Rangarajrandy retweetledi

சொல்லி வச்ச மாதிரியே எல்லாரும் எதிர்பார்த்த மாதிரி வேலுமணி தலைமைல நம்ப மோடிஜி சப்போர்ட் குரூப் இப்ப வந்து விஜய்ண்ணாவுக்கு ஆதரவு தெரிவிச்சாச்சு. விஜய்க்கு மெஜாரிட்டி வராதப்ப இதுதான் ஆரம்பத்துல இருந்தே பாஜகவோட ப்ளானே என்ன ஒரு சொதப்பல் ஆகிடுச்சின்னா காங்கிரஸ் ஆளுக்கு முன்ன போயி கூட்டணிக்கு ஆதரவு தர்ரோம்னு போயி பாயை விரிச்சு படுத்ததும் பின்னாடி திமுக கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவிச்சதும்தான்.
இனி இங்கிருந்து ஓடி ஓடி போயி கால்ல விழுந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை துரத்தி விட்டுட்டு அதிமுகல இருந்து வந்தவங்களுக்கு மந்திரி பதவி கொடுக்கப்படும். ஒருவேளை அது இப்ப நடந்தா அது தவெகவுக்கு கெட்ட பேர் ஆகிடும் நேரடியா அதிமுக ஆதரவுல பாஜக சப்போர்ட்டோட இருக்காங்க அதனாலதான் காங்கிரஸ கழட்டி விட்டுட்டாங்கனு பேரு டேமேஜ் ஆகும்னு அவங்கள உள்ளயே வச்சிட்டு காத்திருக்கலாம். ஆனாலும் அது ரொம்ப நாள் நீடிக்காது உள்ளாட்சி தேர்தல் வர்ரப்ப காங்கிரஸ் சேட்டைய காமிப்பாய்ங்க. இவ்ளோ நாளு காஞ்சு கிடந்தவங்களுக்கு உள்ளாட்சி தேர்தல்ல அந்த பதவி வேணும் அது வேணும் இது வேணும்னு குடுமிய பிடிச்சு ஆட்டுறப்ப தொந்தரவு தாங்காம எங்களுக்கு அதிமுக கூட்டணி போதும்னு துரத்தி விடப்படலாம்.
இது ஒரு பக்கம் இருக்க அடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவை பெரும்பான்மைய நிரூபிக்குறதுல எடப்பாடியார் தலைமையிலான மிச்சம் உள்ள அத்தனை பேரும் கட்சி கொறடாவை மீறி சொல்லி வச்ச மாதிரி மாத்தி ஓட்டளிப்பாங்க அதையே காரணமா சொல்லி தகுதி நீக்கம் செய்யப்பட்டு அந்த தொகுதிகளுக்கு re-election வரும் ஆளுங்கட்சி ஆதரவோடு அத்தனை தொகுதிலயும் TVK ஜெயிச்சு எந்த கூட்டணி ஆதரவும் இல்லாம அண்ணனோட அரசாங்கம் தனிப்பெரும்பான்மைல ஆட்சில இருக்கும். இதுதான் அஜண்டா.
இதெல்லாம் ஆரம்பத்துலயே நடந்தா அண்ணனுக்கு கெட்ட பேரு வரும் இல்லயா அதனால இவ்ளோ அதிமுக திமுக கூட்டணிக்கு ட்ரை பண்ணிச்சுனு பல புரளிய கிளப்பி விட்டு இப்ப அதை வச்சு சண்டை போட்டு வர்ரவங்கள கூட்டணில சேர்த்துகிட்டோம்னு narrative set பண்ணி அட அட அட . இதுல சிக்கி சின்னா பின்னமானது யாருன்னு கேட்டீங்கன்னா ஆளுக்கு முன்ன கப்பல்ல வேலை கிடைக்குதுனு கோச்சுட்டு போனாங்களே பண்ணையார் குரூப்பு பாவம் அவங்களே அவங்களேதான்.
பாஜகவ பொறுத்த வரை இது ஒரு கல்லுல மூணு மாங்கா தனக்கு ஆதரவனாவங்கள ஆளுங்கட்சியோட இணைச்சு தவெக பிடிய கைல கொண்டு வந்தாச்சு. அதிமுகவ உடைச்சு சின்னா பின்னமாக்கியாச்சு. இவிங்க மேல உள்ள பழைய கேஸ்களை வச்சு இனி ஒட்டுமொத்தமாவே கைப்பற்றிக்கலாம். காங்கிரஸ் மற்றும் அதோட கூட்டணிக் கட்சிகள ஒட்டு மொத்தமா சோலிய முடிச்சாச்சு. அப்டியே ஒரு வருசம் போனா ஏதாவது காரணத்த சொல்லி விஜய் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவ பின் வாங்க வைப்பாங்க அதுக்கு முன்ன விஜய்க்கு எவ்வளவு கெட்ட பேர் வாங்கி கொடுக்க முடியுமோ அவ்வளவு நெருக்குதல கொடுத்து கடைசில ஆட்சிய கலைச்சு விடுவாங்க. மக்களை மதத்தால மொழியால் இனத்தால் பிரிவினை உண்டாக்கி சிதற வச்சிடுவாங்க. இதற்கு ஜோசப் விஜய் என்கிற ஒரு பேரு மட்டுமே தாராளமா போதும்.
அப்பதான் அண்ணாமலை entry BJP ல இருக்கும். ஏங்க கண்டவங்களுக்கெல்லாம் சீட் கொடுத்த பாஜகவுக்கு அண்ணாமலைக்கு ஒரு சீட் கொடுக்க முடியாதா? யோசிச்சு பார்த்தீங்களா? ஏன் கொடுக்கலன்னா இப்ப பாஜக தொண்டர்கள் மத்தில அண்ணாமலை மேல ஒரு இரக்கத்த உருவாக்கத்தான். ப்ச் அந்த மனுசனுக்கு ஒரு சீட் இல்லயா? கடசிக்காக மாடா உழைச்சவருக்கு இந்த நிலைமையா? அவர் இருந்திருந்தா பாஜக இப்படி ஆகிருக்குமான்னு ஒரு எண்ணத்த create பண்ணியாச்சு. இப்படி ஆதங்கத்துல இருக்குற பாஜக மத்தியில அண்ணாமலை ரிஎன்ட்ரி பலமான எழுச்சியா அமையும். அந்த நேரம் நாலா உடைஞ்சு போன அதிமுக ஒரே கட்சியா பாஜகவா மாறி வீறு கொண்டு களத்துல நிற்கும் பாஜக.
டெல்லில ஆண்டாண்டு காலம் அசைக்க முடியாத ஒரு கட்சியா நின்ன காங்கிரஸை நேரடியா நின்னு ஜெயிக்க முடியாத பாஜக சம்பந்தமே இல்லாத அரவிந்த் கெஜ்ரிவால்ங்குற ஒரு ஆளை திடீர்னு புகுத்தி மக்கள் கிட்ட புது கட்சிக்கு வாக்களிப்போம் மாற்றம் வரட்டும்னு புரட்சி உண்டாக்கி முதலமைச்சராக்கி அதே அரவிந்த் கெஜ்ரிவாலை லஞ்சம் மற்றும் ஊழல்ல கெட்ட பேராக்கி ஆட்சிய கவிழ்த்து இன்னிக்கி அங்கே ஆம் ஆத்மியும் இல்ல காங்கிரஸும் இல்ல அதே கதிதான் தமிழ்நாட்டுக்கும் இதை புரியும் வரை நம்பளோட அழிவுக்காகத்தான் நாமளே இதை பண்றோம்னு கூட புரியாம ஒரு கும்பல் ரீல்ஸ் போடும் ஒரு கும்பல் நடக்குற எல்லா அரசியல் மாற்றத்திற்கும் முட்டு குடுக்கும்.
-Pravin Devaraj

தமிழ்























