நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
நீட் குளறுபடிகள் ஆண்டுதோறும் தொடர்கதையாகி விட்டன.
இப்போது, ராஜஸ்தானில் நீட் கேள்வி தாள் முன்கூட்டியே வெளியானது தெரிந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வையே ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
ஏழை-எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வு, நமக்கு வேண்டவே வேண்டாம் என்று தி.மு.கழக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுக்கிறார்.
அந்த மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் - நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!
தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும்.
குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம்.
கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.
கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது.
அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ@TVKPartyHQ
தோழரே @TVKVijayHQ முந்தைய ஆட்சியாளர்களின் திட்டங்களுக்கு sticker ஒட்டுவதில், உங்கள் ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுபவர்களின் சமூக வலைதளங்களை முடக்குவதில் காட்டும் அக்கறையை சட்ட ஒழுங்கிலும் காட்டுங்கள்!
#TVKFails
பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்டு, ஒரு ஜோசியர அதிகாரியா நியமிக்கக்கூட எங்க அண்ணனுக்கு உரிமை இல்லையா? என்று கண்ணீர்விட்டு reels போட தயாரா இருக்க ரசிகர்கள் இருக்கும் வரை உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம் விஜய்.
நீங்கள் விரும்பிய ஜோதிட மாற்றம் எல்லாத்தையும் கொண்டு வாங்க!
மாற்றம்? :)
• பெண் சடலம் மீட்பு!
• இரு இளைஞர்கள் எரிந்துக் கொலை!
• போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!
• மதுபோதையில் பயங்கரம்.
17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்.
#TVKFails
கரூரில் சிவரஞ்சனி என்ற பெண் கரும்பு தோட்டத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன் என்று நடித்து ஆட்சிக்கு வந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#TVKFails
சில நாட்கள் முன் தவெக புதிய துணை சபாநாயகர் அமர்ந்து இருந்த சேர் இது. இப்போது மாநிலத்தின் சட்டமன்றத்தில் சபாநாயகர் சேர் இவருக்கு.
பரவால எவன் என்னனு பார்க்கமல் ஓட்டு போட்டு தள்ளிருக்கானுக - Gen Z தலைமுறை இல்லை இது insta ஜாம்பி தலைமுறை.
ஆடை ஆபாச வீடியோ instaவில் பார்க்கும் போது இடையில் 1 நிமிட அரசியல் sentiment வீடியோ தான் இவனுக தெரிந்த மொத்த அரசியலே..
எனவே ஒவ்வொருத்தன் தகுதியும் செம்ம.. சாமாணியன் சட்டமன்றம் வரவில்லை, சாணி உருட்ட கூட தகுதியில்லாதவன் எல்லாம் insta சினிமா போதையில் MLA ஆகி உள்ள வந்துட்டானுக தெளிவா தெரியுது.. ஒன்று இரண்டை தவிர..
லாட்டரி மார்டீன் மாபியா + ரூட் மாபியா = TVK.
Vijay ன் வீழ்ச்சிக்கு இரண்டு பேர் காரணமாக இருப்பார்கள். ஒன்று: ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல். இவரது கொள்கையே சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல ஒருவனின் ஆசையை தூண்டு அவன் உனக்கு அடிமை ஆவான் என்பது தான். இவர் சசிகலா உட்பட அனைவருக்கும் "நீங்கள் இந்த நிலத்தை ஆள்வீர்கள்" என எழுதி கொடுத்துள்ளார்.இவருக்கு அரசு பதவி கொடுத்துள்ளார் விஜய். இதை பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள்.இரண்டு: திருட்டு லாட்டரி குடும்பமான மார்ட்டின் குடும்பம். ஆரம்பமே ஊழலுடன் ஆரம்பிக்கிறது. இருவரும் விஜய்க்கு முடிவுரை எழுதுவார்கள்.
தவெக ஆட்சியில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்குவதாக மது பிரியர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்..
இப்ப நாம பாடுவோமா... பாட்டிலுக்கு 10 ரூபா 🎤🎼
#TVKFails
வீடு வீடா சுத்தினது போதும் CM சார் @TVKVijayHQ
சட்டம் ஒழுங்கு சரியில்லாம சந்தி சிரிக்குது
மதுபோதையில் சிறுவர்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கொன்றிருக்கிறார்கள்
என்ன செய்ய போறீங்க
@CMOTamilnadu