
Varun
7K posts






மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நேற்று (04.06.2026) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் பொதுப்பணி ஒப்பந்ததாரர்களுடனும், சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு நிலையத்தில் நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பான ஒப்பந்ததாரர்களுடனும் கலந்தாலோசனையில் ஈடுபட்டோம். ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம். 'வெளிப்படையான நிர்வாகம் மற்றும் சீரான வளர்ச்சிப் பணிகள்' என்ற குறிக்கோளின் அடிப்படையில், டெண்டர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வெளியிடப்படும். முறைகேடாக லஞ்சப் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகப் புகார் அளிக்க பிரத்தியேக புகார் எண் தொடங்கப்படும். 'அமைச்சர் கமிஷன், முதலமைச்சர் கமிஷன், இடைத்தரகர்கள்' என்ற பெயரில் சதவீத அடிப்படையில் கையூட்டு பெறும் முறை அனைத்தும் ஒழிக்கப்படும். இதுவரை சிலரின் தனிப்பட்ட நலனுக்காக முறைகேடுகளில் புழங்கிய பணம், இனி முழுக்க முழுக்க வளர்ச்சித் திட்டங்களில் செலவிடப்படும். ஒரு நாட்டின் வளர்ச்சியை அதன் நெடுஞசாலைகளே தீர்மானிக்கின்றன. எனவே, தரமான சாலைகளை உருவாக்குவது தமிழ்நாடு அரசின் குறிக்கோளாகும். அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவது, தமிழ்நாட்டின் கட்டிடங்கள், கட்டமைப்புகள் மற்றும் சாலைகள் உலகத்தரமான நிலையை அடையப் பணி செய்வது ஆகியவை பற்றிக் கலந்தாலோசித்தோம். 1/2































