Anandhi balan
28.7K posts

Anandhi balan
@BalanAnandhi
anandhi balan சென்னை வடக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் IT wing
Vyasarpadi Katılım Eylül 2020
3K Takip Edilen3.2K Takipçiler

M.K.S 2.0 Loading !
#DMKWinningTamilnadu
#DMKWinningTamilnadu
@TRBRajaa @iamchsekar @gpmohanbabu @DMKITwing

English

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்
#DMKWinningTamilnadu
#DMKWinningTamilnadu
@TRBRajaa @iamchsekar @gpmohanbabu @DMKITwing

தமிழ்

தமிழ்நாட்டின் காவல் தெய்வம்!
#DMKWinningTamilnadu
#DMKWinningTamilnadu
@TRBRajaa @iamchsekar @gpmohanbabu @DMKITwing

தமிழ்

திமுக தொடர்ந்து முன்னிலை!
#DMKWinningTamilnadu
#DMKWinningTamilnadu
@TRBRajaa @iamchsekar @gpmohanbabu @DMKITwing

தமிழ்

இந்த கைகளை தமிழ்நாடு இறுகப் பற்றிக் கொள்வதே தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு!
#DMKWinningTamilnadu
#DMKWinningTamilnadu
@TRBRajaa @iamchsekar @gpmohanbabu @DMKITwing

தமிழ்

We Rise
We Win
#DMKWinningTamilnadu
#DMKWinningTamilnadu
@TRBRajaa @iamchsekar @gpmohanbabu @DMKITwing

English

உதிக்கட்டும் உதயசூரியன்!
#DMKWinningTamilnadu
#DMKWinningTamilnadu
@TRBRajaa @iamchsekar @gpmohanbabu @DMKITwing

தமிழ்

Exit poll : 2026
அதிமுக கூட்டணி : 110+
திமுக கூட்டணி : 95+
விஜய் TVK : 5+
நாம் தமிழர் : 1+
23 இடங்கள் கணிக்கவே முடியாது...
வாக்கு சதவீதம் :
அதிமுக : 38%
திமுக : 37%
விஜய் TVK : 16%
நாம் தமிழர் : 6%
+-3% வாக்கு தான் தேர்தலை தீர்மானிக்கும் சக்தி கொண்டது. இவை நிச்சம் நோட்டாவிற்கு செல்லவில்லை..
சென்னை : 22 இடங்கள்
திமுக 9+
விஜய் TVK : 4+
அதிமுக : 3+
(பிற கணிக்க முடியாதவை..)
விஜய் சென்னை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் சுமார் 27% வாக்குகளை உடைத்து திமுகவின் கோட்டையை தகர்த்துள்ளார்...
தமிழ்
Anandhi balan retweetledi

போடு தவெக 205 இடங்களுக்கு மேல் கைபற்றி ஆட்சி அமைக்கும்.. பிரபல மீடியா கருத்துக்கணிப்பு.💥💥
எந்த மீடியா ப்ரோ?
~ சோசியல் மீடியா.🔥🔥😂😂😂
#ExitPoll
#DMKWinningTN

தமிழ்

இப்போவாச்சும் அந்த தற்குறிகளுக்கு பைத்தியம் தெளியுமா? இல்ல ....
#DMKWinningTN
#DMKWinningTN
@TRBRajaa @rdsekarmla @iamchsekar @gpmohanbabu @DMKITwing


தமிழ்
Anandhi balan retweetledi

மாணவர்களுடன் தேர்தல் களத்தில் 🖤❤️
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கல்லூரி மாணவர்களின் மனநிலையைனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலிலும் , இளைஞர்களும் மாணவர்களும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்து மற்றவர்களுக்கும் சொல்லிட தேர்தல் களத்திற்கு ஏற்றார் போல அவர்களை தயார் செய்திட வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களை வகுப்பறையில் சந்தித்து மாணவர்கள் நலனில் திமுக அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு, இந்த சாதனைகளின் மூலம் சமுதாயத்தில், மாணவர்கள் நலனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை விரிவாக எடுத்துரைத்தோம். Semester தேர்வு நடைபெற்று வந்த சூழலிலும் மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சியின் மாணவப் பயனாளிகள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் தான் நிற்கிறோம் என்று பெருமிதத்தோடு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி வாயில்களில் மாணவர்களைச் சந்தித்து அவர்களிடம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேவை குறித்து எடுத்து சொல்லிட வேண்டுமென்று கல்லூரி வாயில்களில் நின்று திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சியின் தேவை குறித்து உரையாற்றினோம்.
திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதியின் பார்வையாளராக பணியாற்றிட தேர்தல் நேரத்தில் மாண்புமிகு கழகத் தலைவரும், மாண்புமிகு இளம் தலைவர் அண்ணன் உதயநிதி அவர்களுக்கும் வாய்ப்பினை வழங்கினார்கள். சென்னை கிழக்கு மாவட்ட மாணவர் அமைப்பாளர் தம்பி ரஞ்சித் அணி திருவிக நகரில் உள்ள மாவட்ட துணை அமைப்பாளர் தம்பி ஜோஷ்வா , பகுதி மாணவர் அணி அமைப்பாளர்கள் தம்பி ஆகாஷ், நிறைமொழி ஆகியோர் முன்னிலையில் அந்த தொகுதிக்கு உட்பட்ட மாணவர் அணி நிர்வாகிகளுடன் அதே தொகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டவர்களை சந்தித்து இயக்கத்தின் சார்பில் மாணவர்கள் நலன் எப்பொழுதும் காக்கப்படுகிறது, திராவிட மாடல் ஆட்சி மாணவர்கள் வாழ்வின் வளர்சிப்பதைக்கு அரணாக விளங்குகிறது என்பதனை எடுத்துரைக்கும் வாய்ப்பினையும் பெற்றோம்.
கல்லூரி மாணவர்கள் , இளம் தலைமுறையினர் சிலர் சமூக அக்கறை இல்லாமல் , திரை கவர்ச்சியில் கொள்கை அற்ற கூட்டமாக மாறியுள்ள சூழலில் பெரும்பான்மையான இளைஞர்கள், மாணவர்கள் கொள்கை புரிதலுடனும் , திராவிட இயக்க உணர்வுடனும் உள்ளனனர் என்பதனை களத்தில் நின்று அறிந்து கொள்ள முடிந்தது. இனி வரும் காலங்களில் இன்னும் வேகமாக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் உணர முடிகிறது. மாண்புமிகு கழத் தலைவர் மற்றும் இளைஞர்களின் ஒற்றை அரணாக விளங்கும் இளம்தலைவர் அண்ணன் உதயநிதி அவர்களின் வழிகாட்டலோடு வரும் காலங்களில் வென்று காட்டுவோம்.
@mkstalin @Udhaystalin @dmk_raja @Anbil_Mahesh @TRBRajaa @dmk_studentwing @sidique_dmk



தமிழ்
Anandhi balan retweetledi
Anandhi balan retweetledi

* அரிதாரக் கனவுகள் அரியணை ஏறாது!
கட்சியையே நடத்தத் தெரியாதவர்கள் ஆட்சி நடத்தப் போகிறார்களா?
* தமிழ்நாட்டின் அரசியலில் ‘‘பொய்க்கால் குதிரைகளுக்கு’’ வேலையில்லை!
****************************************************************
* மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் உறுதிபூண்டுள்ளனர்!
தமிழ்நாடெங்கும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி நீடிக்கவும், சமூகநீதி நிலைக்கவும், ஆதிக்க மதவாத சக்திகளிடமிருந்து தமிழ்நாடு தப்பிக்கவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் உறுதிபூண்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றி பெறச் செய்யக் கூடாது என்பதற்காக பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் பல்வேறு முயற்சிகளைச் செய்துள்ளன. திரிசூலங்களைக் காட்டி, சில கட்சிகளை நேரடியாக அணி திரட்டினர். மறைமுகமாக ஒரு கூட்டத்தை தங்கள் வசமாக்கி, கடப்பாறை கொடுத்தனுப்பினர்.
இன்னொருபுறம் இளைஞர்களைத் திசைதிருப்ப, திராவிட அரசியலிலிருந்து மடைமாற்ற சினிமா கவர்ச்சியை நாடினர். திரைப்படங்களில் நடித்துப் பெற்ற புகழையும், அதனால் உருவான ரசிகர் கூட்டத்தையுமே மூலதனமாகக் கொண்டு ஒருவரைக் களம் இறக்கினர். அதையே ‘‘மாற்றம் மாற்றம்’’ என்று ஊடகங்களின் வழியாக கூவச் செய்தனர். தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் ஏதோ ஒரே பாதையில் அவரை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டதாக Narrative செய்யத் தொடங்கினர். ‘மீட்பரைக் கண்டது போல’ இளைஞர்களும், பெண்களும் திரளுவதாகக் கதை கட்டினர்! அதற்கேற்ற ‘பாவனைகளை’த் துணை நடிகர்கள் மூலம் அவர்களே நடித்தும் காட்டினர். (அவையெல்லாம் ஊடகங்களில் அம்பலப்பட்டுப் போயின என்பது தனிக்கதை.)
பொதுவாழ்க்கை என்றால் என்னவென்றே அறியாத ஒருவர், நேரடியாக அடுத்த முதலமைச்சர் தான் தான் என்பது போல் உலாவத் தொடங்கினார். திரைப்பட நடிகர்களை நேரில் காண்பது அரிது என்ற மக்களின் மனதில் இருக்கும் பிம்பமும், வயது வேறுபாடின்றி எல்லோரையும் ‘பிடித்திருக்கும்’ ‘செல்ஃபி’ நோயும் மக்கள் திரளக் காரணமாயின. ஆனால், அதையே தங்கள் அரசியலுக்கான பெரும் வரவேற்பு என்று கருதிக் கொண்டார்கள்.
* பால பாடத்தை படிக்கத் தவறிவிட்டார்!
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோர் திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்பதால், அதே பாதையில் தங்கள் வாகனத்தையும் செலுத்தலாம் என்று கருதி முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஒரு கட்சியில் இணைந்து பணியாற்றி, மெல்ல மெல்ல அந்த நிலைக்கு வந்தவர்கள்தான் அவர்கள். ஆனால், இவர்களோ ‘வந்தால் முதலமைச்சராகத் தான் வருவேன்’ என்று திமிர்பிடித்து, அதற்காகக் காய் நகர்த்துகிறார்கள். ஆனால், இதே நம்பிக்கையில் வந்த எண்ணற்ற திரைப்பட நடிகர்கள் வந்த இடத்திற்கு திரும்பச் சென்று விட்டார்கள் என்ற பாடத்தை அவர் படிக்கத் தவறிவிட்டார்.
* எந்த அடிப்படையும் இல்லாமல்...
ஓரிரண்டு ஆண்டுகள் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பரிசு கொடுத்துவிட்டால், அதுவே தங்கள் அரசியலுக்கான தகுதி என்று கருதிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டின் அரசியல் சூழல் என்ன? தேவை என்ன? ஒரு கட்சி தொடங்கி நடத்துவதென்றால் அதற்கான கொள்கை என்ன? கட்டுப்பாடு என்றால் என்ன? கட்சித் தொண்டர்களைப் பயிற்றுவது எப்படி? என்று எந்த அடிப்படையும் இல்லாமல், மந்தை மனநிலையில் ரசிகர்களை வைத்திருப்பதே போதும் என்று கருதிக் கொண்டு ஆட்சிக் கனவு காணத் தொடங்கிவிட்டார்கள். அதன் கொடூர விளைவு தான் கரூரில் நடந்த பெருந்துயரம். 41 பேர் துள்ளத் துடிக்க இறந்தபின்னும், அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்கும் தன்மை கொஞ்சமும் இன்றி, அதை அடுத்தவர் மீது பழிபோடுவதைத்தான் நேற்று முன் தினம் வரை செய்து வருகின்றார்.
அதன்பிறகாவது பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டுமே! இல்லை என்பது தான் நாம் கண்ட உண்மை. தன் மீதான பிம்பம் அகன்றுவிடக் கூடாது என்பதில் மட்டும் அவர் உறுதியாக இருக்கிறார்.
* ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் மறைமுகச் செயல்திட்டம் அல்லாமல் வேறு என்ன?
இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய ஜனநாயக நெருக்கடியை, பாசிச ஆபத்தை எதிர்த்து பெரும் பெரும் அரசியல் கட்சிகள், தலைவர்கள், சமூக இயக்கங்கள் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், “பாசிசமா? பாயாசமா?” என்று ஒரு பேராபத்தை நகைப்புக்குரிய பொருளாக ஆக்கியது, பாசிச எதிர்ப்பின் வீரியத்தை இளைஞர்கள் மத்தியில் செல்லவிடாமல் தடுப்பதற்கான சூழ்ச்சியே ஆகும்! இது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் மறைமுகச் செயல்திட்டம் அல்லாமல் வேறு என்ன? இது என்ன சினிமா வசனமா? கொஞ்சமாவது பொறுப்புணர்வு வேண்டாமா?
கட்சி தொடங்கிவிட்டோமே, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறோமே, அதற்காக உழைக்க வேண்டுமே, மக்களைச் சந்திக்க வேண்டுமே என்ற எண்ணம் இல்லாமல், இப்போதும் அடிப்படை குடிமை ஒழுக்கம் (Civil Obedience) கூட இல்லாத கும்பலை அப்படியே வைத்துக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்களே, இது அவரது கட்சிக்கு மட்டுமா கேடு? சமூக ஒழுங்குக்கே கேடு அல்லவா? இழுக்கு அல்லவா?
ஒரு கட்சியைக் கூட கட்டுப்பாடாக நடத்தத் தெரியாதவரா ஓர் ஆட்சியை நடத்தப் போகிறார்? பிரச்சாரத்துக்குப் பாதிநாள் லீவு போடுகிறார்; காத்திருக்கும் மக்களைத் துச்சமென மதிக்கிறார்; குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அவர்களை அரசியல் பகடைக்காயாக்குகிறார்.
* சிறுபான்மையினர் ஏமாற மாட்டார்கள்!
அவர் கட்சி தொடங்கியதற்குப் பிறகே, எத்தனை சிக்கல்கள் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுவிட்டன? அவற்றில் எவற்றுக்கெல்லாம் கண்டனம் தெரிவித்தார்? கிறிஸ்துவ, இஸ்லாமிய சிறுபான்மையினர் ஓட்டுகளைக் குறிவைத்துச் செயல்படுகிறார் என்று சொல்லப்படுகிறது. அதற்கேற்பவே அவரும் வேடம் போடுகிறார். ஆனால், அம் மக்கள் குடியுரிமையைப் பறிக்க ஒன்றிய அரசு சூழ்ச்சி செய்த போதும், கிறிஸ்துவ நிறுவனங்களைச் செயலிழக்கச் செய்ய எப்.சி.ஆர்.ஏ சட்டத்தைத் திருத்த முயற்சிக்கும்போதும் ஒரு சாதாரண எதிர்ப்பைக் கூட காட்ட முன்வரவில்லையே! திடீரென முட்டிக் காலில் நடப்பதும், குல்லா போட்டுக் கொள்வதும் மட்டும் கண்டு சிறுபான்மையினர் ஏமாந்து விடுவார்களா?
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராஜர் என்று தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்திவிட்டால், அதைக் கண்டு ஏமாந்து விடுவார்கள் என்று கருதிக் கொண்டார்கள் போலும்! இப்படி எத்தனை படங்களை (பெரியார் படம் தவிர) பா.ஜ.க. தன் அலுவலகத்தில் மாட்டி வைத்திருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாதா? இவர்கள் எல்லாம் கொள்கைத் தலைவர்கள் என்று சொன்னால் மட்டும் போதுமா? இவர்களின் கொள்கைகளைத் தங்கள் கட்சிக்காரர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்களா? அதற்கான முயற்சியாவது, ஏன் எண்ணமாவது உண்டா? அவையெல்லாம் அவர்களுக்கு அவசியமில்லை. டிவிகே, டிவிகே என்ற கூச்சலும், செல்ஃபிக்களும், திரைப்பட கிளைமாக்ஸ் போன்ற வசனங்களும், அதே உடல் மொழியும், அதிலும் இவையெல்லாம் வேறு ஒரு மாநிலத்து நடிகருக்கு செய்யப்பட்டவற்றின் ‘காப்பி’ என்று சமூக ஊடகங்கள் படத்துக்குப் படம், செயலுக்குச் செயல் ஒப்பிட்டு அம்பலப்படுத்திவிட்டன. ஆனாலும், அந்த ஸ்கிரிப்ட் கொஞ்சமும் மாறாமல் ‘ரீமேக்’ (Remake) செய்யப்பட்டது. மக்கள் அவ்வளவு மடையர்கள் என்று இந்தக் காலத்திலும் கருதுகிறார்களே, என்ன கொடுமை!
‘‘ஊழல், ஊழல்’’ என்று பேசுவதற்குத் தகுதி உண்டா? வருமானத்தைக் குறைத்துக் காட்டி, அரசை ஏமாற்றியதற்காக வருமான வரித்துறை 1.5 கோடி ரூபாய் தண்டம் விதித்திருக்கிறது. அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்துக்குப் போய் குட்டுப் பட்டும் இன்னும் அதைக் கட்ட மனமில்லையே!
ஒரு வேட்பு மனு விண்ணப்பத்தையே முறையாக நிரப்பத் தெரியாமல், மூன்று முறை திருத்தம் கொடுத்தவர்களைப் பார்த்திருக்கிறோமா? அதிலும் சொத்துக் கணக்கில் எத்தனைக் குளறுபடிகள்! 100 கோடி ரூபாயை மறைத்திருக்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறதே, அதற்குப் பதில் என்ன?
கட்சிக் கொள்கை, கட்டுப்பாடு, அறம், ஒழுங்கு என்று எந்த அடிப்படைப் பண்பும் இல்லாமல், பதவி ஒன்றே குறிக்கோள் என்று எளிய இளைஞர்களை ஏமாற்றலாம், மகளிரை ஏமாற்றலாம் என்று வருவதும் யோக்கியத் தன்மையான செயலா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
* அரசியலுக்கு ஏற்பட்ட இழுக்கு!
இவரது பிரபலத்தை எப்படியாவது கைக் கொண்டு ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் எவ்வளவு முயற்சித்தார்கள்! டில்லியில் பேச்சுவார்த்தை, நடிகை மூலம் மும்பையில் பேச்சுவார்த்தை, ‘‘பிள்ளையார் சுழி போட்டாச்சு’’ என்று பிரஸ்தாபங்கள் - இவையெல்லாம் அரசியலுக்கு ஏற்பட்ட இழுக்கு! ஆனால், இவையெல்லாம் செய்யப்பட்டது யாரால் என்பதை உணர்ந்தால் அவர்களது தரமும் அம்பலப்பட்டு நிற்கிறது.
ஊடகங்கள் இவற்றையெல்லாம் குறித்து எப்படி எழுதியிருக்க வேண்டும்? எப்படி காட்டியிருக்க வேண்டும்? ஆனால், அவை தங்கள் கடமையைச் செய்தனவா? அவர் வீட்டின் வாசல் கதவையே எவ்வளவு நேரம் நேரலையில் ஒளிபரப்பினார்கள். விஜயைப் பார்த்து வந்ததையும், அவர் பேட்டி தரவில்லை என்பதையுமே ‘எக்ஸ்க்ளூசிவ்’ என்று விற்றுச் சம்பாதித்தார்கள். வீட்டிலிருந்து கிளம்பியது முதல் வாகனத்தில் தொற்றிக் கொண்டே நேரலை போட்டார்கள். வழியெல்லாம் விபத்துகளில் இளைஞர்கள் விழுந்த போது, அவற்றைவிட நடிகரின் காரைப் பின் தொடர்வதிலேயே குறியாக இருந்தார்கள். வெட்கம்.. வெட்கம்!
* “தமிழ்நாடு வெற்றிடம் அல்ல; ‘கற்றிடம்!’
இங்குவந்து கற்றுக் கொண்டு தான் செல்லவேண்டும்”!
தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞரும், செல்வி ஜெயலலிதா அம்மையாரும் இல்லாத கடந்த தேர்தலின் போது, இப்படித்தான் ‘‘வெற்றிடம், வெற்றிடம்’’ என்று கூவினார்கள். ஆனால், “தமிழ்நாடு வெற்றிடம் அல்ல; ‘கற்றிடம்!’ இங்குவந்து கற்றுக் கொண்டு தான் செல்லவேண்டும்” என்று நாம் தான் முதலில் சொன்னோம். அது தான் நடந்தது. இந்தியா மட்டுமல்ல... உலகின் பல நாடுகளும் இன்று ஓர் இயக்கத்தை எப்படி நடத்துவது? ஓர் ஆட்சியை எப்படி நடத்துவது? மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எப்படி? அநீதி என்றால் அதைச் சட்டப்படி எப்படி எதிர்கொள்வது? இந்தியாவின் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஜனநாயக ரீதியில் எதேச்சதிகாரத்தை எதிர்ப்பது எப்படி? என்று கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
* மின்மினிப் பூச்சிகள், மின்சாரத்திற்கு ஒப்பாகுமா?
எத்தனையோ மின்மினிப் பூச்சிகள் வரலாம், அவை மின்சாரத்துக்குக் கூட ஒப்பாகாது என்றால், ஒளிப்பிழம்பாம் சூரியனுக்கு ஒப்பாகுமா?
‘பொய்க் கால் குதிரைகளும்’, கூட்டத்துக்கு வர மறுக்கும் சண்டிக் குதிரைகளும், போர்ப் புரவிக்கு ஈடாகுமா?
இந்தத் தேர்தலில் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிய அவர்களது பலூன் இன்றைய வாக்கெடுப்பின்போது முற்றிலும் காற்றிறங்கிப் போகும் என்பது தெரிந்து தான், நாமோ, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரோ, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்களோ இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அவர்களது உண்மையான வாக்கு சதவீதம் என்பது சொற்பமானதே! முதலமைச்சர் கனவு என்பதும், திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று கூச்சலிட்டதும் எத்தனை மோசடியானது என்பதை அந்தச் சில இளைஞர்கள் காலம் தாழ்ந்தேனும் உணர்வார்கள்.
* மாற்றம் என்பது ஏமாற்றமாகவே முடிவது உறுதி!
தமிழ்நாட்டில் இந்த ஏமாற்று வித்தைகள் எல்லாம் பலிக்காது என்பதை மீண்டும் இந்தத் தேர்தல் நிரூபித்துக் காட்டும்! என்றாலும் அந்த மாயையில் சிக்கியுள்ளவர்களையும் மீட்க வேண்டியது நமது கடமை.
திராவிடர் கழகம் முன்னின்று மேற்கொள்ளும்!
குடிநோயாளிகளை, போதை நோயாளிகளை மீட்க மய்யங்கள் இருப்பதுபோல, சினிமா போதையில் சிக்கியுள்ள இளைஞர்களை மீட்கவும் நாம் பணியாற்ற வேண்டியது நமது அவசர அவசிய கடமை! அதனைத் திராவிடர் கழகம் அடுத்து முன்னின்று மேற்கொள்ளும்!
அறியாமை வீழும்; சுயமரியாதை வெல்லும்!
சூழ்ச்சிகளும், வேடங்களும் முறியடிக்கப்படும்!
திராவிடத்தின் பெருவெற்றி கொடியேற்றும்!
திராவிடம் வெல்லும் – நாளைய வரலாறு என்றும் சொல்லும்!
- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
23.4.2026
தமிழ்
Anandhi balan retweetledi

ஐந்து ஆண்டுகால ஆட்சி எப்படி கடந்தது என்பது கூட தெரியாத அளவுக்கு நிம்மதியான ஆட்சியை கொடுத்துள்ளார் நம் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் தளபதி @mkstalin அவர்கள்..
இந்த நல்லாட்சி வரும் காலங்களிலும் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
@TRBRajaa @rdsekarmla @iamchsekar @gpmohanbabu

தமிழ்







