Pixelated Pigeon

7.7K posts

Pixelated Pigeon banner
Pixelated Pigeon

Pixelated Pigeon

@top2bot15

🎬 திரையுலக ரசிகன் | ❤️ காதல் & திரில்லர் | 🌍 உலக சினிமா சினிமாவின் மாயாஜாலத்தை ஆராயும் ஒரு பயணம்! பரபரப்பான திரில்லர்களில் இருந்து இதமான காதல் கதைகள் வரை

India Katılım Ekim 2015
1.6K Takip Edilen5.7K Takipçiler
Sabitlenmiş Tweet
Pixelated Pigeon
Pixelated Pigeon@top2bot15·
”Unnale Unnale"னா ஒரே காதல் படம்னு சொல்றதவிட, இது ஒரு feel. அந்த feelஐ காட்சி, இசை வழியா உணரலாம. அந்த feelக்கு உயிர் குடுத்தது Jeevaவின் Camera, Harrisன் இசை. இது ஒரு Visual Symphony. இது ஒரு Musical Poem. இது காதலின் புதிய aestheticனு கூட சொல்லலாம். இந்தப் படத்துல கதையை தாண்டி என்ன இருக்குனு பாக்கலாம்(Thread)👇
Pixelated Pigeon tweet media
தமிழ்
55
536
4.2K
492.6K
Pixelated Pigeon
Pixelated Pigeon@top2bot15·
Any fans..? எத்தனை பேர் சில்லறையை சிதற விட்டீங்க??
Pixelated Pigeon tweet media
தமிழ்
0
1
1
377
Pixelated Pigeon retweetledi
Pixelated Pigeon retweetledi
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟
🎬 #TribhuvanMishraCATopper (2024) 🔞 ✅ தமிழ் டப் 💻 Netflix ⭐ 3.5/5 சூப்பரான Dark comedy crime drama சீரிஸ் 😂🔥 நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நேர்மையான அரசு ஊழியரான Mishra பணத்தேவைக்காக ஆண் விபச்சார தொழிலில் ஈடுபட 😉 அதன்பின் நடக்கும் சிறப்பான சம்பவங்கள் 😂💥 கில்மா Scenes 🥵 & கெட்ட வார்த்தைகள் ஏராளம் 😂🔞 கோளாறான வில்லன் Gang, போலீஸ் மற்றும் துணைக்கதாப்பாத்திரங்களின் நகைச்சுவைகள் எல்லாம் நல்லாவே வொர்க் ஆச்சு 🤣👌 09 எபிசோடுகளுக்கு இழுத்திருக்க தேவையில்லை 😬 Ending எதிர்பார்த்த அளவுக்கு இல்லை அவசரமாக முடித்ததை போன்று இருந்தது 🫤 Recommended 🙌
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 tweet media
தமிழ்
8
23
84
9.2K
Pixelated Pigeon
Pixelated Pigeon@top2bot15·
@arrahman தலைவா.. படையப்பா படத்துல ஹரிஹரன் பாடிய மின்சார பூவே பாடல் வெர்ஷன் உள்ளதாக @rajinikanth தலைவர், சமீபத்திய பேட்டியில் சொல்லி இருக்கிறார். தயவு செய்து அதை வெளியிடுங்கள்.
தமிழ்
0
0
0
61
Pixelated Pigeon
Pixelated Pigeon@top2bot15·
இந்த வீடியோ ஃபுல்லா வருகிற படையப்பா சீன்ல, ஏ ஆர் ரகுமான் கைவண்ணம் சிறப்பா இருக்கும். அதுதான் இந்த படத்தோட பிரம்மாண்டத்துக்கும் முக்கியமா இருக்கும். ஆனா தலைவர் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லல. எனக்கு வருத்தம் தான்..
Rajinikanth@rajinikanth

என் திரை வாழ்வில் படையப்பா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பட நினைவுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். #Padayappa youtu.be/9EFzcuDaOJc

தமிழ்
0
0
1
384
Pixelated Pigeon
Pixelated Pigeon@top2bot15·
@teakkadai1 இதுதான் ரஜினியோட கடைசி படம் அப்படின்னு சொன்னாங்க...
தமிழ்
1
0
0
158
டீ
டீ@teakkadai1·
படையப்பா மீண்டும் Re Release ஆவதையொட்டி ஒரு வாட்டர் பாக்கெட் (முன்னர் எழுதியது) படையப்பா பற்றிய முதன் முதல் செய்தி 98ஆம் வருடம் வந்தது. வழக்கம்போல் ஒரு பிரஸ் மீட் வைத்து, படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர் போன்றோரை சம்பிரதாயமாக அறிவித்து படப்பிடிப்புக்கு கர்நாடகா நோக்கி பயணப்பட்டனர் படக்குழுவினர். அவ்வளவுதான் தமிழகமே தீப்பிடித்துக்கொண்டது. அந்த பிரஸ்மீட்டில், ரஜினி படையப்பா என்றால் படைகளுக்கு அப்பன், கமாண்டர்-இன் – சீஃப் போல என்று சொல்லிவிட்டு, இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் கட்டமைப்பு இல்லாத பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று சொல்லிவிட்டு,. ”படிங்கப்பா இருக்கிறான் படையப்பா” என்று ஒரு பஞ்ச்சையும் சொன்னார். ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்ட ஸ்டில்லில் ரஜினி, ஜீன்ஸ் அணிந்து, சுருட்டு குடிப்பது போல இருக்கவும், குமுதம் அரசு பதிலில், அவர் எதையோ (கோட்டை) பிடிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்திருக்க, அவர் எதைப் பிடிக்கிறார் பாருங்கள் என்றார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அதைப்பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை. எப்போது படம் வரும் என்ற ஒரு எதிர்பார்ப்பு மட்டும் தான் அவர்களுக்கு.. 96ல் வெளியான முத்து மெகா ஹிட். ஆனால் அடுத்த படமான அருணாசலம் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. நாங்கள் அப்போது அருப்புக்கோட்டையில் இருந்தோம். எங்கள் தெரு ஒரு ரஜினி கோட்டை. அதிலும் என் உயிர் நண்பன் ரமேஷ் பாபு ரஜினியை தெய்வமாகவே கொண்டாடுபவன். டிடியில் அண்ணாமலை போட்டபோது, சுத்த பத்தமாக குளித்து பட்டையடித்து, விளம்பரத்துக்கு கூட அசையாமல் அவன் படம் பார்த்ததைப் பார்த்து திகைத்துப் போயிருக்கிறேன். அதற்குமுன் குறைந்தது 50 முறையாவது அந்தப் படத்தை அவன் பார்த்திருப்பான். அவனே ஆச்சரியப்படும் ரஜினி ரசிகன் ஒருவனும் அருப்புக்கோட்டையில் இருந்தான். முத்துக்குமார். அருணாச்சலம் படத்தை அந்தப் படம் ஓடிய 45 நாட்களும் குறைந்தது ஒரு ஷோவாவது பார்த்தவன். படத்தின் ஆரம்பத்தில் வரும் பொன்னம்பலத்தின் பஞ்சு டயாலாக்கான “நாலு கொலை, ஏழு ……, பண்ணின அம்பலம், பொன்னம்பலம்” தைக்கூட மனப்பாடம் செய்தவன்.  அவனுக்கும் கூட அருணாசலம் பற்றிய அதிருப்தி இருந்தது. எனவே படையப்பாவை, பத்தாண்டு ஜெயிலில் இருந்தவன் ரிலீஸை எதிர்பார்ப்பதைவிட அதிகம் எதிர்பார்த்தான். படையப்பா பற்றி எந்த செய்தி எந்தப்பத்திரிக்கையில் வந்தாலும், அதை வாங்கிவிடுவான். பாடல்கள் வெளியான தினத்தன்று , தெருவையே அலறவிட்டார்கள் இருவரும் சேர்ந்து. இந்நிலையில் என் தந்தையின் பணி மாறுதல் காரணமாக நாங்கள் கோவைக்கு குடிபெயர்ந்தோம். எங்கள் குடும்பம் அந்த நேரத்தில் சில பிரச்சினைகளால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வுற்று இருந்தது. செல்போன் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத காலம். திடீரென்று ஒருநாள் ரமேஷும், முத்துக்குமாரும் என்னைப் பார்க்க வந்தார்கள். ரெண்டு மாசமாச்சு, பார்த்து அதான் வந்தோம் என்றார்கள். உண்மையிலேயே நான் அன்றிருந்த நிலைக்கு கடவுள்களே நேரில் வந்தது போல் இருந்தது. என் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டி போக வர என்று அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். ஆறுதலும் சொன்னார்கள். மூன்று நாள் கழித்து அவர்கள் கிளம்புகிறோம், நாளன்னிக்கு படையப்பா ரிலீஸ் என்று சொன்னார்கள், என் தந்தை, இன்னும் நாலு நாள் இருந்திட்டுப் போங்கப்பா. இங்கயே படையப்பா பாருங்களேன் என்றார். மதுரை, திண்டுக்கல், விருதுநகரில் எல்லாம் தலைவர் படம் ரிலீஸைப் பார்த்திருக்கோம். கோயம்புத்தூர்ல பார்த்தது இல்லை, பார்த்துடுவோம் என அவர்களும் உற்சாகமானார்கள். கோவையில் ராகம் தியேட்டரிலும், நடிகை அம்பிகாவுக்கு ஒரு காலத்தில் சொந்தமாயிருந்த அம்பாலிகா காம்ப்ளக்ஸிலும் படம் வெளியானது. ஒரு பட்டாலியனே வந்து கியூவை மேனேஜ் செய்ய வேண்டியிருந்தது. உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு படம் முதலில் பிடிக்கவில்லை. என்னடா இது பயங்கர பிற்போக்குத்தனமா இருக்கே என நினைத்தேன். ஆனால் 50 நாட்கள் ஆகியும் ராகம் தியேட்டரில் சனி, ஞாயிறுக்கு டிக்கட் வாங்குவது பெரிய விஷயமாக இருந்தது. படையப்பா படத்தின் வெற்றி என்பது சாதாரணமானது அல்ல என இன்றுவரைக்கும் அந்தப் படம் காட்டிக்கொண்டேயிருக்கிறது. சிவாஜி படம் ஓடி முடிந்த போது, கே எஸ் ரவிகுமாரிடம் அதைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார், “உணமையில் படையப்பா படத்தை சிவாஜியை விட அதிகமானோர் பார்த்துள்ளார்கள். இது டெய்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட் பார்த்தால் தெரியும் என்றார்”. மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால் கோவை புறநகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் நூறு நாட்களுக்கு பின்னர் படையப்பாவை திரையிட்டார்கள். இரண்டு வாரம் ஹவுஸ்புல். மூன்றாம் வார முதல் நாள் வெள்ளிக்கிழமை மாலைக் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் நூறு பேருக்கு மேல் திரும்பினார்கள். என்னய்யா இந்தப் படம் இந்த ஓட்டம் ஓடுது என்று தியேட்டரைச் சுற்றியுள்ள கடைக்காரர்கள் பேசிக்கொண்டதைப் பார்த்து, ஏரியா ரஜினி மன்ற நிர்வாகி, ஒரு மூட்டை மிளகாயை வாங்கி வந்து, நெருப்பில் போட்டு படத்திற்கு திருஷ்டி கழித்தார். ஏரியாவே கமறி விட்டது. அகில உலகிலேயே ஒரு திரைப்படத்திற்கு திருஷ்டி கழிக்கப்பட்ட நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும். அப்போது எங்கள் தெருவில் இருந்த சிலர், திருப்பதிக்கு போனார்கள். திரும்பிவந்த அவர்கள், இங்கதான் கூட்டம் அம்முதுன்னா, அங்க நரசிம்மான்னு டப் பண்ணியிருக்கான், அத விட கூட்டம் என்று சிலாகித்தார்கள். படையப்பா கூல் ட்ரிங்ஸ், படையப்பா சோப்பு என ஏராளமான லோக்கல் மார்க்கெட்டுகு தயாராகும் பொருட்கள், எல்லா காலேஜ் பங்சன்களிலும் மைம் பண்ணுபவர்கள், மாணவன் திருந்தி படிக்க ஆரம்பித்துவிட்டான் என்பதைக் குறிக்க போடும் “வெற்றிக் கொடு கட்டு” பாடல் என சொல்லிக் கொண்டே போகலாம். சன் குழுமத்திற்கு பெரும் செல்வத்தை கொடுத்த படையப்பா, அந்தப் படத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நல்லதையே கொடுத்தது. இப்போது யோசித்துப் பார்த்தால் இந்தப் படம் தமிழகம் முழுவதுமே ஒரு நல்ல வைப்ரேசனை ஏற்படுத்தியது என்றே சொல்லத் தோணுகிறது. படம் வெளியாகி 60 நாட்கள் சென்றிருக்கலாம். என் அம்மாவின் அக்கா, அவரை பார்ப்பதற்காக வந்திருந்தார். இருவரும் தற்போதைய தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்தில் பெரியகுளத்தில் இருந்த ரஹீம் தியேட்டருக்கு வண்டி கட்டி சென்று படம் பார்த்தவர்கள், எம்ஜியார் மற்றும் சிவாஜியின் ரசிகைகள். அடுத்த காலகட்ட நடிகர்களில் ரஜினியை மட்டுமே அவர்களுக்குப் பிடிக்கும். அந்த வாரம் அவர்கள் இருவரையும் மாலைக்காட்சி படையப்பா படத்திற்கு அழைத்துச் சென்றிருந்தேன். லயித்து படம் பார்த்தார்கள். படம் முடிந்து தியேட்டர் அருகேயிருந்த மெஸ் ஒன்றிற்கு சாப்பிடப் போனோம். என் அம்மா “மொதோ பாட்டில பொண்ணு மாப்பிள்ளையும் கூடச் சேர்ந்து ஆடுறதுதான் பிடிக்கல. ஆனா படம் அப்பப்பா” என்று ஆரம்பித்தார். இருவரும் படத்தைப் பற்றி சிலாகிக்க ஆரம்பித்தனர். கேட்டுக் கொண்டிருந்த சர்வர், கெட்டிச் சட்னி, பொடி என சிறப்பாக கவனிக்கத் தொடங்கினார். எதிரில் ஒரு ஆட்டோக்காரர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எங்களுடனே வெளிவந்த அவரிடம், டாடாபேட் போகணும் என்றேன். 65 ரூபா வாங்குவேன், நீங்க 40 கொடுங்க, என்று சொன்னார். வீட்டிற்கு வந்தும் அவர்கள் சிலாகிப்பு நிற்கவில்லை. என் பெரியம்மா சில வருடங்கள் முன்புதான் கணவனை இழந்திருந்தார். சொத்து பிரச்சினை ஒன்றில் ஏமாற்றப்பட்டதாக/ஏமாந்ததாக நம்பும் குடும்பம். நம்ம சொத்து நம்மளைவிட்டுப் போகாது, பிள்ளைக கொண்டுவந்து சேர்த்திடும் என்று படையப்பாவை உதாரணமாக காட்டி பேசினார். நீ கவலைப் படாதடி, உன் பிள்ள இருக்கான், ரஜினி மாதிரி, அவன் பார்த்துக்கிடுவான் என்று தேத்தினார்.  அடடா நாம ரஜினி ரசிகனா இருந்திருக்கலாமே என என்னை இரண்டாவது முறையாக எண்ண வைத்தது என் அம்மாவின் முகத்தில் தோன்றிய நிம்மதி.
தமிழ்
57
186
697
65.9K
Pixelated Pigeon
Pixelated Pigeon@top2bot15·
@_makeanoffer @AjayRenald பாஸ்.. நீங்க கமெண்ட் பண்ணாலே குதர்க்கமாக தான் பண்ணுவீங்க.. 😂😂😂.. எவன் பொண்டாட்டி எல்லாம் பத்தினியோ.. அவன் கண்ணுக்கு தான் கடவுள் தெரிவார்.. அப்படிங்கற மாதிரி உங்க கமெண்ட் இருக்கு. 😂😂😂
தமிழ்
1
0
0
32
Make An Offer
Make An Offer@_makeanoffer·
@AjayRenald @top2bot15 குல தெய்வ வழிபாடு நம்பிக்கை உள்ளவங்களுக்கு படம் கனெக்ட் ஆகும்.
தமிழ்
2
0
2
54
Pixelated Pigeon
Pixelated Pigeon@top2bot15·
இன்னும் "காந்தாரா" படத்தையே பார்க்கவில்லை அப்படிங்கறவங்க, யாராவது இருக்கீங்களா?
Pixelated Pigeon tweet media
தமிழ்
7
1
25
8.1K
Pixelated Pigeon
Pixelated Pigeon@top2bot15·
@AjayRenald பல தடவை முயற்சி பண்ணேன். முடியல.
தமிழ்
1
0
0
41
Nanban
Nanban@AjayRenald·
@top2bot15 படம் பாத்து உங்களுக்கு பிடித்து இருக்கா சொல்லுங்க..?
தமிழ்
1
0
1
49
Pixelated Pigeon
Pixelated Pigeon@top2bot15·
@ksrajabe அது என்னவோ பார்க்கவே பிடிக்கலை.
தமிழ்
1
0
3
148
Raja Cine Talks
Raja Cine Talks@ksrajabe·
Nalla இருக்குமே 🤔 Movie Review – காந்தாரா 🎬 “மனிதன் தான் கடவுள், கடவுள் தான் மனிதன்” – இந்தக் கருத்தை காந்தாரா முழுக்க உயிரோடு காட்டுகிறது. கடவுள் மனிதனிடம், “நான் சொன்னதை நிறைவேற்றினேன்… நீயும் சொன்னதை நிறைவேற்று” என்று கேட்பது போல, தன்னை நம்பிய மக்களை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் இந்தக் கதையின் மையம். மலைவாழ் மக்களுக்கு அவர்களுக்கென ஒரு கடவுள். அந்தக் கடவுள் என்னோடு வர வேண்டும் என்று ஒரு மன்னன் கேட்க, கடவுள் பதிலாக: “என் மக்களுக்கு என்ன தருவாய்?” என்று கேட்கிறார். அதற்கு மன்னன் தன் நிலங்களை கொடுப்பதாக உறுதி தருகிறான். ஆனால் பேராசை கொண்ட மனிதன் அங்கேயே தன் முகம் காட்டுகிறான்—அடுத்த தலைமுறை வாரிசுகள் மீண்டும் அந்த நிலங்களை கேட்க வருகிறார்கள். படத்தின் சுவாரஸ்யம் என்னவென்றால் – மனிதர்கள், அரசு, கோ… இவையெல்லாம் சேர்ந்து எப்படி அந்தக் கிராம மக்களை கடவுள் காப்பாற்றினார் என்பதுதான். படம் முழுக்க அந்தக் கிராம மக்களுடன் சேர்ந்து வாழும் அனுபவம் கிடைக்கிறது. கமல் ஹாசன் சொல்லுவார் போல “சினிமாவே ஒரு மொழி” – அதுபோல கன்னடம், துளு சில இடங்களில் பேசினாலும் நமக்கு புரியாமலே அந்த vibe-ஐப் பிடிக்க முடிகிறது. கன்னட மக்களின் விளையாட்டு, அவர்கள் சாமி வழிபடும் முறை – தமிழ்நாட்டில் நாமப் பார்க்கும் கலாசாரங்களோடு ஒத்துப்போகும் மாதிரி இருப்பதால் படம் இன்னும் நெருக்கமாகக் கொள்கிறது. இறைநம்பிக்கை உடையவர்கள் படம் பார்க்கும்போது – தங்கள் சிறுவயதில் கேட்ட கதைகள், கண்ட மனிதர்கள், எல்லாம் கதாபாத்திரங்களாக உயிரோட வருவதை உணர்வார்கள். குறிப்பாக இறுதி காட்சி – மெய்சிலிர்க்க வைக்கும் அளவுக்கு powerful. கடவுளின் உடல் மொழி, கிராம மக்களை அரசிடம் ஒப்படைத்து விடுவது போல அமைந்திருக்கும் அந்தக் காட்சி – மயிர் கூச்சரிக்கும் (goosebumps) தருணம். படம் முடிந்து வெளியே வரும் போது அந்த தாக்கம் இன்னும் சில நேரம் மனதில் நீடிக்கும். கொசுறு தகவல் 😄: Night show பார்த்துவிட்டு பைக்கில் போய்க்கொண்டிருந்தேன். 7–8 நாய்கள் பக்கம் வந்தது. நான் ஒரு “ஓஓஓஓஓஓம்ம்ம்…” என்று காந்தாரா style-ல கத்தினேன். நாய்கள் எல்லாம் தெறிச்சு ஓடிப் போனது! 😲😀😂
தமிழ்
1
0
1
188
Pixelated Pigeon
Pixelated Pigeon@top2bot15·
@AjayRenald உங்களுக்கு பிடிக்கவில்லையா.. 😂😂
தமிழ்
1
0
0
143
Nanban
Nanban@AjayRenald·
@top2bot15 தியேட்டரில் அடி வாங்கியவன்...கூட 3 பெற கூட்டி போய் அவங்க கிட்டயும் அடி வாங்கியவன்
தமிழ்
2
0
2
221
Pixelated Pigeon
Pixelated Pigeon@top2bot15·
அனைத்து பொருத்தங்களும் இருந்தாலும், ஏனோ பெரிய அளவில் ஹீரோயினாக ஜொலிக்க முடியவில்லை...
தமிழ்
0
0
2
665
Pixelated Pigeon
Pixelated Pigeon@top2bot15·
இதுல என்னோட ஃபேவரைட் டைரெக்டர் ஷங்கர் தான். உங்களோட ஃபேவரைட் யாருன்னு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!
Pixelated Pigeon tweet media
தமிழ்
2
0
5
2.2K
Pixelated Pigeon
Pixelated Pigeon@top2bot15·
பவித்ரனும் தமிழ் சினிமாவும்.. தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் வந்தார்கள் வென்றார்கள், அந்த வகையில் பலர் வந்து போனாலும் ஒரு சில இயக்குநர்களின் உதவி இயக்குநர்கள் பெரிய இயக்குநர்களாக முன்னேறியுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் பவித்ரன், இவரின் உதவி இயக்குநர்கள் மற்றும் இவரால அறிமுகம் செய்ய்ப்பட்டவர்களை பற்றி பார்ப்போம்.👇
Pixelated Pigeon tweet media
தமிழ்
1
14
64
15.5K