Maran
3.3K posts

Maran
@maran77
Belongs to Dravidian Stock
தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் Katılım Şubat 2019
912 Takip Edilen621 Takipçiler
Maran retweetledi
Maran retweetledi
Maran retweetledi

உடன் பிறப்புகளே! 📍🔴
திரு. திருமாவளன் : அதிமுக ஆட்சியமைக்க ஒரு Proposal வந்திருக்கு, உங்க கருத்து என்ன - "அப்போ திமுக proposal குடுக்கல கருத்து கேட்டிருக்கு கூட்டணி கட்சிகள் நிலைபாடு என்னனு".
மே 12 ஆம் தேதி திமுக-அதிமுக அதிகாரப் பூர்வமா என்ன அணுகல, என் நண்பர்கள் போன்ல பேசினாங்கனு சொல்றார், அவரே மே 17ஆம் தேதி ஒரு தரப்புல இருந்து அழைப்பு வந்துச்சுனு சொல்றார் - "திமுக, அதிமுக இல்லனு மே 12 தேதி சொல்லிட்டார் அப்போ யார் அந்த "ஒரு தரப்பு".
எதிர் அரசியல் பேசுறவங்க இதெல்லாம் Decode பண்ண மாட்டாங்க, ஏன்னா அவங்களுக்கு திமுக எதிர்ப்புக்கு ஒரு ஆயுதம் வேணும்... ஆனா திமுக'காரன்டா நானு'னு பயர் விட்டுட்டு திடீர்னு ஒரு வீடியோ வந்ததும் அதுல என்ன பேசியிருக்காங்க, என்ன செய்தி சொல்லப்படுதுனு எதையும் decode பண்ணாம தன் புனிதத் தன்மைய நிரூபிக்க நேரா திமுக சங்க கடிக்க வந்தாங்கல அவங்க "Very Dangerous fellows" 😅 அந்த ID எல்லாத்தையும் note பண்ணி வைங்க தேவப்படும்.

தமிழ்
Maran retweetledi

திமுகவுக்கு வெளியே என்னைப் போன்ற திமுக ஆதரவாளர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் இருவர் .
ஒருவர் தன் சொந்த கட்சியே தன்னை முன்னிறுத்த தயங்கிய காலகட்டத்தில் தன்னை முன்னிறுத்திய ஒரு கட்சியை தனக்கு தேவையான தேர்தலில் தடுப்பை எகிறிக் குதித்து சுவீட் பாக்ஸ் வாங்கிக் கொடுத்து சகோதரர் என கட்டி அணைத்து விட்டு தான் அதற்கு நன்றிக்கடன் செய்ய வேண்டிய தேர்தலில் கூட இருந்தே குழி பறித்து விட்டு , நாங்கள் இதுவரை உங்களோடு இருந்தோம் , இப்போது அரசியல் சூழ்நிலையால் வெளியேறுகிறோம் என ஒரு அடிப்படை மாண்பைக் கூட காட்டாமல் பல்டி அடித்து இவரையா பலர் பப்பு என கேலி செய்த போது நாம் தாங்கிப் பிடித்தோம் என ஆச்சரியப்பட வைத்தவர் .
இன்னொருவர் 2016 ல் 1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி வாய்ப்பை இழக்க ஒரு காரணமாக இருந்தவர் என்பதையும் தாண்டி , அரவணைக்கப்பட்டு கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட உறுதுணையாக இருந்த பின்னரும் , இப்போது முன்னுக்கு பின் முரணான செய்திகளை சொல்லி அதே கழுத்தறுப்பு வேலையை செய்ய முற்படுகிறார் என்றே தோன்றுகிறது .
இருவரும் வாழ்க வளமுடன் !

தமிழ்
Maran retweetledi

VCK has once again proven to be the worst backstabbers ! Why would you spread lies about your coalition partner 🤷♂️
@thirumaofficial - Hon MP Anna , With all due respect , whatever you are doing will come back to bite you !
Your orchestrated well planned smear campaign on the DMK will come back to bite you one day !
VCK votes did not transfer in the places where DMK contested , form 20 in North districts and Chennai proves a pattern !
Anna , I understand the rule - Everything is fair in politics !
It is very easy to bash the DMK when we still picking ourselves up form an election defeat !
We will remember this treachery Anna ! The 🖤❤️ brigade will remember how you used us on our high and ditched us when we were low ! Your hypocrisy and selfishness will not end well for you or your party !
Thalaivaare @mkstalin , we were with you in good times, we will stand firmly behind our flag in testing times !
We shall overcome this mountain of lies piled against us by our enemies and allies !
We will fight and we will win !
I will only talk for my leaders and my party henceforth, regardless of whatever alliance comes up in the future !
Nobody except my leader and my party has my support !
🖤❤️
English
Maran retweetledi

தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆதரவு. இத்தனை வெற்றிகளை அக்கட்சி பெற்றதே அதிசயம் தான். திமுக முன்மொழியும் அரசியல் சிக்கலானது. திமுகவை ஆதரிப்பது எளிதல்ல. இடதுசாரியாகவோ, தமிழ்த்தேசியவாதியாகவோ அம்பேத்கரியவாதியாகவோ இருந்துவிடலாம். அக்கொள்கைகளுக்கெல்லாம் எல்லோருக்கும் புரிய வைக்கும் எளிமை இருக்கிறது. ஆனால் திமுகவின் கொள்கை அப்படியல்ல.
இந்தியாவிலேயே பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் நடத்தி வன்முறையைக் கையில் எடுக்காமல், அறவழியில், அறிவு வழியில். தேர்தலில் தொடர் வெற்றி கண்ட கட்சி திமுக மட்டும் தான். இந்தக்கொள்கையை எல்லோரும் எதிர்ப்பார்கள். ஏனெனில் இது எல்லாவற்றையும் மறுக்கிற கட்சி. புரட்டிப் போடுகிற கட்சி. அதை மிகவும் எளிதாக வெறுப்பரசியல் என்று சொல்லிவிடலாம். அது பயன்படுத்தும் 'நடைமுறைவாதத்தை' சமரசம் என்று எள்ளி நகையாடலாம். அதன் வெளிப்பாட்டுத் தன்மையை முரட்டுத்தனம் என்றோ, பண்ணையார்த்தனம் என்றோ சொல்லிவிடலாம். அதன் தன்னம்பிக்கையை, ஆணவம் என்று எல்லோரும் தவறாகக் குறிப்பிடுவர்.
திமுகவிற்கு நெருக்கடி எங்கிருந்தும் வரலாம். பார்ப்பனர் முதல் ஒடுக்கப்பட்டோர் வரை எல்லோருக்கும் திமுகவின் மீது விமர்சனம் இருக்கும். உயர்ஜாதியினர், திமுகவை தமது கட்சி என்று பார்ப்பதில்லை. சூத்திரர்கள் இதை தலித்துகளுக்கு ஆதரவான கட்சி என்பார்கள். தலித்துகள் இதை சூத்திரர்கள் கட்சி என்பார்கள். இந்துக்கள் திமுகவை சிறுபான்மையினர் கட்சி என்பார்கள். கடவுள் நம்பிக்கை கொண்டோர் நிந்திப்பார்கள். பெண்கள் இதை முரட்டு ஆண்களுக்கான கட்சி என்பார்கள். திமுகவை யாரும் வெளிப்படையாகச் சொந்தம் கொண்டாடுவதில்லை. ஒரு கள்ளக்காதலைப் போல இந்த உறவைப் பாவிப்பார்கள். இத்தனைக்கும் இது தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.
அதே போல திமுகவை ஆதரிப்போருக்குக் குழப்பம் வரலாம், தடுமாற்றம் வரலாம். முன் மாதிரிகள், உதாரணங்கள் இல்லாத அரசியலை இந்த இயக்கம் கடைபிடிக்கிறது. மாநில உரிமை பேசும் (ஆனால் பிரிவினை பேசாது), மொழி உரிமை பேசும் (ஆனால் மொழி வெறி இல்லை), பெண்ணுரிமை பேசும் (ஆனால் பெண்கள் ஆதரவு இருக்காது), ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதை வெளியே சொல்ல முடியாது, ஏனெனில் யாராவது ஒருவர் நீதிமன்றத்திற்குப் போய் அதைத் தடுத்துவிடுவர்கள். நீதிமன்றம், ஊடகம், அதிகாரிகள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், படைப்பாளிகள் என எதிரிகளை எங்கும் கொண்டிருக்கும் கட்சி இது.
இந்தத்தோல்வி புதிதல்ல. இனியும் திமுக வெகுண்டெழும். அதற்கான தேவை இன்னும் இருக்கிறது.
திமுக தோற்றதற்கு வெளியே சொல்லப்படும் காரணங்கள் நிறைய இருக்கலாம். ஊழல், போதை, பெண் பாதுகாப்பு என்பன யாவும் ஆதாரமற்றவை என்று ஏற்கனவே பலர் நிரூபித்துவிட்டனர். இவை எல்லாம் நிர்வாகக் காரணங்கள். அவற்றை வெளியில் சொல்லிவிடலாம்.
வெளியில் சொல்லப்படாதது அரசியல் காரணங்கள் தான்.
கடந்த ஆட்சியில் நாம் பயன்படுத்திய திராவிட மாடல் என்ற சொல் அனைத்து எதிரிகளையும் ஒன்றிணைத்துவிட்டது. தமிழ்நாடு தவிர இந்த வார்த்தை இந்த அர்த்தத்தில் எங்கும் புழக்கத்தில் இல்லை. ஒரு எல்லை மாநிலம் இப்படியான ஒரு உறுதியான கொள்கையுடன் வளர்ச்சி பெறுவது இந்தி, இந்து, இந்தியா என்று பேசுவோரைப் பயமுறுத்திவிட்டது.
பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைவரையும் சங்கடப்படுத்திவிட்டது. குடும்ப அமைப்பே கேள்விக்குள்ளாகும் என்ற கிலி (paranoia) ஆண்களையும் ஆணாதிக்கத்தை உள்வாங்கிய பெண்களையும் உலுக்கிவிட்டது. பிற மாநிலங்களிலும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியக் குடும்பங்கள் என்னாகும்?
கல்விக்குக் கொடுக்கப்பட்ட கூடுதல் முக்கியத்துவம் படிப்பில் அக்கறை இல்லாதோருக்கும், முறையான கல்வியில் தோல்வி அடைந்தோருக்கும், படிப்பில் வெற்றி பெற்ற உயர்ஜாதியினருக்கும் சங்கடத்தைக் கொடுத்துவிட்டது. காலை உணவுத்திட்டம், எல்லோரையும் படிக்கவைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அடைந்திருக்கும் மிதமிஞ்சிய வளர்ச்சி எல்லோருக்கும் அச்சத்தைக் கொடுத்துவிட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு வரை தமிழர்கள் தான் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குப் போனார்கள். இப்போது வடமாநிலத்தவர் இங்கு பணிபுரிகின்றனர். கல்வியில், மருத்துவத்தில், தொழிலில், வேலைவாய்ப்பில், பொதுக்கட்டமைப்பில் நாம் அடைந்திருக்கும் பிரமாண்டமான வளர்ச்சி திராவிட மாடல் அரசியல் இந்தியா முழுக்கப் பரவிவிடுமோ என்ற பயமும் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. (1/2)
தமிழ்
Maran retweetledi
Maran retweetledi


@TVKVijayHQ Blastu blastu கதறு கதறு
இதைத்தானப்பா உங்காளுகளுக்கு சொல்லிக்ப்கொடுத்தீங்க
இப்பப்பாருங்க அது உங்களையே திருப்பித் தாக்குது
தமிழ்

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும்,
வணக்கம்.
இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது.
மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர்.
நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது.
நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று.
தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம்.
இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை.
பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார்.
அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.
நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு.
அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை.
இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல?
இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க.
சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.
இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல?
மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம்.
மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம்.
நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.
நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர்.
நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க.
நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம்.
இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர்.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை.
மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம்.
மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான்.
மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.
தமிழ்
Maran retweetledi

“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
தமிழ்
Maran retweetledi
Maran retweetledi

जब भी देश में सबसे ज्यादा प्रभावशाली नेताओं की लिस्ट बनेगी उसमें MK STALIN का नाम जरूर होगा
क्या ही नेता है स्टालिन, खुद चुनाव हार गया लेकिन THALAPATHY VIJAY की सरकार बनवाने में खुद आगे आया
2 विधायकों को TVK प्रमुख को समर्थन देने के लिए राजी किया और बहुमत के आंकड़े तक पहुंचा दिया
अब विजय के तमिलनाडु के मुख्यमंत्री बनने का रास्ता साफ हो गया है
स्टालिन की जगह अगर बीजेपी का नेता होता तो अभी तक विजय की पार्टी के नेताओं को खरीदने की कोशिश कर रहा होता
देश के सभी पार्टी को स्टालिन से सीखने की जरूरत है कि राजनीति में हमेशा दाव पेंच नहीं चलाने चाहिए

हिन्दी
Maran retweetledi

திமுக தோற்றதுக்கு எல்லாரும் சோசியல் மீடியா காரணங்களை சொல்லி முடிச்சிட்டோம்.
மிகவும் முக்கியமான சில காரணங்கள் இருக்கு. அவை பற்றி பேசாமலே கடந்து போக முடியாது.
Anti-incumbency. அதை அலையாக மாற்றி இருக்காங்க.
10 வருஷம் ஆட்சிக்கு வந்தவுடன் தொண்டர்களை மறந்தது. தொண்டர்களை பலரும் கவனிக்க வில்லை. விளைவு - பல தொண்டர்கள் விக்ரதி. மேல இருந்து எந்த அடிப்படை உதவியும் கவனிப்பும் இல்லை. உள்ளாட்சிகளில் தேர்ந்து எடுக்கப்பட்ட பலரும் இதனால் கண்ட இடங்களில் கை நீட்ட துவங்கினர். இது மக்களை பல இடங்களில் எரிச்சல் ஆக்கியது.
பல அமைச்சர்கள் echo chamber குழுக்களுக்கு செல்ல துவங்கினர். குறிப்பாக @ptrmadurai அவர்கள், இதுவரை 6 முறை ஊருக்கு வந்தபோதும், வருவதற்கு முன்னரும் அவருடைய அலுவலகம், PA என்று அனைவர் மூலமும் சந்திக்க முயற்சி செய்தேன். ஏன் அவர் மொபைல் எண்ணுக்கு பல முறை மெசேஜ் செய்தும் இன்று வரை அவரை பார்க்கவே முடியல. ஆனா மதன் கௌரி கல்யாணத்துக்கு போயிட்டு இருந்தார். Accessibility is the basic key to people's favor in politics. Unfortunately PTR completely lost it. இத்தனைக்கும் அவர் நடத்தும் பல்வேறு குழுக்களில் இருந்திருக்கேன். ஒரு கட்டத்தில் வெறுத்து போயிட்டேன். என்னை போன்ற பலருக்கும், பல்வேறு ஆராய்ச்சியாளர்களுக்கும் எட்டாத உயரத்தில் இருந்தார். Umagine TN போன்ற IT conference ல influencer களை கவனித்து கொண்டு இருந்தார். மற்றவர்களை அது தெரியுமா, இது தெரியுமா என்று கேட்டவர் இதை ஏன் மறந்தார்.
கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளிலும் வாயை வைத்து நாசமாக்கிய பெருமை ஒருவரை சாரும் என்றால் அது உதயச்சந்திரன் IAS. நான் ரொம்ப நல்லவன், யாரும் என்னை பார்க்காதீங்க என்று சொந்தக்காரர்களுக்கு எல்லாம் சொல்லிவிட்டவர், தன்னுடைய ஆசி பெற்ற ஆட்களுக்கு என்னவெல்லாம் செய்தார் என்று அனைவருக்கும் தெரியும்.
PEN நிறுவனத்தில் வேலை பார்த்த mid level ஆட்களின் arrogance. என்னவோ defacto மினிஸ்டர் போலவே எதை சொன்னாலும் இதை நாங்க செய்றோம், இதையும் செய்றோம், அதையும் செய்றோம் என்று சொன்னது. எவனையும் எதையும் சொல்ல விட்டது இல்லை.
மிக முக்கியமான ஒன்று - கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் சுற்றி சுற்றி நாயுடு, ரெட்டி லாபிகளை ஆளவிட்டது. இதை பல்வேறு சமூக குழுக்களும் குறிப்பாக வன்னியர் ஆட்களும், முதலியார் ஆட்களும் வெறுத்தார்கள்.
எங்க மாவட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் காந்தி மாவட்ட செயலாளர் - நாயுடு. முழுக்க முழுக்க நாயுடுகளை மட்டுமே பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் ஆக வைத்து இருந்தார். எங்கள் ஒன்றிய செயலாளர் யார் என்றால் ஆற்காடு வீராசாமி அவர்களின் தம்பி மகன். எப்படியும் அடுத்த 10 வருடத்தில் MLAக்கு நிற்க வைக்கப்படுவான். 2013இல் அவரின் அப்பா சீனிவாசன் சாகும்வரை அவர் தான் ஒன்றிய செயலாளர். யார் சொன்னாலும் கேட்க மாட்டார், மற்ற சமூகங்கள் முட்டி மோதி அதிமுக பக்கம் போய்விட்டது. முதலியார், வன்னியர் அதிகம் இருக்க ஊரில் நாயுடுக்களே ஆட்சி செய்தால் எப்படி.
சரி, எங்க ஊரு கலவை. அந்த கதையை எடுத்துக்கொண்டாலும் எங்கிருந்தோ வந்த சேது ரவி என்னும் நபருக்கு நகர செயலாளர் கொடுத்து 15 வருஷமாக வைத்து இருக்காங்க. 2022இல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை பேரூராட்சியை கைப்பற்றவே முடியல. ஒரே காரணம் - எங்கிருந்தோ வந்தவனை எங்க ஊருக்கு தலைவர் ஆக்குறதா என்று அதிமுகவை உட்காரவைத்து இருக்காங்க.
2026 தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுகுமார். 2024 தேர்தல் முடிந்தவுடன் வேலை செய்ய இறங்கியவர். இன்ஸ்டாகிராம் லோக்கல் ஆட்களை பிடித்து 1.5 கோடி இரண்டு வருடங்களில் செலவு செய்து தொடர்ச்சியாக organic reach செய்து வெற்றி பெற்று இருக்கார்..திமுக வேட்பாளர் ஈஸ்வரப்பன் தேர்தலுக்கு 25 நாள் முன்னரே இன்ஸ்டாகிராம்ல அக்கவுண்ட் Open பண்ணார். இதெல்லாம் விளங்கவா.
இதை எல்லாம் சொன்னாலும் தலைமைக்கு கேட்குமா என்று தெரியாது. கேட்டால் நலம்.
தமிழ்
Maran retweetledi

என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
Maran retweetledi
Maran retweetledi

கடந்த படத்துல மாதிரி இந்த அழுகையையும் அடுத்த படத்துல காமெடி சீன் நடிப்பீங்களா @JiivaOfficial
உங்க நடிப்புல இந்த சீன் பாத்து வாய் விட்டு சிரிக்க ஆவலா இருக்கேன்😍
Polimer News@polimernews
ராஜஸ்தானில் கார் விப*தில் உயி**ழந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.. தந்தையின் மறைவால் மனமுடைந்து கண்ணீர் விட்டழுத நடிகர் ஜீவா.! #RBChaudary | #Jiiva | #PolimerNews
தமிழ்
Maran retweetledi

கரூரில் நடந்த துயரசம்பவத்துக்குப் பிறகு இறந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து விஜய் சந்தித்தார். எல்லா கட்சிகளும் கரூருக்கு வந்து ஆறுதல் தெரிவித்தன. கரூரில் மானம் உள்ள ஒரு எம்.பி. இருந்திருந்தால், பாதிக்கப்பட்ட மக்களை விஜய் இழிவுபடுத்துகிறார் எனக் கேட்டிருக்க வேண்டும். கரூர் சட்டமன்ற உறுப்பினர் கரூர் துயரசம்பவம் தொடர்பாக யார் கேள்வி எழுப்பினாலும் இதைத்தான் கேட்கிறார்.
ஜனநாயகன் படம் சென்சரால் தடுத்து நிறுத்தப்பட்டது. கரூர் எம்.பியின் தலைவர் அதற்கு ஆதரவாகப் பதிவுகள் போட்டார். ஆனால் விஜய் ஒரு நன்றி கூடத் தெரிவிக்கவில்லை.
தன் சொந்த ஜாதியில் உட்பிரிவுக்கு சீட் இல்லை என சமூக வலைதளத்தில் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தபோது, சொந்த தொகுதி மக்களை இழிவுபடுத்தியதற்கு கோபம் வரவில்லை. சொந்தக் கட்சித் தலைவரை “நீயெல்லாம் ஒரு ஆளா” என லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்ததற்கும் கோபம் வரவில்லை.
இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என யார் தன் தொகுதி மக்களையும் சொந்தக் கட்சித் தலைவரையும் இழிவுபடுத்துபவர்களுக்கு ஜல்லி ஒரு எம்.பி அடிக்கிறார் என்றால்...
இது தான் ஞானி ஸ்கூல் ஆஃப் தாட்ஸ் இன் பயின்ற அரசியல் பாடமா?
கரூர் மக்களே, அடுத்த முறையாவது சிந்தித்து வாக்களியுங்கள்.
தமிழ்
Maran retweetledi

DMK is going to win and we will form the government by its own MLA’s.
And no one can shake us for next 5 years.
Keep all the social media’s negativity away and get ready to celebrate our victory On May 4th
🖤❤️
@mkstalin @Udhaystalin @arivalayam @TRBRajaa

English
Maran retweetledi

கேள்வி: "கூட்டணி கட்சித் தலைவர்களின் சமீபத்திய கருத்துக்களை எப்படி புரிந்துகொள்வது?"
பதில்:
இப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் பட்டும் படாமல் பேசுவதைப் பார்த்தால், "வெற்றியோ தோல்வியோ அதற்கான முழுப்பொறுப்பும் திமுகவையே சாரும்" என்பதைத்தான் அவர்கள் வேறு வார்த்தைகளில் சொல்ல முயல்கிறார்கள் என்று புரிந்துகொள்கிறேன்.
இதுதான் 100% உண்மையான கள யதார்த்தம். காரணம், இந்தத் தேர்தலில் பல வகைகளில் திமுக தன் தொண்டர்களை மட்டுமே நம்பி களத்தில் போராட வேண்டிய சூழல் நிலவியது. இதை நாம் மட்டும் சொல்லவில்லை. 'சில தொகுதிகளில் நம் தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றவில்லை' என்று ஒரு கூட்டணி கட்சித் தலைவரே ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்.
ஆக, தங்களின் பட்டும் படாத பேச்சுக்கள் மூலம், "தேர்தல் முடிவுகளுக்கு திமுகதான் பொறுப்பு" என்ற கள நிலவரத்தை ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்ட கூட்டணி கட்சித் தலைவர்களை பாராட்டி, கழக உடன்பிறப்புகளான நாம் தலைவர் தளபதி @mkstalin அவர்களின் வழியில் நாளை மறுதினம் வரவிருக்கும் தேர்தல் முடிவுகளை வரவேற்க நம்பிக்கையோடு காத்திருப்போம். ❤️✨
- Ganesh Babu
#DMK4TN

தமிழ்

