Sabitlenmiş Tweet
அ. ராஜ்குமார்
8.4K posts

அ. ராஜ்குமார்
@rajkumar_blr
பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
Bengaluru, India Katılım Eylül 2018
522 Takip Edilen241 Takipçiler
அ. ராஜ்குமார் retweetledi

என்னவோ பண்ணுது....
AI ல உருப்படியான வேலை பாத்திருக்காங்க....
#BOBMARLEY #இளையராஜா
Nice feeling.....
They've actually done something useful with AI for once....
அ. ராஜ்குமார் retweetledi

அறநிலையத் துறையில் இரண்டு பிராம்மணர்களை நியமித்து விட்டார்கள் என்று இந்த குதி குதிக்கும் @AsiriyarKV ,
1991-96 ல்
முதலமைச்சர் ஆன ஒரு பிராம்மணப் பெண்மணிக்கு கூஜா தூக்கி,(தன் மீது ஏதாவது வழக்குகள் வந்து விடுமோ என்ற பயத்தில்)
இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொல்லிக் கொண்ட திமுகவை விட்டு வெளியே வந்து,
அதன் தலைவர் கருணாநிதியை வாய்க்கு வந்தபடி பேசி,
அப்போதைய முதல்வரின் மனம் குளிர அவருக்கு "சமூகநீதி காத்த வீராங்கனை" என்று பட்டம் சூட்டி மகிழ்ந்ததெல்லாம் மறந்து போய் விட்டார் போலும்!!
தனக்கு வேண்டும் என்றால் பிராம்மண ஆதரவு, இல்லை என்றால் எதிர்ப்பு என்ற இவர்களின் சமூக நீதிக் கொள்கைதான் சந்தி சிரிக்கிறது...😂😂😂
தமிழ்

@sundarrajachola நயா பைசாவில் எப்படி நயா மறைக்கப்பட்டு பைசா நிலை கொண்டதோ அப்படித்தான் இந்துமத சார்பற்ற கூட்டணி என்பது தான் மதசார்பற்ற கூட்டணி என்றாகியது.
தமிழ்

@withkaran //நார்மலைஸ், டயர்ட், ஜஸ் லைக் தட்//
இவனுகளும் இவனுக தமிழும்!
தமிழ் என்பது இவர்கள் பிழைப்பதற்காக எடுத்துக்கொண்ட ஒரு ஆயுதம் மட்டுமே.
தமிழ்

நார்மலைஸ் பண்ணிருவாங்க.இதை கேட்டு கேட்டு டயர்ட் ஆகிருவாங்க மத்தவங்க.இனி இத்தனை ஆண்டுகள் கட்டி வச்ச ஒவ்வொரு விஷயும் போராடி பெற்ற உரிமை எல்லாம் ஜஸ் லைக் தட் கைய விட்டு போயிரும்
Sun News@sunnewstamil
#BREAKING | வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது பதவியேற்பு விழா மீண்டும் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து #SunNews | #LokBhavan
தமிழ்
அ. ராஜ்குமார் retweetledi

The NEET paper leak would probably have stayed buried forever if a school teacher from Sikar had not refused to stay silent.
Shashikant Suthar, a chemistry teacher from Rajasthan, was shown a “guess paper” by one of his neighbors after the NEET exam. That PDF had reportedly been circulating in Telegram groups for weeks.
Out of curiosity, he matched it with the real exam paper.
The result was terrifying.
Around 140 questions were identical. Same sequence. Same wording. Even punctuation marks matched.
He rushed to the local police station expecting immediate action.
Nobody listened.
No FIR.
No urgency.
No investigation.
But instead of giving up, he kept escalating the matter emailing the NTA, PMO, President of India, and CBI while continuously raising the issue online.
Only then did the system move.
Rajasthan Police formed a Special Operations Group. What initially looked like a small leak soon exploded into a nationwide examination scam connected across multiple states.
The case eventually reached the CBI. NEET was cancelled. And investigators uncovered an organized network of professional paper leak operators.
This entire scandal was exposed because one ordinary teacher decided that remaining silent was not an option.
Sometimes one honest citizen is more powerful than an entire broken system.

English
அ. ராஜ்குமார் retweetledi

@subramaniandeva ஒடுக்கப்பட்ட மக்களை திராவிடம் அவமானப் படுத்தியதைப் போல் வேறு எவரும் அவமானப் படுத்தியதில்லை.
அப்புறம், கோவில்களைப் பாதுகாப்பது இருக்கட்டும், கட்சித் தலைவரை, ஆட்சியில் இருந்த முதல்வரை, தோல்வியிலிருந்து பாதுகாக்க முடிந்ததா உங்களால்?
இதில் எங்களைப் போல் உண்டா என்னும் சவடால் வேறு.
தமிழ்

234 தொகுதியிலும் DMK
தனித்து நிற்க வேண்டும்
வெற்றியா? தோல்வியா?
ஒரு முறை முயற்சி செய்யுங்கள்!!
@Udhaystalin
@mkstalin
தமிழ்
அ. ராஜ்குமார் retweetledi

@subramaniandeva பேசுறது சமூகநீதி, போடுறது ஜாதிக்கணக்கு.
திராவிடம் ஒழியாமல் ஜாதி ஒழியாது.
தமிழ்

@saravanaaram @YEM_AAR குடிக்கப் பழக்கினார்களே படிக்கப் பழக்கினார்களா?
தமிழ்

#DMK #திமுக
அமுதன் எனும் ஆவணப்பட இயக்குனர் எழுதியுள்ள இப்பதிவு தமிழ்நாட்டின் அப்பட்டமான கள எதார்த்தங்களை முழுமையாய் தனக்குள் உள்வாங்கி இப்பதிவை எழுதியுள்ளார் ❤❤
பதிவு...👇👇👇👇
தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆதரவு. இத்தனை வெற்றிகளை அக்கட்சி பெற்றதே அதிசயம் தான். திமுக முன்மொழியும் அரசியல் சிக்கலானது. திமுகவை ஆதரிப்பது எளிதல்ல. இடதுசாரியாகவோ, தமிழ்த்தேசியவாதியாகவோ அம்பேத்கரியவாதியாகவோ இருந்துவிடலாம். அக்கொள்கைகளுக்கெல்லாம் எல்லோருக்கும் புரிய வைக்கும் எளிமை இருக்கிறது. ஆனால் திமுகவின் கொள்கை அப்படியல்ல.
இந்தியாவிலேயே பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் நடத்தி வன்முறையைக் கையில் எடுக்காமல், அறவழியில், அறிவு வழியில். தேர்தலில் தொடர் வெற்றி கண்ட கட்சி திமுக மட்டும் தான். இந்தக்கொள்கையை எல்லோரும் எதிர்ப்பார்கள். ஏனெனில் இது எல்லாவற்றையும் மறுக்கிற கட்சி. புரட்டிப் போடுகிற கட்சி. இந்தியாவிலேயே அரியவகை ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை (EWS) நடைமுறைப்படுத்தாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதற்குக் காரணம் திமுக தான். அதை மிகவும் எளிதாக வெறுப்பரசியல் என்று சொல்லிவிடலாம். அது பயன்படுத்தும் 'நடைமுறைவாதத்தை' சமரசம் என்று எள்ளி நகையாடலாம். அதன் வெளிப்பாட்டுத் தன்மையை முரட்டுத்தனம் என்றோ, பண்ணையார்த்தனம் என்றோ சொல்லிவிடலாம். அதன் தன்னம்பிக்கையை, ஆணவம் என்று எல்லோரும் தவறாகக் குறிப்பிடுவர்.
திமுகவிற்கு நெருக்கடி எங்கிருந்தும் வரலாம். பார்ப்பனர் முதல் ஒடுக்கப்பட்டோர் வரை எல்லோருக்கும் திமுகவின் மீது விமர்சனம் இருக்கும். உயர்ஜாதியினர், திமுகவை தமது கட்சி என்று பார்ப்பதில்லை. சூத்திரர்கள் இதை தலித்துகளுக்கு ஆதரவான கட்சி என்பார்கள். தலித்துகள் இதை சூத்திரர்கள் கட்சி என்பார்கள். இந்துக்கள் திமுகவை சிறுபான்மையினர் கட்சி என்பார்கள். கடவுள் நம்பிக்கை கொண்டோர் நிந்திப்பார்கள். பெண்கள் இதை முரட்டு ஆண்களுக்கான கட்சி என்பார்கள். பிறமொழி பேசுவோர் இவர்களைத் தமிழின வெறியர்கள் என்பார்கள். தமிழ்த்தேசியர்கள் இதை தெலுங்கர் கட்சி என்பார்கள்.
அதே போல திமுகவை ஆதரிப்போருக்குக் குழப்பம் வரலாம், தடுமாற்றம் வரலாம். திமுகவை யாரும் வெளிப்படையாகச் சொந்தம் கொண்டாடுவதில்லை. ஒரு கள்ளக்காதலைப் போல இந்த உறவைப் பாவிப்பார்கள். இத்தனைக்கும் இது தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.
முன் மாதிரிகள், உதாரணங்கள் இல்லாத அரசியலை இந்த இயக்கம் கடைபிடிக்கிறது. மாநில உரிமை பேசும் (ஆனால் பிரிவினை பேசாது), மொழி உரிமை பேசும் (ஆனால் மொழி வெறி இல்லை), பெண்ணுரிமை பேசும் (ஆனால் பெண்கள் ஆதரவு இருக்காது), ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதை வெளியே சொல்ல முடியாது, ஏனெனில் யாராவது ஒருவர் நீதிமன்றத்திற்குப் போய் அதைத் தடுத்துவிடுவர்கள். நீதிமன்றம், ஊடகம், அதிகாரிகள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், படைப்பாளிகள் என எதிரிகளை எங்கும் கொண்டிருக்கும் கட்சி இது.
திமுக 2026 மாநில சட்டசபைத்தேர்தலில் தோற்றதற்கு வெளியே சொல்லப்படும் காரணங்கள் நிறைய இருக்கலாம். ஊழல், போதை, பெண் பாதுகாப்பு என்பன யாவும் ஆதாரமற்றவை என்று ஏற்கனவே பலர் நிரூபித்துவிட்டனர். இந்தக் குற்றங்கள் இல்லாத நாடோ மாநிலமோ இல்லை. இவை எல்லாம் நிர்வாகக் காரணங்கள். அவற்றை வெளியில் சொல்லிவிடலாம். வெளியில் சொல்லப்படாதது அரசியல் காரணங்கள் தான்.
கடந்த ஆட்சியில் நாம் பயன்படுத்திய திராவிட மாடல் என்ற சொல் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிற அனைத்து எதிரிகளையும் ஒன்றிணைத்துவிட்டது. தமிழ்நாடு தவிர இந்த வார்த்தை இந்த அர்த்தத்தில் எங்கும் புழக்கத்தில் இல்லை. ஒரு எல்லை மாநிலம் இப்படியான ஒரு உறுதியான கொள்கையுடன் வளர்ச்சி பெறுவது இந்தி, இந்து, இந்தியா என்று பேசுவோரைப் பயமுறுத்திவிட்டது.
பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைவரையும் சங்கடப்படுத்திவிட்டது. குடும்ப அமைப்பே கேள்விக்குள்ளாகும் என்ற கிலி (paranoia) ஆண்களையும் ஆணாதிக்கத்தை உள்வாங்கிய பெண்களையும் உலுக்கிவிட்டது. மகளிர் விடியல் பயணமும், கலைஞர் உரிமைத் தொகையயும் ஆணாதிக்கத்திற்கு விடப்பட்ட பெரும் சவாலாகும். இதற்கு முன்பு ஆண்கள் மட்டுமே அனுபவித்து வந்த எந்தக் காரணமும் இன்றி ஊர் சுற்றும் (loitering) உரிமையை விடியல் பயணம் பெண்களுக்கும் கொடுத்தது. அதனால் அவர்களால் பல இடங்களுக்கு சுதந்தரமாகப் போக முடிந்தது. பல நண்பர்களை, உறவினர்களைச் சந்திக்க முடிந்தது. பொருளாதாரச் சுமையின்றி வேலைக்குப் போக முடிந்தது.
கலைஞர் உரிமைத் தொகை இன்னும் கூடுதலாக எளிய பெண்களுக்கு பொருளாதார விடுதலையைக் கொடுத்தது. தமது குடும்பத்தினருக்காக கடன் வாங்கும், சேமிக்கும், கடுமையாக உழைக்கும் பெண்களை இந்தத் திட்டம் வலுவூட்டியது 👇
தமிழ்

@sathyanshan //மசூதி இடத்தை //
கதையை உங்கள் இஷ்டத்துக்குத் தொடங்கக் கூடாது. மசூதிக்கு முன்பு அது கோயிலாக இருந்தது என்பது தான் வாதம்.
ஓர் அடாவடியை இன்னோர் அடாவடியால் சரி கட்டலாம் தான். இருந்தும் முறைப்படி நீதிமன்றத்தில் போராடித் தான் பெறுகிறார்கள்.
இந்துக்களின் பலம், பலவீனம் இரண்டும் அதுவே!
தமிழ்

அபாயகரமான ஒரு தீர்ப்பை சத்தமே இல்லாமல் உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. போஜசாலா வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, அயோத்தி வழக்கை மேற்கோள் காட்டி வந்திருக்கிறது. இந்த போஜசாலா வழக்கு நாம் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று.
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் இருக்கும் போஜசாலா, காலனியாட்சிக்கு முன்னர் சமஸ்கிருத பாடசாலையாகவோ அல்லது மசூதியாகவோ இருந்திருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதை பண்டைய நினைவுச்சின்னமாகவும் மசூதியாகவும் அங்கீகரித்தனர். 1935ஆம் ஆண்டு தார் அரசு, அதை மசூதியாக செயல்பட்டு வந்ததாக நிர்வாக ரீதியாக அங்கீகரித்து இஸ்லாமிய மக்களுக்கு வழிபாட்டு உரிமைகளை வழங்கியது.
1951ஆம் ஆண்டு இந்த மசூதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன் பிறகு பல ஆண்டுகளாக இந்துத்துவ அமைப்புகள் இடையிடையே உரிமை கோரிக்கைகளையும் அரசியல் பரப்புரைகளையும் முன்னெடுத்தன. 1991ஆம் ஆண்டு Places of Worship Act அமலுக்கு வந்தது. 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் கோவில்-மசூதி அரசியல் தீவிரமடைந்தது; போஜசாலாவிலும் அதே நிலை உருவானது. ஊர்வலங்கள், மத அடையாள அரசியல், சொந்தம் கொண்டாடுதல் போன்றவை திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டன. அரசு பெரும்பாலும் பார்வையாளராகவே இருந்தது.
2003ஆம் ஆண்டு பாஜக அரசு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வளாகத்தில் இந்துக்களையும் வழிபட அனுமதித்தது. இது Places of Worship Act-ன் அடிப்படை நோக்கத்துக்கு நேரடியாக முரணான நடவடிக்கை என்ற விமர்சனம் அப்போதே எழுந்தது. “பண்டைய நினைவுச்சின்னம்” என்ற விதிவிலக்கை பயன்படுத்தி அந்தச் சட்டத்தின் பாதுகாப்பு வளையத்தில் முதல் பெரிய ஓட்டை அப்போதே போடப்பட்டது. அதன் பிறகு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், மத உரிமை கோரிக்கைகள், இந்துத்துவ ஆதிக்க அரசியல் ஆகியவை மேலும் தீவிரமடைந்தன.
2022ஆம் ஆண்டு Hindu Front for Justice என்ற அமைப்பு, போஜசாலாவில் ASI சர்வே நடத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. 2024ஆம் ஆண்டு நீதிமன்றம் சர்வேக்கு அனுமதி வழங்கியது. பின்னர் ASI, அங்கே கோவில் சார்ந்த கட்டட அடையாளங்கள் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது.
இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், 2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரு மதத்தினரின் வழிபாட்டு ஏற்பாட்டை ரத்து செய்து, இந்துக்களுக்கு மட்டுமே வழிபாட்டு உரிமை இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் போஜசாலா சரஸ்வதி கோவிலுக்குச் சொந்தமானது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
அதாவது, மசூதியாக இருந்து வந்த இடத்தை முதலில் தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் பிறகு “இரு மதத்தினரும் வழிபடலாம்” என்று ஒரு நிர்வாக ஏற்பாடு உருவாக்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகள் கழித்து சர்வே நடத்தி, முன்னிருந்த இந்து கட்டட அடையாளங்கள் இருப்பதாக கூறி, நீண்ட காலமாக இருந்து வந்த இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இங்கே எழும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், Places of Worship Act-ன் மைய நோக்கம் என்ன ஆனது என்பதுதான். 1947ஆம் ஆண்டு இருந்த மத அடையாளத்தை உறுதியாக பாதுகாக்கவே அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் “பண்டைய நினைவுச்சின்னம்” என்ற விதிவிலக்கை பயன்படுத்தி அந்தச் சட்டத்தை நீதிமன்றங்கள் இவ்வாறு bypass செய்ய ஆரம்பித்தால், நாளை எந்த வரலாற்று வழிபாட்டு தலமும் மீண்டும் அரசியல் மற்றும் வழக்கறிஞர் வாதங்களின் போர்க்களமாக மாற்றப்படலாம்.
இந்த தீர்ப்பில் மிக அபாயகரமான பகுதி, அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26ஆம் கட்டுரைகளை இந்துத்துவ அமைப்புகளின் வழிபாட்டு உரிமைக்காக மேற்கோள் காட்டிய நீதிமன்றம், அதே பாதுகாப்பை பல தசாப்தங்களாக அங்கே தொழுகை நடத்தி வந்த இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்கு பொருத்தமாக பார்க்காததுதான். ஒரு பக்கம் மத சுதந்திரம் அரசியலமைப்புச் சட்ட உரிமையாக கருதப்படுகிறது; மற்றொரு பக்கம் அதே உரிமை “பண்டைய நினைவுச்சின்னம்” என்ற விதிவிலக்கின் கீழ் ஒதுக்கப்படுகிறது. இதுவே இந்த தீர்ப்பின் மிகப் பெரிய அரசியலமைப்பு முரண்பாடு.
ஒரு மசூதியின் religious identity எவ்வாறு படிப்படியாக மாற்றப்படுகிறது என்பதற்கான அபாயகரமான முன்னுதாரணமாக இந்த வழக்கு மாறி இருக்கிறது.
சத்தமில்லாமல் இன்னொரு அயோத்திக்கு இணையான சம்பவம் நடந்திருக்கிறது.
ஏனோ எனக்கு திருப்பரங்குன்றமும் எச். ராஜாவும் தான் நினைவுக்கு வந்தார்கள்.

தமிழ்

A good appeal. Surely Muslims will abondon, not the sites, but this poor fellow and his thoughts.
Mohammed Shoaib@ShoaibIND
English

@CaesarDubious @cosmicblinker @hsejarsa @ARanganathan72 @ShefVaidya @Iyervval @AnchorAnandN @itisatp @oorkkaaran @VarunSeven1 @Saffron_Anil_ @SanghiPrince @VmsMustafatnml That's dubious muslim.
English

@cosmicblinker @hsejarsa @ARanganathan72 @ShefVaidya @Iyervval @AnchorAnandN @itisatp @oorkkaaran @VarunSeven1 @Saffron_Anil_ @SanghiPrince அப்படியா, @VmsMustafatnml ? இங்க பிறப்பொக்கும் இல்லையா?
தமிழ்

Tamil speaking muslims are treated like untouchables by Urdu speaking Muslims by washing their places of presence, no marriage, they dont even accept us as muslims says this Tamil Muslim Lady
Any Debate ?
@ARanganathan72 @ShefVaidya @Iyervval @AnchorAnandN @itisatp
English

@RadnuS81 என்ன செய்ய? எதிர்க்கட்சின்னு எதிர்ல உட்காந்து இருக்குறவன் எல்லாம் 'இப்படிப் போயி ஆட்சிய பறி கொடுத்துட்டமே!'ன்னு எழவு விழுந்த மாதிரி தான் உட்காந்து இருக்காங்க. அவங்களப் பாத்த, பாவம், இவருக்கும் எழவுக் களை வந்துருது.
தமிழ்
அ. ராஜ்குமார் retweetledi

ஹிந்துக்களை ஒடுக்கி அவர்களை மதம் மாற்ற உதவினால், இங்கே சம்பாதித்த கறுப்புப் பணத்தை ஹவாலா செய்ய உதவி கிடைக்கும். மோதி அரசின் கழுகுப் பார்வையால் வெளி நாட்டிலிருந்து NGO களுக்கு பணம் வருவது ரொம்பக் குறைந்துவிட்டது. உள்ளூர் கறுப்புப் பணத்தை இங்கேயே பயங்கரவாதத்துக்கும் மதமாற்றத்துக்கும் பயன்படுத்திக் கொண்டு, வெளி நாட்டில் அதை வெள்ளைப் பணமாகவும் crypto காசாகவும் மாற்றித் தருவார்கள் ஹவாலா காரர்கள். கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற ஹவாலா காரர்களை அண்டியிருப்பவர்கள் ஹிந்துக்களை நேரடியாகப் பழித்துப் பேச முடியாது. அதற்காக எடுத்துக்கொண்ட சொல் தான் #சனாதனம்.
தமிழ்
அ. ராஜ்குமார் retweetledi

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும்,
வணக்கம்.
இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது.
மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர்.
நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது.
நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று.
தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம்.
இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை.
பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார்.
அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.
நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு.
அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை.
இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல?
இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க.
சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.
இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல?
மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம்.
மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம்.
நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.
நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர்.
நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க.
நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம்.
இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர்.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை.
மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம்.
மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான்.
மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.
தமிழ்

@ItzmeeJoee நீட் தேர்வை ஒழிக்கிறேன்னு சொல்லி முழுசா ஒரு ஆட்சியே முடிஞ்சு போச்சு.
இன்னுமா அதப் புடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கீங்க?
தமிழ்

நீட் தேர்வு மோசடி நடந்து முழுசா ஒரு நாள் ஆச்சு,
இந்த ஆட்சி "கல்விக்கு முக்கியத்துவம் குடுக்குற" ஆட்சியா இருந்துருந்தா முதல்வர் முத வேலையா கண்டனம் தெரிவிச்சிருப்பார்,
ஆனா பாருங்க அவர் ஜோசியன அப்பாயிண்ட்மெண்ட் பண்றதுல பிஸியா இருக்கார். இதுலயே புரிஞ்சுக்கோங்க இந்த ஆட்சில எதுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்ன்னு..!!
தமிழ்

@itskJayaprakash ஊளையிட்டதற்காக அடிபடுவதும், அடிபட்டதற்காக ஊளையிடுவதும்....,
பாவம், நாய் பிழைப்பு!
தமிழ்









