$PRNT retweetledi

பாஜக கூட்டணி ஆட்சி நடத்தும் பீகாரரில் உள்ள பாகல்பூரில், 1020 ஏக்கர் நிலத்தை அதானி பவர் நிறுவனத்திற்கு 30 ஆண்டுகளுக்கு, மொத்தம் 30 ரூபாய்க்கு, (ஆண்டுக்கு ரூ .1 மட்டுமே) லீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹரிங்கோல் கிராமவாசிகள் தங்கள் வளமான நிலங்களை மலிவான விலையில் ஒப்படைக்க மிருகத்தனமான மிரட்டல்களை எதிர்கொள்கின்றனராம்.
முதலில் பீகார் அரசு இங்கு நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை தொடங்குவதாக பட்ஜெட்டில் அறிவித்துவிட்டு, குறைந்த விலையில் மின்சாரம் என்று ஆசைகட்டி மக்களை ஏமாற்றி இந்த நிலத்தை பிடுங்கிக்கொண்டு தற்போது அதானிக்கு அதை அப்படியே கைமாற்றி விட்டிருக்கிறார்கள்.
நியாயமான இழப்பீடு இல்லை என்று மோடி அங்கு வரும் நாள் முறையிடலாம் என்று இருந்த விவசாயிகள் அத்துணை பேரும் மோடி திரும்பி செல்லும் வரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனராம்.
விவசாயிகளுக்கு சொந்தமான பத்து லட்சத்திற்கும் மேலான காய்க்கும் மாமரங்களும், காட்டு மரங்களும் புல்டோசர் உதவியுடன் தரை மட்டம் ஆகிக் கொண்டிருக்கிறது.
அதானி என்ற ஒற்றை மனிதனுக்கு மொத்த இந்தியாவையே பட்டா போட்டு கொடுக்கிறார் இந்த நேர்மையின் சிகரம்.
மோடிஜி நீங்கள் விஷம் குடிக்காதீர்கள், இந்த நாட்டில் பிறந்த பாவத்திற்கு எங்களுக்கு விஷம் கொடுத்து விடுங்கள்.
ஒத்த ரூபாய்
தமிழ்











