jothisri retweetledi
jothisri
1.4K posts

jothisri
@JJothisri
LIFE IS EDUCATION. LEARN IT. LIVE IT.
Kamuthi, Ramanathapuram Distri Katılım Temmuz 2025
2.1K Takip Edilen155 Takipçiler
jothisri retweetledi
jothisri retweetledi
jothisri retweetledi

நாங்கள்
"மற்றவைகள்.."
⚫
நாம் தமிழர் கட்சி 2016 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலில் போட்டியிடுகிறது.
மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு பாராளுமன்றத் தேர்தல்கள், சில இடைத்தேர்தல்கள் என எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி வாக்குக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதில்லை.
கொள்கையை முன்னிறுத்துகிறோம். இரவு பகல் பாராது வீடு வீடாக அலைந்து வியர்வை சிந்தி வாக்குகள் கேட்கிறோம்.
தெருமுனை கூட்டமோ பொதுக்கூட்டமோ ஏதோ ஒன்று நடத்தி சாலையில் கடந்து கொண்டிருக்கின்ற மக்களை நிறுத்தி வைத்து தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் மனங்களில் விதைக்கிறோம்.
ஏறக்குறைய எல்லோருக்கும் ஒரே மாதிரியான பேச்சு மொழி. பெரும்பாலும் உரையாடல்களில் ஆங்கிலம் தவிர்த்த தமிழ் மட்டுமே மூச்சு மொழி.
அண்ணன் சீமான் வரும்போது கூட தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் மேதகு வாழ்க என்ற முழக்கம் மட்டுமே. மாலைகள் இல்லை. சால்வைகள் கிடையாது.
எந்தக் கூட்டமும் ஆபாச நடனங்கள் சினிமா பாடல்கள் போட்டு மக்களை திரட்டும் கூட்டம் அல்ல.
117 ஆண்கள் 117 பெண்கள் என 234 வேட்பாளர்களும் குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள்.
மக்களுக்காக போராடுகின்ற போராளிகள்.
எங்களைப் போல மற்ற யாரும் இல்லை.
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள் தான்".
🔸
எங்கள் அண்ணன் சீமான் தமிழ்நாட்டை முழுமையாகக் கடந்த ஒரே தலைவர். எல்லா தலைவர்களை தாண்டிலும் அதிக கூட்டங்களில் பேசியவர். மக்களின் போராட்டக் களங்களில் பங்கேற்பவர். ஊடகங்களை தினந்தோறும் சந்திப்பவர். எப்போதும் களத்திலே நின்று போராடுபவர்.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஆடு மாடு மாநாடு மலைகள் மாநாடு தண்ணீர் மாநாடு என தொடர்ச்சியாக மக்கள் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தி சூழலியல் சார்ந்து இயங்கும் ஒரே தலைவர்.
கருணாநிதியின் பேனா சிலையை தனி ஒருவனாக நின்று போராடி தடுத்தவர்.
தஞ்சை பெருவுடையார் கோவில் உச்சியில் தமிழ் முழங்க காரணமாய் நின்றவர்.
அவரைப்போல உழைப்பவர் யார் உண்டு இங்கு..?
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்."
🔹
60 ஆண்டுகால திராவிட அரசியலின் சீர்கேடுகளை, தமிழ்நாடு அடைந்த பின்னடைவுகளை அம்பலப்படுத்தியதில் சீமானை போல வேறு யாருமில்லை.
இன்று அண்ணன் பேரறிவாளன் வழக்கறிஞராக மாறியதற்கு பின்னால்
சீமான் என்ற தனி மனிதனின் கைதும், வேலூர் சிறைவாசமும் இருக்கிறது. அந்த மனிதன் ஏழு தமிழர் விடுதலையே இனத்தின் விடுதலை என முழங்கிய போது அருகில் இருந்தவர் கூட ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தோம்.
ஆனாலும் சாதித்தார்.
கதிராமங்கலம் போராட்ட களத்தில், நெடுவாசல் போராட்டக் களத்தில், ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் என அவர் கால் படாத பூமி ஏதாவது உண்டா.. வேர்வைத் துளி சிந்தாத நிலம் எங்காவது உண்டா. ?
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்".
🔹
மக்களை நம்பி நம்பி மீண்டும் மீண்டும் தேர்தல் களத்தில் நிற்கிறோம்.
வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் உழைப்பை முன்னிறுத்தி உறுதியாக நிற்கிறோம்.
எங்களது களங்கமற்ற உழைப்பை கண்டு கலங்காதவர்கள் யாரும் இல்லை.
ஆனாலும் நாங்கள் சேர்ந்ததில்லை. இந்த இனத்தில் பிறந்தோம். தலைவரை நேசித்தோம். எனவே நம் வாழ்க்கை இப்படியே என்று எங்களை நாங்களே தேற்றி, தலைவரின் முகத்தை மனதில் ஏற்றி இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்".
🔹
நாளை காலை ஜனநாயகத் தீர்ப்பு எழுதப்பட இருக்கிற இந்த நொடியிலும் கூட என் உயிர் அண்ணன் சீமானை பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்கிறேன்.
அவனோடு நான் நிற்பது என் பிறப்பிற்கே பெருமை.
உழைப்பினால் உறுதி ஏறிய அவனது விழிகளில் எந்த நொடியும் சஞ்சலம் குடிபுகுந்ததில்லை.
ஆயிரமாயிரம் அவதூறுகள், பொய்மைகள் என அவனை நோக்கி எய்யப்பட்ட எல்லா அம்புகளும் அசைக்க முடியா அவனது மன உறுதிக்கு முன்னால் மடிந்து போயிருக்கின்றன.
அவனது படை போரைத் தொழிலாக செய்பவர்கள் அல்ல. வாழ்க்கையாக கொண்டவர்கள்.
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்."
🔹
நம்பிக்கையோடு நாளை
விடியலில் நாங்கள் விழித்திருப்போம்.
விவசாயி சின்னம் மிளிரும் போதெல்லாம்.. தமிழர் வாழ்வு ஒளிரும்.
🔹
ஊடக வியாபாரிகளின் வணிகத்தில் நாங்கள் "மற்றவைகளாக" இருந்து விட்டுப் போகிறோம்.
ஒருபோதும் அலட்சிய பார்வையால் ஊடகங்களை நாங்கள் கடந்ததில்லை.
மௌன கத்தியால் அவர்களை நாங்கள் அவமானப்படுத்தியதில்லை.
பதில் சொல்லாமல் நாங்கள் அவர்களை பதற வைத்ததில்லை.
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள் தான்"
எங்களது வெற்றிச் செய்தி கூட மற்றவைகளில் வரட்டும்.
ஆனால்.
இறுதியாக ஒன்று.
இந்த "மற்றவைகள்" தான்
உரிமைகள் மறுக்கப்பட்ட பொழுதில்
அவர்களுக்காகவும் போராட இருக்கும்
இறுதியான மனிதர்கள்.
🔹
மணி செந்தில்.

தமிழ்
jothisri retweetledi

jothisri retweetledi

TVK தலைமை தேர்தலுக்கு முன்னாடி வேட்பாளர்களிடம் 5 கோடி பணம் வாங்கிட்டு போட்டி போட வாய்ப்பு தந்தான்.
அவங்க யாரு, எந்த கட்சியில் இருந்து வந்தாங்க, அவங்க குற்ற பின்னணி என்ன என்று கூட கண்டுக்கல.
தேர்தலுக்கு பிறகு ஒரு வேளை TVK சில தொகுதிகளில் வெற்றி பெற்றால், அந்த வேட்பாளர்கள் நிச்சயம் 50 கோடி பணம் திமுக-அதிமுகவிடம் வாங்கிக்கொண்டு தஞ்சம் அடைவார்கள்.
முதல் போட்டு வியாபாரம் செய்ய வந்தவன், இலாபம் தானே பார்ப்பான்.
விஜய்யை நம்பி வாக்கு செலுத்தியவன் தான் முட்டாள்!!!

தமிழ்
jothisri retweetledi
jothisri retweetledi

டேய் fail'லா போன வக்கீலு @itsalden_offl ஒரு சின்ன பையன் உன் மூஞ்சிலே துப்பிட்டான் டா.
சீக்கிரம் ஆதாரத்தோடு வா இல்ல இன்னும் அடி பலமா விழும் 💯
தமிழ்
jothisri retweetledi

#திமுக #தற்குறி #ஆண்டாள்_பிரியதர்ஷிணி பேசும் போது முன்னாடி யார் இருக்கார்னு பாத்து பேசணும்.. முன்னாடி இருப்பவர் வாக்குக்காக மண்டியிடுற, வாக்கை விலைக்கொடுத்து வாங்கும் ஈன உபியோ கூத்தாடியோ இல்லை.
தமிழ் தேசிய இனத்தின் தளபதி @idumbaikarthi
தமிழ்
jothisri retweetledi
jothisri retweetledi
jothisri retweetledi

வசதியான வாழ்க்கை இருந்தும் மனதில் மகிழ்ச்சி இல்லை -என்ன செய்வது?
மரியாதைக்குரிய ரத்தன்ஜி டாடாவிடம் வானொலி தொகுப்பாளர் ஒரு தொலைபேசி பேட்டியில் கேட்டபோது:
வாழ்க்கையில் அதிக சந்தோஷம் கிடைத்ததும் உங்களுக்கு என்ன
ஞாபகம் வரும்?
ரத்தன்ஜி டாடா கூறியதாவது:
நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் நான்கு நிலைகளைக் கடந்துவிட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை நான் புரிந்துகொண்டேன்.
முதல் கட்டம் செல்வத்தையும் வளங்களையும் குவிப்பதாகும்.
ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி கிடைக்கவில்லை.
பின்னர் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பொருட்களை சேகரிக்கும் இரண்டாவது கட்டம் வந்தது.
ஆனால் இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களின் பிரகாசம் நீண்ட காலம் நீடிக்காது என்பதை நான் உணர்ந்தேன்.
ஒரு பெரிய திட்டத்தைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. அப்போதுதான் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் 95% டீசல் சப்ளை என்னிடம் இருந்தது.
இந்தியாவிலும் ஆசியாவிலும்
மிகப்பெரிய எஃகு தொழிற்சாலையின் உரிமையாளராகவும் இருந்தேன்.
ஆனால் நான் நினைத்த மகிழ்ச்சி
இங்கும் கிடைக்கவில்லை.
நான்காவது படியில் சில ஊனமுற்ற குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகள் வாங்கித் தருமாறு எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
சுமார் 200 குழந்தைகள்.
எனது நண்பரின் வேண்டுகோளின் பேரில், நான் உடனடியாக சக்கர நாற்காலிகளை வாங்கினேன்.
ஆனால் நானும் அவருடன் சென்று
சக்கர நாற்காலிகளை குழந்தைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நண்பர் வற்புறுத்தினார். நான் தயாராகி அவருடன் சென்றேன்.
அங்கே இந்தக் குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகளை என் கைகளால் கொடுத்தேன். இந்தக் குழந்தைகளின் முகத்தில் ஒரு விசித்திரமான மகிழ்ச்சியைப் பார்த்தேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலியில்
அமர்ந்து, அங்குமிங்கும் நகர்ந்து
வேடிக்கை பார்ப்பதைக் கண்டேன்.
அவர்கள் ஒரு பிக்னிக் இடத்தை
அடைந்தது போல் இருந்தது, அங்கு அவர்கள் வெற்றிகரமான பரிசைப்
பகிர்ந்து கொண்டனர்.
எனக்குள் உண்மையான
மகிழ்ச்சியை உணர்ந்தேன்.
நான் வெளியேற முடிவு செய்தபோது, குழந்தைகளில் ஒருவர் என் காலைப் பிடித்தார்.
நான் மெதுவாக என் கால்களை விடுவிக்க முயற்சித்தேன், ஆனால் குழந்தை என் முகத்தைப் பார்த்து என் கால்களை இறுக்கமாகப் பிடித்தது. நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உங்களுக்கு வேறு ஏதாவது தேவையா?
இந்தக் குழந்தை எனக்கு அளித்த பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், வாழ்க்கையைப் பற்றிய எனது பார்வையை முற்றிலும் மாற்றியது
இந்த குழந்தை கூறியது:
உங்கள் முகத்தை நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன், அதனால் நான் உங்களை சொர்க்கத்தில் சந்திக்கும் போது, நான் உங்களை அடையாளம் கண்டு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுவேன்....!!"

தமிழ்

நல்லா படிச்ச 40 வயது தக்க நண்பர் ஒருவர் கடந்த முறை நாம் தமிழருக்கு வாக்கு அளித்தவர் இந்த முறை தவெக விற்கு வாக்கு அளித்திருக்கிறார்.
மதிக்கத் தக்க நபர் ஆதலால் பெரும் விவாதம் செய்ய விரும்பவில்லை. இருப்பினும் ஏன் தவெக என்று கேட்டேன்?
ஒரு மாற்றம் வேண்டும் என்றார். தவெக வை விட சிறந்த திட்டாங்களையும் கொள்கையையும் நாம் தமிழரிடம் இருக்கிறதே அதனை மாற்றாக எடுத்து கொள்ள வில்லையா என்றேன்?
நாம் தமிழர் நல்ல கட்சி தான் ஆனால் வெல்லக் கூடிய இடத்திற்கு வரவில்லையே என்றார.
த வெ க வென்று விடும் என்று கருதுகிறீர்களா என்றேன்?
நிச்சயமாக 45%வரும் என்றார்.
45% என்றால் இரண்டு பேரில் ஒருவர் தவெக விற்கு வாக்கு அளித்திருக்க வேண்டும். அப்படி நம்புகிறீர்களா என்றேன்?
இல்லை என்றார். ஒருவேளை 35% என்றால் கூட மூவரில் ஒருவர் தவெக விற்கு வாக்கு அளித்து இருக்க வேண்டும் இதனையாவது நம்புகிறீர்களா என்றேன்.
இல்லை என்றார்.
25 %என்றால் நால்வரில் ஒருவர் வாக்கு அளித்தீருக்க வேண்டும். இதையாவது உறுதி செயகிறீர்களா என்றேன்?
வாய்ப்புள்ளது என்றார். அப்படியானால் எப்படி வெல்ல முடியும். பிறகு எதனை வைத்து முதலில் 45% என்று சொன்னீர்கள் என்றேன்.
பதில் இல்லை. மேலே படித்தவர் என்று மரியாதை கொடுத்து எழுதி இருந்தேன் அல்லவா அந்த மரியாதை தற்போது குறைந்திருந்தது.
சரி இந்த முறை தவெக வெல்லும் என்பதால் நாம் தமிழரை தவிர்த்தீர்கள் சரி, நடந்து முடிந்த தேர்தலில் தவெக தோற்று அடுத்த தேர்தலில் நடிகர் அஜித் அரசியல் கட்சி தொடங்கி அவர் வெல்வார் போன்ற தோற்றம் உருவாக்க பட்டிருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்றேன்?
உறுதியாக அஜித்துக்குத் தான். .வாக்கை மாற்றி கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் மாற்றம் உண்டாகும் என்றார்.
இப்போது படித்தவர், பண்பட்டவர், மரியாதைக்குறியவர் என நான் அவர் மீது கொண்டிருந்த எண்ணங்கள் முற்றிலுமாக எம்மில் நீங்கி இருந்தது.
இப்படியான மாற்றம் வேண்டும் கோஷ்டிகளுக்கு மத்தியில் தொடர்ந்து பழைய கட்சிகளுக்கே வாய்ப்பு அளிப்பவர்கள் எவ்வளவோ தேவலை என்றே தோன்றியது.
-பகிர்வு பதிவு.

தமிழ்
jothisri retweetledi
jothisri retweetledi
jothisri retweetledi
jothisri retweetledi

வாக்கு சதவீதம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கட்டும்….
எவ்வளவு வேண்டுமானாலும் குறையட்டும் @Seeman4TN
தயவு செய்து சோர்வு அடையாதீர்கள் அண்ணா!!!!!
இன்னும் வீரியத்துடன் அடுத்த தேர்தலில் களம் காண்போம்…. தம்பிகள் உங்களோடு💪💪💪💪
என் ஆசை ஒன்றே ஒன்றுதான்….. காரைக்குடியில் வெற்றி பெற்று விட்டாலே போதும்….. அந்த தொகுதியை முன் மாதிரியாக வைத்து அடுத்த தேர்தலில் பல தொகுதிகளை கைப்பற்றி விட முடியும்….. 🤞🤞🤞🤞🤞🤞🤞
#ntk #NTK4Tamilnadu #naamtamilar #நாம்தமிழர் #சீமான்

தமிழ்
jothisri retweetledi
jothisri retweetledi

தமிழகத்தின் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் IAS அவர்கள், தற்போது ஒரு முக்கிய முன்னெடுப்பை எடுத்துள்ளார். ஊழலுக்கு எதிரான போர்: அதிமுக, திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியும் ஊழலை ஒழிக்க முன்வரவில்லை. மாற்றத்திற்கான வரவேற்பு: ஊழலை முதன்மையாக ஒழிக்க நினைக்கும் நாம் தமிழர் கட்சியை நாங்கள் வரவேற்கிறோம்.
-IAS சகாயம்.
🙏🏻😍🔥
தமிழ்











