💀வசந்த்

10.4K posts

💀வசந்த் banner
💀வசந்த்

💀வசந்த்

@vishva0073

#தமிழ்தேயன் #பிராபாகரனிசம் #ஈழஏதிலி #வாழுவாழவிடு #bodybuilding #badminton #ntk #seeman #tamilanstock❤️💛

EELAM, LONDON Katılım Ağustos 2018
515 Takip Edilen1.6K Takipçiler
💀வசந்த் retweetledi
வன்னியின் மைந்தன்
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேரவில் வலைப்பாடு பொன்னாவெளி கிராஞ்சி ஆகிய கிராமங்களில் சுன்னக்கல் அகழ்வு கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தித்திட்டம் ஆகியவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று (28) முன்னெடுக்கப்பட்டது
தமிழ்
0
10
18
226
💀வசந்த் retweetledi
ஒளிக்கீற்று
போராட்ட இலட்சியத்தில் ஊறிவளர்ந்தவன் லெப். கேணல் ஜெரி . ஜெரியை தெரிந்த யாரிடமாவது போய்க்கேளுங்கள். ஒரு நேர்த்தியான, அழகான இராணுவச் சீருடை தரித்த உருவத்தையே எல்லோருக்கும் சொல்வார்கள். அது அவனுக்கே தனித்துவமானது. அவனது வாழ்க்கை முறையே சற்று வித்தியாசமானது. எல்லா மனிதர்களும் அப்படி வாழமுடியாது. அதனால் அவனின் இயல்பு எல்லோருக்கும் பிடித்தமானதாகவும் இருக்காது. ஆனாலும் அவனின் இயல்பை எல்லோரும் பெற்றுவிட முடியாது. அந்த மனிதனின் சுவடுகளைத்தான் இந்தக் குறிப்புக்கள் சொல்லி நிற்கின்றன. ஜெரியை வீட்டில் அப்பன் என்றுதான் அழைப்பார்கள். ஆனாலும் சின்ன வயதிலேயே அவனின் செயற்பாடுகள் குழந்தைத்தனமானதாக இருக்கவில்லை. எப்போதும் ஆழ்ந்த சிந்தனையிலேயே இருப்பான். அவன் சும்மா இருப்பதில்லை. எதையாவது எடுத்துவைத்து ஆராச்சி செய்துகொண்டிருப்பான். 1985ஆம் ஆண்டு அப்போது அவனுக்கு பதினாறு வயதுதான் ஆகியிருந்தது. நாட்டில் அப்போது சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் அவன் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்னால் ஏன் போராட முடியாது? என்ற கேள்வி அவனுள் எழுந்தது. ஒரு நாள் அவன் இயக்க முகாமொன்றிற்கு சென்று விட்டான். தானும் போராடப்போவதாகச் சொன்னான். ஆனால் அங்கே நின்ற போராளிகள் ஏற்பதாக இல்லை. இருபத்தி ஒரு நாட்கள் அவர்களுடன் நின்று தானும் போராடப் போவதாகக் கேட்டும், வயது போதாததால் சோகத்தோடு திரும்பினான். தான் எப்படியும் போராட வேண்டும் என்ற அவனின் எண்ணம் கொஞ்ச நாட்கள் கழித்து நிறைவேறியது. அவனுக்கு மனதில் ஆனந்தம். தானும் போராடலாம் என்ற உத்வேகம் அவனுள் உருவாகியது. யாழ். சாவகச்சேரியில் நடைபெற்ற “சாவா – 01” பயிற்சி முகாமில் ஆரம்பப் பயிற்சிகளை அவன் பெற்றுக்கொண்டான். பயிற்சிகள் முடிந்ததும். யாழ். மாவட்ட படையணியில் இருந்து செயற்பட்டுவந்தான். இந்த நாட்களில் தான் இந்திய இராணுவம் எங்களது தேசமெங்கும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்திய இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையேயான சண்டை மூண்டது. சண்டைகள் பரவலாக நடைபெற்றன. ஜெரியும் இந்த சண்டைகளை எதிர்கொண்டான். இந்தச் சண்டையின் ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைத் தளம் யாழ்ப்பாணத்திலிருந்து மணலாற்றுக் காட்டுக்கு இடம் மாறுகின்றது. உலகத்தின் நான்காவது வல்லரசு நாடு எங்களது போராட்டத்தை நசுக்க முற்பட்டபோது அதை முறியடிக்கத் தலைவன் வகுத்த திட்டத்தில் முதன்மையாய் இருந்தது மணலாற்றுக் காடு. அந்தக் காட்டில் தலைவருடன் முகாமிட்டிருந்த போராளிகளுக்குள் ஜெரியும் இருந்தான். ஆந்த வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும் போராளிகள் எல்லோரும் மகிழ்வாக ஏற்றுக்கொண்டார்கள். காட்டில் எந்த வசதிகளுமே இருக்கவில்லை. எல்லாமே தேடவேண்டும். எல்லாவற்றையும் புதிதாகவே உருவாக்கவேண்டும்.  தலைவர் திட்டங்களை வகுத்து ஒவ்வொன்றாகச் செயற்படுத்தினார். அடிப்படை வசதிகள் எல்லாவற்றையும் உருவாக்கவேண்டும். எல்லா வளங்களையும் வெளியில் இருந்தே கொண்டு வரவேண்டும். ஆனால் அந்த மணலாற்றுக் காட்டைச் சுற்றி இந்திய இராணுவம் முற்றுகையிட்டுக் கொள்கிறது. வெளியில் இருந்து எதைக் கொண்டுவருவதானாலும் இந்திய இராணுவத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கொண்டுவரவேண்டும். சில வேளைகளில் சண்டையிட்டுத்தான் பொருட்களைக் கொண்டுவரவேண்டும். இந்தக் கடினமான பணி ஜெரிக்கும் இருந்தது. நீண்டதூரம் பொருட்களைக் காவிவரவேண்டும். இந்தப் பொருள்காவும் பணியை “கம்பாலா” என்றுதான் போராளிகள் அழைப்பார்கள். ஒரு தடியில் பொருட்களைத் தொங்கவிட்டு, இருவர் தோள்களில் வைத்தபடி கொண்டுவர வேண்டும். கம்பாலா அடித்தால்தான் எல்லோருக்கும் உணவு கிடைக்கும். அதுவும் போதிய அளவு இருக்காது. ஊடல் சோர்வாக இருந்தாலும் கம்பாலா அடித்தே ஆகவேண்டும். போராளிகள் சில வேளைகளில் உடற்களைப்பில் இருந்துவிடுவார்கள். ஆனால், ஜெரி எப்போதுமே மற்றவர்களை உற்சாகப்படுத்துவான். “புறகென்ன நாங்கள் தானே தூக்க வேணும் வாங்கோ போவம்” என்றபடி அவன் புறப்பட்டுவிடுவான். சலிப்பு என்பது அவனிடம் இருந்ததில்லை. எந்த கடினங்களையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தன்மை அவனிடமிருந்தது. காட்டில் எந்தவேளையும் இந்திய இராணுவத்தை எதிர்பார்த்தபடியே இருக்க வேண்டும். ஒவ்வொரு போராளியும் நீண்ட நேரம் காவற்கடமை புரிய வேண்டும். எஞ்சிய நேரங்களில் சமையல் ஏனைய வேலைகள் என அவர்கள் எப்போதுமே இயங்கிக்கொண்டே இருக்கவேண்டிய நிலை. ஓய்வு என்பதும், உறக்கமென்பதும் மிகக்குறைவே. ஆனாலும் எல்லோரும் இதை ஏற்றுக்கொண்டார்கள். ஜெரியும் இதைச் சாதாரணமாகவே ஏற்றுக்கொண்டான். குளிப்பதற்கு போதியளவு தண்ணி இருக்காது. கடும் உழைப்பால் உடல் அசதியாக இருக்கும் ஆனாலும் ஜெரி எப்போதும் அழகாகச் சீருடை தரித்து முகச்சவரம் செய்து இராணுவச் சப்பாத்து அணிந்து ஒரு அழகான தோற்றத்தில் காட்சி அளிப்பான்.
ஒளிக்கீற்று tweet mediaஒளிக்கீற்று tweet media
தமிழ்
0
9
31
705
💀வசந்த் retweetledi
வன்னியின் மைந்தன்
தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தமிழ் மக்களின் நிதியுதவியை முன்னாள் போராளி ஒருவர் கோரியுள்ளார் முன்னாள் போராளியான எதிர்மன்னசிங்கம் கிரேசியன் என்பவருக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது தனது வாழ்நாளின் பெரும் பகுதியை தடுப்பு முகாம்களிலும் சித்திர வதைக்கூடங்களிலும் கழித்துள்ள இவர் தற்போது கடுமையான உடல்நலப் பாதிப்புக்குள்ளாகியுள்ளார் வடக்கில் படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு பிரதி அமைச்சரின் அறிவிப்பு வடக்கில் படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு 70 இலட்சம் ரூபாக்கும் மேல் செலவு இது குறித்து அவர் தனது ஆதங்கத்தை பகிர்ந்து கொள்கையில் எனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் இந்தச் சிகிச்சைக்கு உடனடியாகச் செய்யா விட்டால் எனது உயிர் பிரிந்து விடும் அபாயம் உள்ளது அவ்வாறு நேர்ந்தால் எனது மனைவி பிள்ளைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள் இந்த அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 70 இலட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகும் என மதகப்பிடப்பட்டுள்ளது என்னிடம் அதற்கான பொருளாதார வசதி இல்லை எனவே எனது தமிழ் மக்கள் என்னை எந்த நிலையிலும் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன் தயவுசெய்து எனக்கு உதவுங்கள் என அவர் கண்ணீருடன் பணிவன்போடு கோரிக்கை விடுத்துள்ளார் இந்த நிலையில் உயிர் ஆபத்தான நிலையில் உள்ள இந்த முன்னாள் போராளியின் சிகிச்சைக்கு உதவ விரும்புபவர்கள் கீழே உள்ள வங்கி கணக்கு இலக்கத்தின் ஊடாகவே அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொண்டு தங்களது பங்களிப்பை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது வங்கி விபரங்கள் பெயர்:-எதிர்மன்னசிங்கம் கிரைசியன் (Ethirmannasingam Grashan) வங்கி:-இலங்கை வங்கி (BOC) கிளை:-கல்வியங்காடு கணக்கு இலக்கம்:-94948569 தொலைபேசி இலக்கம்:-0094775621613
வன்னியின் மைந்தன் tweet media
தமிழ்
2
51
71
1.7K
💀வசந்த் retweetledi
வன்னியின் மைந்தன்
முதல் பெண் எல்லப்படை மாவீரர் வீரவேங்கை ரதி அக்கா நினைவுகளுடன்
தமிழ்
0
26
94
907
💀வசந்த்
💀வசந்த்@vishva0073·
#வீரவணக்கம்
ஒளிக்கீற்று@Tamileelam26

தமிழீழ தாயகத்தில் அத்துமீறி நுழையும் எதிரியின் உலங்கு வானூர்தியை அழித்தொழிக்கும் மேஜர் சுவர்ணன்.!  29.05.2000 அன்று  மன்னார் தீவு பகுதியில் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு தழுவிய மேஜர் சுவர்ணன்  ஆகிய  மாவீரரின்  26ம் ஆண்டு  வீரவணக்க நாள் இன்றாகும் ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு – வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நேரம். இப்போது உமையாள்புரம் இராணுவ முகாமைச் சூழ அவ்வப்போது ‘சில்லறைச் சண்டைகள்’ மூண்டு தணிந்து கொண்டிருந்தன. ஒருநாள் இரவு உமையாள்புரத்தில் புலிகளின் தாக்குதலணியொன்று எதிரி மீதான திகைப்புத்தாக்குலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அவ்விடத்தில் நிலைகொண்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த மேஜர் சங்கர் தலைமையிலான ஒரு கொம்பனியே அந்தத் தாக்குதலுக்கான ஆயத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அது பெருமெடுப்பான நிலமீட்புத் தாக்குதலில்லை. எதிரிகள் சிலரைக் கடுமையான காயத்துக்குள்ளாக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் தாக்குதல். இவை யாவும் சுவர்ணன் தலைமையிலான அணியொன்றை மையமாக வைத்துத்தான் நடத்தப்படுகிறது. இந்தத் தாக்குதல் திட்டம் நடைபெறப்போகும் நேரத்தில் சுவர்ணன் தனது அணியோடும் ‘பொருளோடும்’ இராணுவத்தின் முன்னணி நிலைகளைக் கடந்து தென்மராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்தான். 1996 ஆம் ஆண்டு ஆனிமாதத்தின் நடுப்பகுதியில் ஒருநாள். வன்னிக் காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நாங்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். வேறிடத்திலிருந்து கழற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த லக்சபானா மின்கோபுரமொன்றை காட்டுக்குள் ஓரிடத்தில் மீளப் பூட்டும் வேலைதான் அது. அதற்கான கற்றூணை நிலத்துள் நாட்டும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஆழக்கிண்டிய கிடங்கில் கற்றூணை இறக்கிவிட்டோம். இனி நிமித்திவைத்து மண்போட்டு மூடவேண்டும். கல்லோ தொன் கணக்கில் நிறையுடையது. மூன்றுபக்கமிருந்து கேபிள்கள் போட்டு இழுத்து நிமிர்த்திவைத்திருக்க ஒருவர் தூணில் கேடர்கள் பொருத்தி நிலைப்படுத்த வேண்டும். அதன்படி நாங்கள் மூன்றுபக்கமிருந்து இழுத்து தூணை நிமிர்த்திவிட்டநிலையில் கேடரைப் பூட்ட வேண்டிய சுவர்ணன் அதைச் செய்யாமல் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். தூணை இழுத்து வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கைகடுத்தது. “டேய் சுவர்ணன்! என்ன மிலாந்திக் கொண்டிருக்கிறாய்? கெதியா கேடரைப் பூட்டு” இது ரகுவண்ணா. “சுவர்ணன் மாஸ்டர் எண்டெல்லோ கூப்பிடச் சொன்னனான்? அப்பிடிக் கூப்பிட்டு வேலையைச் சொல்லுங்கோ, செய்யலாம்.” இது சுவர்ணன். “டேய்! ஆளப்பார் தேவாங்கு மாதிரி இருந்துகொண்டு மாஸ்டரோ?…. பகிடியை விட்டிட்டு கெதியாப் பூட்டடா, கை கடுக்குது” ஒருபக்கத்தில் கேபிளை இழுத்துப்பிடித்திருந்த மைந்தன் கத்துகிறான். சுவர்ணன் அசைவதாயில்லை. செங்கோல் பிடித்த மன்னன் போல ஒருகையில் கேடரைப்பிடித்தபடி மறுகையை இடுப்பில் வைத்தபடி ஒயிலாக ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தில் வேறு ஆட்களுமில்லை. அடிக்கப் போவதென்றாலும் ஒருவர் கேபிளை விட்டுவிட்டுத்தான் போகவேண்டும். “சுவர்ணன் மாஸ்டர், அச்சா மாஸ்டரெல்லோ, ஒருக்கா கேடரைப் பூட்டிவிடுங்கோ மாஸ்டர்”… ஒருமுனையிலிருந்த குமுதன் கெஞ்சினான். அதன்பிறகுதான் சுவர்ணன் தனது வேலையைச் செய்தான். அன்றைய செயலுக்குப் பரிகாரமாக தேங்கிநின்ற சேற்றுநீரில் எங்களால் புரட்டியெடுக்கப்பட்டான். இப்படித்தான் இருப்பான் சுவர்ணன். எந்தநேரமும் ‘சீரியசாக’ பகிடி விட்டுக் கொண்டிருப்பான். தன்னை மாஸ்டர் என்றுதான் அழைக்க வேண்டுமென்று அடிப்படைப் பயிற்சி முடிந்து சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய காலத்திலேயே கதைக்கத் தொடங்கிவிட்டான். உச்சிவெயிலில் வாட்டியெடுக்கப்பட்ட நிலையில் கொட்டிலுக்கு வந்தால் சுவர்ணனின் சேட்டைகள் இன்னும் கொதியைக் கிழப்பும். அதுவும் கோபம் உச்சத்துக்கு வரும்போது திக்கத் தொடங்கிவிடும் ரகுவண்ணாவை வேண்டுமென்றே அவன் படுத்தும்பாடு சொல்லி மாளாது. தன்னை மாஸ்டர் என்று சொல்லச் சொல்லிச் நச்சரிக்கும் எந்தவிடத்திலும் சிறுபுன்னகைகூட அவனிடம் வராது. புதிதாக அவனோடு பழகுபவர்கள் அவன் சீரியசாகவே கதைப்பதாக நினைத்துக் கொள்வார்கள். அவன் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். ஆனால் சுவர்ணன் சிரிப்பதில்லை. எல்லாவற்றையும் சீரியசாகவே கதைத்துக் கொண்டிருப்பான்.

QHT
0
0
1
50
💀வசந்த் retweetledi
Thevan
Thevan@ThevanKaruppan·
எத்தனை அவமானங்கள், எத்தனை அவதூறுகள் வந்தாலும் விடாமல் முன்னின்று, தேசியத்தலைவர் இட்ட பணியை முன்னெடுத்து இன்றுவரை தமிழ்த்தேசியத்தை முன்னெடுப்பவர் சீமான் அண்ணை. - அன்புமாறன் நிர்வாகப்பிரிவு தலைமைச்செயலகம் (2009 வரை)
தமிழ்
3
145
317
2.9K
💀வசந்த் retweetledi
Outis
Outis@_outisk·
தமிழ்தேசியவாதி சிவாஜிலிங்கம் அய்யா அவர்களின் சிகிச்சைக்காக சீமானின் பெயரில் நிதி உதவி கிடைத்துள்ளது. நிதி கிடைக்க உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள்!!
தமிழ்
4
15
74
3.2K
💀வசந்த் retweetledi
🦚மென்பனி🦚
எங்கள் அண்ணன் சீமான் பேரன்புக்காரன், ஐயா சிவாஜிலிங்கம் அவர்களின் கிட்னிமாற்று சிகிச்சைக்கு நிதியுதவி அளித்திருக்கிறார்🙏🏽🙌🏽 நன்றிண்ணே @Seeman4TN 🙇🏻‍♀️🙏🏽♥️💛🫡 இவரைப் பார்த்தாடா நாய்களே திரள்நிதி என்று நகையாடுகிறீர்கள் 💦😡
தமிழ்
1
94
235
2.2K
💀வசந்த் retweetledi
Thevan
Thevan@ThevanKaruppan·
சீமான் அண்ணைக்கு ஆதரவாக ததேமமு செயலாளர் கஜேந்திரன் அண்ணை வழங்கிய செய்தி
தமிழ்
4
25
96
878
💀வசந்த் retweetledi
Thevan
Thevan@ThevanKaruppan·
தலைவரைக் கடவுள் போல மதிப்பதாகச் சொல்லி நடித்துக்கொண்டு, தலைவர் கூறிய வேலையைச் செய்துகொண்டிருப்பவனை இழிவுபடுத்துபவன் போல கேவலம் கெட்டவன் யாரும் இல்லை - தமிழீழத்தின் பிரபல பாடகரும் 2007 வரை தவிபு வின் பரப்புரைப்பிரிவில் இருந்தவருமாகிய இரா.செங்கதிர்அவர்கள் சீமான் அண்ணைக்கு ஆதரவாக..
தமிழ்
4
121
288
6.2K
💀வசந்த் retweetledi
Thevan
Thevan@ThevanKaruppan·
சீமானின் கையை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள் தமிழர்களே - கேணல் கிட்டு அவர்களின் மூத்த சகோதரர் காந்திதாசன் வேண்டுகோள். #அலப்பறைகெளப்புறோம்
தமிழ்
6
669
1.7K
12.8K
💀வசந்த் retweetledi
Thevan
Thevan@ThevanKaruppan·
தலைவரையும் போராட்டத்தையும் ஆழமாக நேசிப்பவர் சீமான் அண்ணா - மயூரி இல்லத்தில் வாழ்ந்த போராளி தேவரூபி அக்கா (முக்கிய குறிப்பு: சீமான் அண்ணையை இழிமனநிலையில் எழுதியும் பேசியும் வரும் twittter ஞமலிகள் ஊளையிட்டுச் சாகும்வரை பதிவுகள் தொடரும்)
தமிழ்
4
216
483
5.6K
💀வசந்த் retweetledi
Thevan
Thevan@ThevanKaruppan·
(1) சீமானும் பாலும் (St. Paul): முடிவிலா ஆட்டத்தின் பண்புகளை பலர் உணர்வதில்லை. அதன் செயற்பாடும் விளைவும் தலைகீழாக இருக்கும். அதில் ஒரு முக்கிய பண்பு: "முதலில் வந்தவர்களுக்கு கடைசி இருக்கை, கடைசியில் வந்தவர்களுக்கு முதல் இருக்கை.". இதைக் கூறியவர் முடிவிலா ஆட்டம் ஆடிய ஏசு பிரான்
Thevan tweet media
தமிழ்
1
5
20
486
💀வசந்த் retweetledi
Thevan
Thevan@ThevanKaruppan·
ஐயா சிவாஜிலிங்கம் அவர்களின் மருத்துவத்திற்கு சீமான் அண்ணை தன்பங்கு நிதிவழங்கி உதவினார்.
தமிழ்
4
46
126
1.5K
J
J@Whisperer2024·
@___Maran @vishva0073 not nice at all. You should really donate that money
English
2
0
0
51
மாran - Team Red 📮 HOTD
என்ன AI ல edit பண்ண image ணு தெரியல London , Landon ணு எழுதி வச்சுருக்கு ! இல்ல இப்பிடித்தான் ஊர ஏமாத்திட்டு திரியுரானுகளா ! 🤧.
மாran - Team Red 📮 HOTD tweet media
💀வசந்த்@vishva0073

எம் இனம் காக்க , எம் மொழி காக்க என்னால முடிந்த மற்றுமொறு சிறு பங்களிப்பு, ஒரு ஈழத்தமிழனாக எனது ஆதரவு @Seeman4TN அண்ணணுக்ககே🤗🤗🤗 donate.naamtamilar.org

தமிழ்
4
1
6
889