
DEVARAJ M
549 posts






த.வெ.க.வினர் மாமுல் கேட்பதாக புகார் மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம். மாவட்டத்தில் 42 கடைகள் திறக்கப்படவில்லை. மாமுல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டியதாக புகார்.காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியும் வேலை நிறுத்த போராட்டம் #TVK



தவெக அரசு பதவியேற்று ஒரு வாரம் ஆன பின்னரும் அமைச்சர்கள் இல்லாமல் காலியாக உள்ள துறைகள்: அதில் முக்கியமானவை வேளாண்துறை உயர்கல்வித்துறை, போக்குவரத்து, வணிகவரி மற்றும் சமூக நலத்துறை, பால்வளத்துறை ஆகும். தமிழகத்தின் வருவாயில் முதன்மை பங்கு வகிப்பது வணிகவரி மற்றும் பதிவுத்துறை தான். அந்தத் துறைக்கு இதுவரை அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் கொண்டு வந்தது திமுக அரசு ஆனால் தமிழக வெற்றிக்கழக அரசின் இதுவரை வேளாண்மை அமைச்சர் நியமிக்கப்படவில்லை. விரைவில் பட்ட பிறவியை கூட்டி பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த வேண்டியுள்ளது. இந்த சூழலில் பல்வேறு துறைகளுக்கு அமைச்சர் நியமிக்கப்படாததால் பட்ஜெட் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது . மேலும் பல்வேறு அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. அதற்கு அமைச்சர்களின் ஒப்புதல் அமைத்த அவசியம். அமைச்சர்கள் இல்லாததால் பல துறைகளில் கோப்புக்கள் தேங்கியுள்ளது. ஓரிரு நாட்களுக்குள் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க விட்டால் அரசு நிர்வாகப் பணிகள் முடங்கி போய்விடும். கடந்த மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு பணிகளுக்கு நிதி விடுவிக்கப்படாமல் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது










பத்து லட்சம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம்; அதை மேன்மையாக கருதுகிறோம் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #Seeman #NTK #News18Tamilnadu | News18Tamil.com

















