Chaplin
2.6K posts

Chaplin
@imkitcha
எதை நீ தேடுகிறாயோ... அதை நீ பெறுகின்றாய்! Artist | Sub Editor | Worked @ThanthiTV @polimernews @sunnewstamil @minnambalamnews | Loyolite✨






















சமஸ் அவர்களின் பதிவு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அரசை அமைக்கவும், அதை வெளியிலிருந்து திமுக ஆதரிக்கவுமான ஒரு திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன என்பது ஓர் அப்பட்டமான உண்மை. பாஜகவும் இதை விரும்பியது; விளைவாக இந்த முயற்சிக்கு இடையூறாக இல்லாமல் ஒதுங்கிக்கொண்டது. ஆளுநரின் நேற்றைய பேட்டி இதை சூசகமாக வெளிப்படுத்தியதால்தான் சர்ச்சைக்குள்ளானது. மிகச் சங்கடமான விஷயம்; ஆனால், உண்மை இதுதான்: விஜய் எதிர்ப்பு புள்ளியில் திமுக, அதிமுக, பாஜக மூன்றும் ஒன்றிணைந்தன. முழுப் பின்னணியோடு நேற்றைய முன்தினம் இதை ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வெளியிட்டபோது, அதிர்ந்தவர்கள் பலர் நேற்று ’தி இந்து’, ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ நாளிதழ்களில் வெளியானபோது மௌனத்தில் ஆழ்ந்துபோனார்கள். திமுக, அதிமுக இரண்டும் இணைந்தாலும் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை இல்லை என்பதும், திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவும் பகுதியளவிலேனும் இதற்குத் தேவை என்பதும் வெளிப்படை. திமுக தலைமை இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதைக் கேட்டு அதிர்ந்திருக்கின்றன. இத்தகு சூழலிலேயே ராகுல் காந்தி களம் இறங்கியிருக்கிறார். பாஜக தலையெடுக்கும் சூழலை அனுமதிக்கவே கூடாது என்று சொல்லி சிபிஐ, சிபிஎம் இரு கட்சித் தலைவர்களிடமும் பேசியிருக்கிறார்; அதேபோல, விசிக தலைமையிடம் கார்கே தொடர்ந்து பேச்சில் இருக்கிறார். இதன் தொடர்ச்சியாகவே பாஜகவை மறைமுகமாக அதிகாரத்துக்குக் கொண்டுவரும் இந்த வேலைக்கு தங்களால் உடன்படவே முடியாது என்று தெரிவித்ததோடு, தவெகவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள். ஆட்சிக்கு விஜய் வந்தால், எம்ஜிஆர் போன்று பத்தாண்டுகளுக்கும் மேல் கோலோச்சுவார்; பல சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று இரு கட்சிகளுமே எண்ணியதாக தெரிகிறது; அந்தப் புள்ளியிலிருந்தே இந்த யோசனை முளைத்ததாகவும், தொடக்கத்தில் இதை ஏற்க மறுத்த திமுக தலைவர் ஸ்டாலினை உதயநிதி, சபரீசன் இருவரும் பேசி சம்மதிக்கவைத்ததாகவும் கூறப்படுகிறது. தத்தமது கட்சி சார்ந்து திட்டமிடும், முடிவெடுக்கும் சுதந்திரம் எல்லா கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் உண்டு. அது சரியா, தவறா; தொலைநோக்கில் என்னவாக மாறும் என்பதெல்லாம் வேறு விஷயம். இந்த விஷயத்தைப் பொறுத்த அளவில் இப்படி ஒரு திட்டம் இருந்திருக்கிறது; இதை இன்று காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டுகளும் குலைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ’இந்தியா டுடே’வுக்கு அளித்த பேட்டியில் சிபிஎம் பொதுச்செயலர் எம்.ஏ.பேபி அளித்திருக்கும் பேட்டி அப்பட்டமாக இந்த விஷயங்களை வெளிப்படுத்துகிறது .















