
Prashan Ram
19.5K posts














நாளை நீட் தேர்வு மீண்டும் ஒரு முறை. தேர்வு எழுதுபவர்கள் மாணவர்களா குற்றவாளிகளா? பொது நல வழக்கு தொடுக்க நான் தயார்!! உதவுவீர்களா!! இந்த தேர்வில் குழப்பம் பற்றியும் இந்த தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பது பற்றியும் பல அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த தேர்வு நடத்தும் முறையைப் பற்றி யாரு பேசுவதாகத் தெரியவில்லை. மாணவர்களின் அக்கறையில் நலம் விரும்பிகள் என்று காட்டிக் கொள்பவர்கள், அந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்லும் பொழுது "அலங்கோலமாக" செல்லும் காட்சியை எவ்வளவு பேர் பார்த்திருக்கிறீர்கள்!! புடவை கட்டிச் செல்லக் கூடாது, துப்பட்டா போடக் கூடாது, தலையில் ரிப்பன், ரப்பர் பேண்ட் போடக் கூடாது, தலையை விரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும், பின்னல் கூடாது, நீளமான மேலாடை உடுத்தக் கூடாது (சுடிதார்), முழுக்கை சட்டை கூடாது, சட்டையில் எதுவும் எழுத்து இருக்க கூடாது, கைகடிகாரம் கூடாது, நகை கூடாது, தாலி கூடாது, மோதிரம் கூடாது, தோடு, கொலுசு கூடாது, எந்த ஆபரணமும் இருக்க கூடாது, என்று பெண் குழந்தைகள், குறிப்பாக இந்து மத பெண் குழந்தைகள் ஆளாகும் இன்னல்களை நேரில் பார்த்தால் புரியும். தலைக்கு பின்னல் பின்னி இருந்தால் அதை விரித்துவிட வேண்டும். ரப்பர் பேண்ட் போட்டிருந்தால் அதை தூக்கி எறிந்து விடுவார்கள். இந்து பெண்கள் சேலையில் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் ஒரு நாள் முன்பே வந்து அதற்கான சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஆனால் இசுலாமிய பெண்கள், ஹிஜாப் உடன் செல்லலாம். மாதவிடாயில் இருக்கும் பெண்கள் மாத்திரை எடுத்துச் செல்ல தடை ஆனால் இதை எல்லாம் எழுத்துவடிவத்தில் எங்கும் இருப்பதில்லை. அந்ததந்த மையத்தில் ஆளாளுக்கு தோன்றுவதை "சட்டம்"ஆக செய்கின்றனர். அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் தங்கி போக வசதிகள் கிடையாது. நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான். அங்கே செல்பவக்ரள் அத்தனை பேரும் ஏதோ "ஏமாற்றுப் பேர்வழிகள்" போலவும் "குற்றவாளிகள்" போலவும் தோற்றத்தை உருவாக்கும் செயல்களை பார்க்கலாம். ஆனால் திருட்டுத்தனம் செய்ததோ, அதிகாரிகள். அதனால்தானே இரண்டாவது முறையாக தேர்வு!! @NTA_Exams நீதிமன்றங்களுக்கு இதை எடுத்துச் செல்ல ஒருவரும் முன் வருவதில்லை. ஏனென்றால் பெற்றோருக்கு பயம். குழந்தையின் எதிர்காலம் போய்விடுமோ என்று பயம். ஆதாரம் என்று எதுவும் இல்லாததால், நீதிமன்றம் போனால் "கண்ணைக் கட்டிய நீதி தேவதை" என்ன சொல்லுமோ என்று ஒரு அச்சம். தமிழ்நாட்டில் இது நடக்கிறது. மற்ற மாநிலங்கள் நிலை தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். இந்த விஷயத்தை ஏதாவது ஒரு அரசியல்வாதி பேசி இருப்பானா என்ன? தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் தேர்விற்கு முன் மன உழற்சிக்கு ஆளாக்கப்படுத்துவது குறித்து ஒரு பொறம்போக்கும் பேசுவதில்லை. அரசியல்வாதியை விடுங்க. ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டு, "இந்துக்களின் பாதுகாவலன்", "இந்துக்களுக்கு அநீதி", "இந்துக்களை மதமாற்றம் செய்கின்றனர்" என்று ஒரு நாளைக்கு 1000 முறை கூவும் ஒரு பொறம்போக்கும் இது பற்றி மூச்சு விடுவதில்லை. ஜெய் ஶ்ரீ ராம்! பின் குறிப்பு: இது குறித்து தேர்வு எழுதும் பெற்றோர் ஒவ்வொருவரும் ஒரு கடிதத்தை மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி, அதன் நகலை எனக்கு அனுப்பினால், இது குறித்து பொது நல வழக்கை நான் தொடுக்க தயாராக உள்ளேன்!! இந்த வருடம் 1.4 லக்ஷம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். அதில் ஒரு 1%, அதாவது 1400 பேர் தங்கள் குறைகளை மத்திய அரசுக்கு எழுதி அனுப்ப தயாராக இருந்தால், அந்த கடிதத்தை நானே டிராப்ட் செய்து அனுப்புகிறேன். என்னை டி.பி-யில் தொடர்பு கொள்ளுங்கள்!!









பச்சையா புளுகுறானே இந்த பத்து சீட்டு யுட்யூபர் @RangarajPandeyR புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஒரு பாடசாலை ஆண்டுவிழா நிகழ்ச்சியில் இந்த ஆள் வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் அதை நடத்தும் ஏழை பிராம்ஹணர்கள். அதற்கு என்னையும் அழைத்திருந்தனர். அதில் கலந்து கொள்ள வாய் கூசாமல் ஒரு லக்ஷ ரூபாய் கேட்டுவிட்டு "I am not interested in economics" என்கிறானே?!! அடப்பாவி. அந்த நிகழ்ச்சியில் நானும் இந்த ஆளும் சேர்ந்து ஒரே மேடையில் பேச வேண்டும் என்று அந்த பாடசாலையினர் விருப்பப்பட்டனர். "ரங்கராஜ்ஜியம்" என்று தலைப்பிட்டனர். எனக்கு ஆக்ஷேபணை இல்லை. ஆனால் இந்தாள் அரசியல்வாதியாயிற்றே. என்னுடன் ஒரு மேடையில் இருக்க ஏதாவது மறுப்பாரோ என்று நானே கேட்டேன். அதற்கு "பணம் குடுத்தீங்கன்னா குட்டிகரணம் கூட போடத் தயார்" என்றான். இப்ப என்னடன்னா "I am not adamant about money" என்று ஆங்கிலத்தில் புலுத்துகிறானே! ஒரு வேள சினிமாக்காரங்க கிட்ட காடு வாங்க மாட்டாரோ என்னவோ! ஜெய் ஸ்ரீ ராம்! நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பத்திரிகை அடித்த பின் பணம் கேட்டான். அவர்கள் தலையில் இடி விழுந்தது போலாயிற்று. என்னிடம் என்ன செய்வது என்று தெரியாமல் வருத்தப்பட்டு கலங்கிப் போனார்கள். ஏதாவது குறைத்துக் கொள்வாரா என்று கேட்கலாமா என்றார்கள். சரி கேட்ப்பதால் தவறில்லை என்று அவர்களை வைத்துக் கொண்டு கேட்டபோது "நான் வேலைய விட்டுட்டேன். இப்படி நிகழ்ச்சிக்கு போய் சம்பாதிப்பதை வைத்துத்தான் குடும்பம் நடத்த வேண்டும். சேனலில் லாபமில்லை" என்று மூக்கால் அழுது கேட்ட எங்களை ஏண்டா கேட்டோம் என்கிற நிலைக்கு தள்ளினான். நானும், "குடும்பஸ்தன். பணமில்லாமல் நாட்டில் யாரும் வர மாட்டார்கள்" சரி தொலையுது போ என்று அந்த பணத்தை நான் கொடுத்தேன். நிகழ்ச்சி நடக்கட்டும் என்றேன். இப்ப என்னமா புருடா விடுகிறான்?!! நல்லா வருவீங்கடா!!! ஜெய் ஸ்ரீ ராம்!











உப்பு மணல் காரணமாக பட்டுப்போன ஈச்ச மரங்கள்..! சென்னை மெரினாவை அழகுபடுத்த நீலக்கொடி கடற்கரை திட்டத்தில் நடப்பட்டு பட்டுப்போனதால் வேரோடு பிடுங்கி அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்.. #Chennai | #MarinaBeach | #Treefall | #MunicipalCorporation | #PolimerNews





