

என்றும் அறிவாலயம்🖤❤️
2.8K posts

@dmk_slm
Politician | Political Analyst | Politics | DMK 🖤❤️



சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி சென்றடைந்த MLA முகுந்த் பாண்டியனை வரவேற்ற தவெகவினர். நடுரோட்டில் பட்டாசு வெடித்து, கூட்டமாக நின்று வரவேற்றதால் போக்குவரத்து நெரிசல். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என தவெக தலைமை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. #Krishnagiri #TVK #TVKMLA #TrafficCongestion #Chanakyaa Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in

ரீல் அந்து போச்சு அமைச்சரே ! வாடகை கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் விஜய் என்று சொல்லியுள்ளார் அமைச்சர் ராஜ்மோகன். அவருடைய தேர்தல் affidavit இல் தனது சொத்து மதிப்பு 2 கோடி என்றும் , 23 லட்சம் ஆண்டு வருமானம் அதற்கு வரி கட்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஒரு ஃபோர்ட் Figo கார் வைத்து இருக்கிறார். 1.10 லட்சம் தனது வங்கி கணக்கில் இருப்பதாக சொல்லி இருக்கிறார். மதுராந்தகத்தில் 1200 sqft இடம் வைத்து இருக்கிறார். 50 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி வைத்து இருக்கிறார். விருகம்பாக்கத்தில் சொந்த வீடு உங்க கதைக்கு ஒரு அளவே இல்லையா ?





ஒரு மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திலேயே மிகச்சிறந்த திட்டம் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்'.. Trendsetter திட்டம்.. கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள் மாதந்தோறும் 1.31 கோடி பெண்களுக்கு வழங்கிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாட்டு மகளிர்களுக்கு வரவு வைக்க எதற்கு கால அவகாசம்? இது மாற்றம் இல்லை, ஏமாற்றம்.. உங்களின் Reels lifeஐ ஒதுக்கி வைத்து விட்டு, மக்களின் Real lifeஐ கவனியுங்கள்.. தமிழ்நாட்டு மகளிர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெரிதும் பயன்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகையை உடனடியாக அவர்களுடைய வங்கி கணக்குகளில் வரவு வைக்க வேண்டும்..






சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவில் இரண்டு நாட்களாக சாக்கடை உடைந்து தண்ணி வெளியே போயிட்டு இருக்கு பொதுமக்கள் மூக்கை பொத்தி கொண்டு போயிட்டு இருக்காங்க கையாலாகாத நடிகர் ஆட்சியில் மெத்தனத்தில் இருக்கும் அரசு நிர்வாகம் 🤦

கிருஷ்ணகிரியில் த.வெ.க எம்.எல்.ஏ.க்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு... கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்... தலைமையின் உத்தரவு என்ன ஆனது? #Krishnagiri | #TVK | #MLA | #Traffic | #PolimerNews


கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம். மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை. இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். “எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்- “போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!! எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்! @EPSTamilNadu








