Anand R mani
264 posts


This is great news for Tamil Cinema!..Thanks to our honourable CM @TVKVijayHQ anna!❤️🙏🏻
@CMOTamilnadu


English
Anand R mani retweetledi

2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சி, உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#DMK

தமிழ்

@UmapathymM @teakkadai1 மதுரை ராம் விக்டோரியாவில் தானே வந்தது. அமிர்தம் தியேட்டரில் hum apke hain koun
தமிழ்

@teakkadai1 மதுரை அமிர்தம் தியேட்டரில் 200 நாளுக்கு மேல் ஓடிய படம்..2 தடவை அந்த தியேட்டரில் பார்த்தேன்..
தமிழ்

சில திரைப்படங்களை, அதை உருவாக்கியவர்கள் அந்தப் படத்தை சிந்தித்த காலகட்டத்திலேயே பார்க்க வேண்டும். அந்த படம் யாருக்கு மனக் கனவுகளை கொடுக்குமோ அந்த வயதிலா பார்க்க வேண்டும்.
அப்படி எல்லாமே சரியாக அமையும் பொழுது, அந்த திரைப்படம் கொடுக்கும் மன கிளர்ச்சி என்பது காலங்கள் கடந்தும் நிலைத்திருக்கும்.
"தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே" சென்னை மெலடி தியேட்டரில் வெளியாகி, அன்றைய இளைஞர்கள் இளைஞிகள் கூட்டத்தைக் கவர்ந்து இழுத்துக் கொண்டு இருந்த காலகட்டம். அன்றைய நாளில், சென்னை நகரக்கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்தவர்கள் அந்த படத்தை பார்க்காவிட்டால் தனித்து விடப்பட்டு விடுவார்கள். சென்னையில் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களும் கூட.
அப்போதைய தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பாஸிகர், தர், கரண் அர்ஜுன் படங்களின் மூலம் அறிமுகமாகி இருந்த ஷாருக்கான் ஹீரோ.
எப்படி ஆரம்பகால ரஜினிகாந்த் வில்லன் வேடங்களுக்கு இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோ, அதுபோலவே பாஸிகர்,தர் படங்களின் மூலம் ஷாருக்கானும் இந்தியா முழுவதும் வரவேற்பு பெற்று இருந்தார்.
நான் அப்போது தங்கி இருந்த சென்னை திருவல்லிக்கேணி மேன்சனில், 1996 ஆரம்ப காலகட்டம் அது. எப்பொழுதும் இந்த படத்தின் பாடல்களை பக்கத்து அறைக்காரர் ஒலிக்க விட்டுக் கொண்டே இருப்பார்.
பணி முடிந்து சனிக்கிழமை இரவு, ரூமுக்கு திரும்பி இருந்த நேரம். பக்கத்து அறைகாரர் மற்றும் என்னுடன் தங்கி இருந்தவர் எல்லோருமே இந்த படத்துக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள். செம படங்க. போயிட்டு வந்துடலாம் என்று என்னையும் இரவு காட்சிக்கு அழைத்துக் கொண்டார்கள்.
அப்போது மெலடி தியேட்டரில் 30 ரூபாய் டிக்கெட். சிறப்பாக ஏசி வசதி செய்திருப்பார்கள். சென்னையின் பிப்ரவரி மார்ச் மாத இரவு நேர வெக்கைக்கு ஏசி தியேட்டர்கள் பெரும் இதம்.
தியேட்டர் முழுவதும் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. ஏதோ கல்லூரி ஆண்டு விழாவிற்கு சென்றது போல ஒரு வைப்.
படம் துவங்கியது. ஐரோப்பாவின் குளுகுளு லொகேஷன்கள். அதன் பின்னர் பஞ்சாப் கிராமப்புறம் என கலகலப்பான, நெகழ்ச்சியான படம். NRI ரொமான்ஸ் என்கிற புதிய ஜானரை இந்தி திரை உலகிற்கு இந்தப் படம் அளித்தது.
படம் முடிந்து, சில நாட்களுக்கு இந்தப் படத்தின் பாதிப்பு இருந்து கொண்டே இருந்தது.
இப்போது புதிதாக இந்தப் படத்தை பார்க்கும் இளைஞர்கள் இதை வெறித்தனமாக ரசிப்பார்களா படத்தோடு ஒன்றி விடுவார்களா என்றால் உறுதியாக சொல்ல முடியாது.
அந்தந்த கால சிந்தனைகளில் உருவான கலை வடிவங்களை அந்தந்த கால இளமை மனதோடு ரசிக்கும்போது கிடைக்கும் Synergy இரண்டில் எந்த ஒரு காலம் தவறினாலும் கிடைப்பதில்லை.

தமிழ்

@elan49638332361 #வெல்லட்டும்_உதயசூரியன்.!
#திமுகவே_தமிழ்நாட்டின்_தேவை
#Dr_கோகிலாமணி_MBBS
#VoteforDMK_Alliance

இந்து வர்ணாசிரம மனு தர்மத்தை ஏற்க மறுத்ததால் கீழ் சாதி முத்திரை குத்தப்பட்டு பல்வேறு தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளான ஒரு தலித் பெண் சமைத்தால் உயர்சாதி இந்துக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மறுத்தனர்.அந்த ஒடுக்கப்பட்ட உழைக்கும் சமூகத்தில் பிறந்து கடின உழைப்பாலும் கல்வித் திறமையாலும் கலைஞர் கொடுத்த உள் இட ஒதுக்கிட்டாலும் இன்று மருத்துவராகி அவிநாசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் மருத்துவர் கோகிலாமணி அவர்கள். இவருடைய வெற்றி தான் சமூக நீதிக்கான வெற்றி சமத்துவத்திற்கான வெற்றி சாதி ஒழிப்புக்கான கட்சி மனிதநேயத்திற்கான வெற்றி மக்களுக்கான வெற்றி. மருத்துவர் கோகிலா மணியை ஆதரிப்போம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைபபோம். இது நமது கடமை மட்டுமல்ல பெரியார் மண்ணிற்கான பெருமையும் கூட!🌅 @DMKITwing @mkstalin @Udhaystalin

தமிழ்
Anand R mani retweetledi

🤝🩺மாற்றத்தை நோக்கி அவிநாசி!
அன்பார்ந்த அவிநாசி தொகுதி வாக்காளப் பெருமக்களே, கல்வி மற்றும் சேவையை லட்சியமாகக் கொண்டு களமிறங்கியுள்ள டாக்டர். கோகிலாமணி அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்திடுங்கள்.
மறக்காதீர்கள்
📅 தேதி: ஏப்ரல் 23, 2026
☀️ சின்னம்: உதயசூரியன்🌄
🔢 வரிசை எண்: 1
வெற்றி நமதே! சின்னம் உதயசூரியனே!🌄🖤❤️
#நம்மபொண்ணு_நம்மதொகுதி
#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #gokilamani4avinashi #vote4gokilamani
தமிழ்


வென்று வாருங்கள் சகோதரியே
உங்கள் வெற்றிக்காக உடன்பிறப்புகள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறோம் 🖤❤
#VoteForDMK
தமிழ்
Anand R mani retweetledi

நான் உங்கள் டாக்டர் கோகிலாமணி...
நடைபெறும் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை செலுத்தி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன்🖤❤️🌄
தேர்தல் நாள் - 23 ஏப்ரல் 2026
உங்கள் சின்னம் - உதயசூரியன் 🌄
@mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam
@dmk_raja #நம்மபொண்ணு_நம்மதொகுதி
#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #gokilamani4avinashi #vote4gokilamani
தமிழ்
Anand R mani retweetledi

எடப்பாடி பழனிசாமியின் அநாகரிகப் பேச்சுகள், விஜய்யின் நெல்லை கூட்டம் ஆகியவற்றால் திருப்பரங்குன்றம் விவகாரம் அதிகம் கவனம்பெறவில்லை.
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை நிறைவேற்ற முடியாது என்பதில் தி.மு.க அரசு உறுதியாக நின்றது. ‘நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் பிரச்சினையைப் பெரிதாக்கியது தி.மு.க அரசுதான்’ என்று சட்டவாதம் பேசியது அ.தி.மு.க. பாம்பும் சாகாமல், தடியும் உடையாமல் நிலைப்பாடு எடுத்தது நாம் தமிழர் கட்சி. ஒருபடி மேலே போய் ‘இது தி.மு.கவும் பா.ஜ.கவும் நடத்தும் நாடகம்’ என்றது த.வெ.க. ராம ரவிக்குமாரும் ஹெச்.ராஜாவும் தி.மு.க அரசை சபித்தார்கள். ஜி.ஆர்.சுவாமிநாதன் தன் சட்ட அதிகாரங்களைத் தாண்டி அரசியல்வாதியாகவே நடந்துகொண்டார். ஆனாலும் தி.மு.க அரசு தன் உறுதியை தளர்த்தவில்லை.
இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு கடிவாளம் போட்டிருக்கிறது. ‘தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்’ என்று பொதுநல வழக்கு தொடுத்தவரை கடுமையாக எச்சரித்து அபராதம் விதித்திருக்கிறது. ஜி.ஆர்.சுவாமிநாதனின் பிடிவாதத்துக்கு தமிழ்நாடு அரசு கொஞ்சம் வளைந்து கொடுத்திருந்தாலே அடுத்த அயோத்திக்கான விதை விதைக்கப்பட்டிருக்கும்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெல்லலாம்; வெல்லாமல் போகலாம். ஆனால் ஓர் அபாயகரமான மதவாத செயல்திட்டத்தை தடுத்து நிறுத்தியதில் தி.மு.க அரசு வென்றிருக்கிறது; தமிழ்நாடு வென்றிருக்கிறது.
தமிழ்
Anand R mani retweetledi

234 தொகுதிகளிலும் விஜய் வேட்பாளர்களை நிற்கவைத்து இருக்கிறார். அதில் 10 முதல் 15 தொகுதிகள் வரை மட்டுமே வேட்பாளர்களை அந்த தொகுதி மக்களுக்கு தெரிகிறது.
தேர்தல் கருத்துக்கணிப்பில் ஒரு வேட்பாளர் எந்த அளவுக்கு மக்களிடையே பிரபலமாக இருக்கிறார் என்பதை பொருத்தே அவருக்கான வாக்குகள். இதனை Recognition Index / Awareness Score என்போம்..
வாக்குபதிவில் முதல் தகுதி ஒரு வேட்பாளர் அந்த தொகுதி மக்களுக்கு மிகவும் அறிமுகமானவராக இருக்கலாம். அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிரச்சனையில்லை. அவர் அந்த பகுதி மக்களுக்கு அறிமுகமானவராக இருக்கவேண்டும்.
அடுத்த அந்த வேட்பாளர்கள் அந்த பகுதியின் பிரச்சனைகளில் எந்த அளவுக்கு விழிப்புணர்வுமிக்கவர்களாக இருக்கிறார்கள். ( Cognitive Component ) எப்படி அதனை முதன்மைப்படுத்தி ஆளுங்கட்சிக்கு சவாலான விடயமாக மாற்றுகிறார்கள் என்பது முக்கியம் . ( கடந்த தேர்தலில் உதயநிதி செய்த" ஏய்ம்ஸ் செங்கல் " சம்பவம் ). அப்படி எந்த பிரச்சனையும் தேர்ந்த தா.வெ.க. வேட்பாளர்களாலேயே முன்னிலைப்படுத்த முடியவில்லை.
ஆதவ் அர்ஜுனா போன்றார் உருவாக்கிய பாட்டில் வீசிய சம்பவம் அண்ணாந்து பார்த்து தன் மூஞ்சிலேயே “தூ...! “ என எச்சில் துப்பிகொள்வது போன்றது.
விஜய் என்ற நாயக பிம்பமும் விசில் சின்னம் இரண்டும் ஓரளவுக்கு பரவலாக தெரிந்திருக்கிறது. ஆனால் அது ஆழமாக ஊடுருவவில்லை.
யாருக்கு ? எதற்கு ? என்று கேட்காதீர்கள். விஜய் வரவு எப்படியிருகிறது என்று ஒற்றை வார்த்தையில், ஒரு அமைப்பு கேட்டுகொண்டதற்கு இணங்க, நான்கு நாட்கள் கள ஆய்வுக்கு பின்னர் கேட்டவர்களுக்கு நான் அனுப்பிய மினி நோட் கீழே .
1. இந்த ஆய்வு நேரடியான அரசியல் ஆய்வாக நிகழ்த்தபடவில்லை. 2.வேறோரு நுகர்வோர் சந்தை தொடர்பான ஆய்வில் இடைசெருகலாக Indirect Induction செய்யப்பட்டது.
3. இது கருத்துக்கணிப்பு அல்ல நுகர்வோர் மனோபாவத்தின் வெளிப்பாடு.
____________________
“
விஜய் போன்ற பிரபல நடிகர்கள் வெளியே வரும்போது கூட்டம் கூடுவது என்பது இயல்புதான். அந்த கூட்டத்தை ஒரு Excitement Mode க்கு கொண்டு செல்வது என்பது Collective Thought. கிறித்துவ ஜெபக்கூட்டங்களில் பார்த்திருப்போம் கூட்டம் ஒருமித்த நிலையில் கதறும் புலம்பும். அதுபோன்ற ஒரு Group Hypnotic சூழல்தான். டிவியில் சீரியல் பார்த்தாலே கண்கலங்கும் எமோஷனல் பயிற்சியில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு இதுபோன்ற சூழல்கள் மேலும் எமோஷனல் ஆக்குவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. Vijay போன்ற பிரபல நடிகருக்கு மக்கள் திரண்டு வருவது, அவரை நேசிக்கும் ரசிகர்கள் ஆர்வம் மற்றும் கூட்டத்தின் தாக்கம் தான். இதை உளவியலில் “audience effect” என்று சொல்லலாம்.
கூட்டத்தில் மக்கள் ஒரே இடத்தில் சேரும்போது, அவர்களின் உணர்வுகள் அதிகரிக்கும். excitement, உற்சாகம், கொஞ்சம் பதற்றம் ஏற்படும். கூட்டத்தில் ஒரு கருத்து அல்லது உணர்வு வலுவாக இருக்கும்போது, அது மற்றவர்களையும் ஊடுருவும். ஜெயலலிதா இறுதி ஊர்வலத்தின் போது பல திமுககாரர்களே கதறி அழுதிருக்கிறார்கள். இதே போன்று கலைஞருக்கும் அதிமுகவினர் அழுத கதையுண்டு. இதை group influence என்று அழைக்கலாம்.
இந்த கூட்டம் மக்கள் மனதில் ஒரு soft influence கொடுக்கும். Vijay போன்ற பிரபலத்துக்கு மக்கள் கொண்ட admiration காரணமாக சிலர் அவரை ரசித்து, சில நேரங்களில் அவருடைய கருத்துகளால் பாதிக்கப்படலாம்.
ஆனால் இது நேரடியாக வாக்குகளாக மாற்றாது. தனிநபர் தனது சுய விருப்பம், நியாயமான பரிசீலனை மூலம் வாக்களிப்பார்.
சுருக்கமாக, Vijay க்கு கூடும் கூட்டம்:
excitement, உற்சாகம், fan energy உருவாக்கும்
சில subtle social influence தரும்
ஆனால் அவரை நேரடியாக வாக்களிப்பவராக மாற்றாது.
அவரின் பிரபல யோகம் 6 % - 12% . முன்பே தோராயமக சொன்னதுதான்.
இது ஒரு மென்மையான, மறைமுகமான பாதிப்பு மட்டும் தரும்.
விஜய்க்கு கூடும் கூட்டத்தால் ஆளும் திமுகவுக்கு பாதிப்பு இல்லை. திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரித்து திமுகவுக்கு பலம் சேர்க்கிறார் விஜய்.
அதிமுக போன்ற பல கட்சிகளின் தலித் ஓட்டுக்களில் ஒரு சதவீதம் பிரியும்.
அதே போன்று நாம் தமிழர் கட்சியின் ஓட்டுக்கள் சிதறும் என்பதும் உண்மையல்ல. நாம் தமிழர் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளோர் கொஞ்சம் சிந்தித்து செயல்படும் இளைஞர்களாக இருப்பதால் நாதக தனது ஓட்டு வங்கியில் வலிமையாக நிற்கும்.
பின் குறிப்பு
__________
விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லவில்லை. நிச்சயம் பெரும் இளையபட்டாளத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் விஜய்க்கு அடுத்தடுத்து சிறப்பாக அறிவூப்பூர்வமாக கட்சியை முன்னெடுப்பதின் மூலம் வலிமையான மாநில கட்சியாக வர வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பயப்புள்ள நாம் சொன்ன பேச்ச கேட்காதே !
பின் இணைப்பு :
டிடிஎப் வாசன் என்ற யுடியுபருக்கு அவரின் பிறந்தநாளுக்கு கூடிய கூட்டம்.

தமிழ்











