வாழ்க்கையில் இருந்தும் எந்த அங்கீகாரமும் அவருக்கு கிடைக்காதது போன்றவற்றை பார்த்து நான் அரசியலில் ஈடுபடுவதை சுத்தமாக விரும்பவில்லை.
பல முறை அவர் என்னிடம் புலம்பியதுண்டு, “நீ இது போன்று உருப்படாமல் அரசியலில் இருப்பதற்கு பதில் சிவில் சர்வீஸ் தேர்வாவது எழுதி இருக்கலாம்” என. 2012-ஆம் ஆண்டு நான் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது தான் நான் முதன்முதலில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த திரு.நரேந்திர மோடி அவர்களை நேரில் சென்று சந்திப்பதற்கு அழைப்பு வந்தது. அச்சமயம் மகிழ்ச்சியின் உச்சத்தில் தாத்தாவுக்கு அலைபேசியில் இத்தகவலை தெரிவித்த போது அவர் கிஞ்சித்தும் மகிழ்ச்சி அடையவில்லை. அரசியல் புரிதல் இருந்தால் மட்டும் போது நம் போன்ற மிடில் கிளாஸ் குடும்பத்தினருக்கு அரசியல் என்பது ஒத்து வராத துறை என்பது என் கணக்கு. கடந்த 11 ஆண்டுகளில் நான் கட்சிப்பணிக்காக ஊர் ஊராக சுற்றும் போதெல்லாம் “சுந்தரம் போல தான் உருப்படாமல் போக போற” என்ற வசவு தான் விழுந்துக்கொண்டே இருக்கும்.
அவருக்கு விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ சென்னையில் நான் செய்யும் பணிகள் அனைத்தும் அவருக்கு எடுத்து சொல்வேன். 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போன போது சிறு மன வருத்தம் தான் அவருக்கு. குறிப்பாக இந்த வருடம் ஜனவரி மாதம் தந்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு விவாத மேடையின் போது ஏற்பட்ட கலவரம் அதைத்தொடர்ந்து 3 போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, அதன்பொருட்டு தலைமறைவாக கிட்டத்தட்ட 20 நாட்கள் இருந்ததால் அவரை பார்க்க, பேச முடியாமல் போனது போன்றவை அவரை வெகுவாக பாதித்து இருந்தது. இந்த 2026 சட்டசபை தேர்தலிலும் வாய்ப்பு கிடைக்காமல் போனது அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடைசியாக நான் அவருடன் மேற்கொண்ட நீண்ட உரையாடல் ஏப்ரல் 3-ஆம் தேதில் வேட்பாளர் அறிவிப்பன்று இரவு நடைபெற்றது. “முனைவர் பட்டம் பெற்றுள்ளாய், நம் சித்தாந்தம் சார்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளாய், தி.மு.க அரசின் அடக்குமுறையால் 12 பொய் வழக்குகளை பெற்று சிறைவாசம், தலைமறைவு வாழ்க்கை, முழு நேர அரசியல்வாதியாக தொடர்ந்து பயணங்கள், உழைப்பு என 24 மணி நேரமும் கட்சி கட்சி என பணி செய்தும் ஏன் உனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை?” என்பது அந்த உரையாடல். “தேசிய கட்சிகளில் பல வாய்ப்புகள் நிச்சயம் வரும், நமக்கான அங்கீகரமும், வாய்ப்பும் நிச்சயமாக விரைவில் வரும் – அதை நீங்கள் பார்த்து சந்தோஷப்பட போகின்றீர்கள். இது நிச்சயமாக நடக்கும்” என்று கூறியிருந்தேன். ஆனால் காலன் அவர் உயிரை ஏப்ரல் 19-ஆம் தேதி எடுத்துச் சென்று விட்டான்.
அவர் நான் Company Secretary படிப்பை கண்டிப்பாக முடித்து விட வேண்டும் என்று வற்புறுத்தியதால் தான் இன்று எங்கள் Suryah and Dinesh & Co Practicing Company Secretary நிறுவனம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய எனது வாழ்வாதாரம் இந்த தொழிலையே நம்பி இருக்கிறது. அதை உருவாக்கி தந்தவர் தாத்தா. அவர் வாழ்ந்த கடைசி நாள் வரை எனக்காகவே வாழ்ந்தார். கடைசி காலத்தில், இறப்பில் கூட என்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் நிம்மதியாக போய் சேர்ந்து விட்டார் மனுஷன்.
தமிழ் திரையுலகலில் தாய் பாசத்திற்கு மன்னன், எம் குமரன் S/o மகாலட்சுமி திரைப்படங்களை போன்றும், தந்தை பாசத்திற்கு தவமாய் தவமிருந்து, வாரணம் ஆயிரம் திரைப்படங்களை போல தாத்தா பாசத்தை, தாத்தா – பேரன் உறவு குறித்து என்றேனும் ஒரு திரைப்படம் எடுத்தால் நிச்சயமாக தாத்தாவும் நானும் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து பல குறிப்புகள் அத்திரைப்படம் எடுப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு ஏதொரு மாற்றுக்கருத்தும் இல்லை.
இந்த உலகிலேயே தாத்தா என்ற சொல்லிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் ரங்கநாதன் தாத்தா.
You were the Best Thatha in this World, I will definitely make you proud one day. Continue blessing me please.
Good Bye My Dear Thatha…
- அன்புடன், பேரன்புமிக்க பேரன் SG சூர்யா...

தமிழ்
tamilbitcoin.eth retweetledi
tamilbitcoin.eth retweetledi
tamilbitcoin.eth retweetledi
tamilbitcoin.eth retweetledi

If #ADMK wins i will be most happiest person
If ADMK not able to win i will be the most saddest person and i need to have more patience and calm and i need to hope admk wins in 2031 🚶🏻
What ever the result come one thing will be clear I will keep on supporting ADMK till i live
English
tamilbitcoin.eth retweetledi
tamilbitcoin.eth retweetledi

எல்லாரும் #அதிமுகவ Underestimate பண்ணிட்டு திமுக Vs தவெக னு பேசிட்டு இருக்காங்க..
#அதிமுக பவர் என்னனு கிராமப்புற மக்கள்ட கேட்டு பாருங்க தெரியும்..
#May4waiting
தமிழ்
tamilbitcoin.eth retweetledi

41 பேர் இறந்தப்ப மற்ற கட்சியினர் விஜய் மீது கோபம்கொண்டு அவன்மீது பழிசொன்னப்ப பழனிச்சாமி அவர்களிடம் விஜய் குறித்து கேட்டபொழுது அவரும் சாதாரண மனுசன் தான் அவருக்கும் மனக்கஷ்டம் இருக்கும் அவர்மீது பழி போடாதிங்கன்னார்! அதற்கு அந்த பொட்ட விஜய் ஒரு நன்றி கூட சொல்லல அதானே 41பேர கொன்னதுக்கே அவன் மன்னிப்பு கேட்கல அவனோட வீட்டுக்கே வரச்சொல்லி டூப்ப வச்சு டிராம பண்ணியிருக்கான் இவன்லாம் அரசியலில் விசம் மனித ஜென்மமே கிடையாது த்தூ
தமிழ்
tamilbitcoin.eth retweetledi
tamilbitcoin.eth retweetledi
tamilbitcoin.eth retweetledi
tamilbitcoin.eth retweetledi
tamilbitcoin.eth retweetledi

இது தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம்..!
23-ம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.. நாளை மறுநாள் தேர்தல் - தமிழக மக்களுக்கு இ.பி.எஸ் உரை..
#EPS | #TNElection2026 | #PolimerNews
தமிழ்
tamilbitcoin.eth retweetledi
tamilbitcoin.eth retweetledi

Reasons for Downfall of #DMK
1. GSquare
2. Removing PTR from finance minister
3. Promoted Udhayanidhi to Deputy CM
4. Fake promise on NEET
5. No control over Law and Order
6. TASMAC
7. Senthil Balaji
8. Under dealing with BJP
9. Sabareesan
10. Women Safety
11. Loose talks from ministers on freebies
12. Immature dealing of a new party
13. Name sake alliances
14. Alliances become jaalraas
15. Last but not least corruption
Vote for #ADMK
English
tamilbitcoin.eth retweetledi

வெல்லம் விற்ற வெள்ளந்தி சிரிப்புக்காரர்.. அரசியலில் உருவெடுத்தது எப்படி? 50 ஆண்டுகள் - அத்தனையுமே வரலாறு!
#AIADMK #EPS #EdappadiPalaniswami #EPSLeader #Jayalalitha #TamilNaduPolitics #Election2026 #Newstamil24x7
தமிழ்
tamilbitcoin.eth retweetledi
tamilbitcoin.eth retweetledi















