Sabitlenmiş Tweet

நீரின்றி அமையாது உலகு! விவசாயம் இன்றி கிடைக்காது உணவு!
மழை பொய்த்தது.விவசாயம் குன்றியது.விவசாய நிலங்கள் கருவேல மரங்களாக ஆனது.விவசாயிகள் பலர் கூலித் தொழிலாளிகளாக உருவானார்கள்.சிலர் தற்கொலையே ஆயுதமென கையிலெடுத்தார்கள்.இவ்வளவு மாற்றமும் டெல்டா மற்றும் டெல்டாவை சுற்றியுள்ள பகுதிகளில் உருவானதர்க்கு போதிய நீர் பற்றாக்குறையயே காரணம்.இந்த பற்றாக்குறைய போக்க விவசாயத்திற்கு ரெண்டு வழிதான் உள்ளது.ஒன்று பருவமழை பொய்க்காமல் கிடைக்க வேண்டும்.மற்றொன்று ஆற்றிலிருந்து வரும் நீர் தடைபடாமல் கன்மாய்க்கு வந்தடைய வேண்டும்.பருவமழைய விடுங்க, ஆற்றுநீர் பாசனம் முறையாக கிடைத்தாலே போதும் முப்போகம் விளையும்.800கி.மீ நீளமுடைய காவிரியில் 320கி.மீ நீளம் கர்நாடகத்திலும், 416கி.மீ தமிழகத்திலும் வருகிறது.கர்நாடாக, தமிழக எல்லையில் 64கி.மீ உள்ளது.காவிரியில் இந்த 64கி.மீ நீளம்தான் அரசியல்.
இந்த 64கி.மீ நீளத்தில் தான் இன்று நடக்கும் மேகதாது அரசியல் உள்ளது.மேகதாது அணைக்கு 5200கோடி பட்ஜெட் முன்பு கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒதுக்கீடு செய்திருந்தார்.மேகதாது அணைத்திட்டம் 67டிஎம்சி நீரை தேக்கி வைக்கும் என்கிறது கர்நாடகா அரசு.இந்த கோடிக்கணக்கு ஒதுக்கீடு கர்நாடகாவின் குடிநீர் பற்றாக்குறைய போக்கலாம்.புதிய நீர்மின்நிலையம் உருவாகி மின்பற்றாக்குறையே போக்கலாம்.ஆனால் இந்தியாவிற்க்கு அடையாளமான டெல்டா வறண்டுவிடும்..நீங்க எதிர்பார்க்கும் வேளாண் மண்டலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நீடிக்கும்.மேற்கூறியவாறு விவசாயிகள் கூலித் தொழிலாளியாவார்கள்.விவசாய நிலம் வறண்ட நிலமாக இருக்கும்.மீத்தேன் திட்டத்திற்க்கு ஏற்றதாகவும் இருக்கும்..ஆம்,நெடுவாசல் போராட்டத்தின் போது கூட ஒரு வல்லுநர் கூறியிருந்தார்.டெல்டாவில் 600ச.கி.மீட்டருக்கு மேல் மீத்தேன் போன்ற எரிவாயு பொருட்கள் உற்பத்தி செய்யலாம் என்றார்.ஆனால் விவசாயம்தான் அழிந்துவிடும் என்றார்.
தற்போது மேகதாதுவில் அணை கட்டி தண்ணீரை தடுக்க நினைக்கும் கர்நாடகா அரசியலும், பல வருசமா திருச்சிக்கு அடுத்து தடுப்பணை கட்டி தண்ணீர தேக்காமல் கடல்ல கலக்க விடுற தமிழக அரசியலும் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அரசியல்.
#மேகதாது #கர்நாடகா #தமிழ்நாடு #காவிரி

தமிழ்

















